ராதிகா கர்ப்பம் கன்ஃபார்மா?

Published:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், குழந்தையை பற்றி பேச வேணாம் என்று எழில் சொல்ல, நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் நான் எல்லார்கிட்டயும் சொல்லுவேன் என ஈஸ்வரி சொல்லுகிறார். மேலும் சின்ன வயசுலயே குழந்தை பெற்றுக் கொள்ளனும் சீக்கிரம் எங்க வீட்டுல குழந்தை சத்தம் கேக்கணும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

அந்த நேரத்தில் உடனே ராதிகா வாந்தி எடுக்க கோபி என்ன ஆச்சு என கேட்கிறார். மேலும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது ஒத்து வரல போல என சொல்லி யோசிக்கிறார்.

மறுப்பக்கம் செழியன் ரூமுக்கு போகவே பயப்பட, எழில் அவரிடம் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும், ஜெனிக்கு நம்பிக்கை கொடு. எல்லாம் சரியாயிடும் என சொல்லி அனுப்புகிறார்.

இதைத் தொடர்பு ராதிகா இரவெல்லாம் வாந்தி எடுக்க, அவரை மெடிக்கல் ஷாப்புக்கு அழைத்துச் செல்கிறார் கோபி. ஆனாலும் ஹாஸ்பிடல் போகலாமா என்று கோபி கேட்க, முதலில் மெடிக்கல் ஷாப் போகலாம் என்று ராதிகா சொல்லுகிறார். அதன்பின் ஈஸ்வரி இடம் விஷயத்தை சொல்லிவிட்டு மெடிக்கல் ஷாப்புக்கு கிளம்பி போக, அங்கு மெடிக்கல் ஷாப் மூடி இருக்குது என்று கோபியை திட்டுகிறார் ராதிகா.

நாளை எபிசோட் ராதிகா கர்ப்பமாக இருப்பது கன்ஃபார்ம் ஆகிறது. இதனால் கோபி முதலில் சந்தோஷப்படுகிறார் ஆனால் பிறகு அதிர்ச்சி அடைகிறார்.

Related articles

Recent articles

spot_img