மீண்டும் சீதாவை அடித்த அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல்

Published:

இன்றைய சிறகடிக்க ஆசை தொலைக்காட்சி தொடரில் என்ன நடக்க போகிறது என பார்ப்போம்.

செல்வம் கார் அருண் அம்மா மீது மோதியதால் அவர் மரணமடைந்தார். தனது அம்மாவின் மரணத்திற்கு காரணம் செல்வம் மட்டுமல்ல முத்துதான். முத்து சொல்லித்தான் செல்வம் இப்படி செய்திருக்கிறான் என அருண் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

செல்வம் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கவேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என வக்கீல் முன் அருண் கூறியிருந்தார். அதன்பின், செல்வம் ரூ. 1.60 லட்சம் தயார் செய்துவிட்டார். மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், முத்து தனது இரண்டு கார்களில் ஒன்றை சத்யா வேலை பார்க்கும் இடத்தில் அடகு வைத்துவிட்டார்.

செல்வம் ரூ. 5 லட்சத்தையும் அருணிடம் கொடுத்துவிட்டார். வீட்டிற்கு பணத்துடன் வந்த அருணிடம் ‘செல்வம் அண்ணனால் பணத்தை ரெடி பண்ண முடியவில்லை, முத்து மாமாதான் காரை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார்’ என சீதா கூறுகிறார்.

முத்துவிற்கு ஆதரவாக சீதா பேசியதால் ‘என்னை விட உனக்கு உங்க அக்கா, மாமா, செல்வம்தான் முக்கியமா? என்று கேட்டு கடுப்பான அருண், மீண்டும் தனது மனைவி சீதாவை அடித்தார். ஏற்கனவே அருண் தன்னை அடித்ததை தனது அக்காவிடம் சீதா கூறியிருந்தார்.

ஆனால், முத்துவிடம் இருந்து இந்த விஷயத்தை மறைத்துவிட்டனர். தற்போது மீண்டும் சீதாவை அருண் அடித்துள்ள நிலையில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை சிறகடிக்க ஆசை சீரியலில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img