2 படங்களையும் முடித்துவிட்ட கார்த்தி..

Published:

டிகர் கார்த்தி தற்போது தான் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ‘வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தான் நடித்த மூன்று திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம்,’ தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் ஆகிய இருவரும் வேறு படங்களில் உள்ளதால் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ’சர்தார் 2’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் திரை உலக பயணத்தில் ’சர்தார்’ ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img