கதறி அழுதும் கருணை காட்டாத கொடூரர்கள்..!

Published:

நடிகை தீபா சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு படுமோசமாக ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கதறி அழுதும் கொடூரர்கள் அவர் மீது கருணை காட்ட வில்லை என்றும் கூறப்படுகிறது.

திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதன் மூலம் பிரபலமான தீபா, குக் வித் கோமாளி சீசன் 2 ,மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உட்பட சில விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார்.

மேலும் மெட்டி ஒலி, மலர்கள், கோலங்கள், கார்த்திகை பெண்கள், வாணி ராணி, சரவணன் மீனாட்சி, செந்தூரப்பூவே உள்பட பல சீரியல்களில் நடித்த அவர்  தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.

அதேபோல் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவர் ’மாயாண்டி குடும்பத்தார்’ ’கடைக்குட்டி சிங்க’ம் ’டாக்டர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ’இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை சிலர் அணுகியதாகவும் முதன் முதலாக வெளிநாட்டு பயணம் என்பதால் தீபா சம்மதம் தெரிவித்து ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் பேசப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் துபாய் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்த நிலையில் அவருக்கு பேசிய தொகையை விட பாதி மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை கேட்டு அவர் கிட்டத்தட்ட கதறி அழுதும் கூட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொடூரர்கள் கருணை காட்டவில்லை என்றும் அந்த பணத்தை தன்னால் வாங்கவே முடியவில்லை என்றும் தீபா தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img