சூர்யாவின் 44வது கதையின் புதிய அப்டேட்

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைத்தும் உள்ளார்.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதோடு, இந்த ஆண்டுக்குள் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமும் இதுவாகும்.

சூர்யாவின் 44 வது படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதோடு, இதன் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சூர்யா நடிக்க உள்ள 44வது படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி  உள்ளன

அதன்படி சூர்யாவின் 44வது படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும், இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுவும் சரித்திர கதை அம்சம் கொண்ட அட்வெஞ்சர் படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சூர்யாவின் 44வது படத்தை நடித்து முடித்த பிறகு சுதா கொங்கார இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் படங்களில் சூர்யா நடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img