இப்படடி காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்

Published:

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் கடைசியாக பைட்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் சிங்கம் அகைன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

போலீஸ் உடையில் இருக்கும் நடிகை தீபிகா படுகோன், ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னது தீபிகா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாரா என ஷாக்காகியுள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிங்கம் அகைன் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.

ஆனால் ரசிகர்களோ, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளில் கர்ப்பமாக இருக்கும்போது நடிக்கிறாரா என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related articles

Recent articles

spot_img