9.3 C
New York

ராதிகாவால் கோபிக்கு வந்த சிக்கல், ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த ஷாக் ‌‌- பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Published:

ராதிகாவால் கோபிக்கு அடுத்தடுத்த சிக்கல் உருவாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து பேச இனியா கோபப்பட்டு வெளியே வர கோபி தடுக்க மொட்டை மாடிக்கு போறேன் என சொல்லி மேலே வருகிறார்.

மேலே தாத்தா ராமமூர்த்தி இனியாவை சமாதானப்படுத்த வர இனியா தாத்தாவை பிடித்துக் கொண்டு கண்கலங்கி அழுகிறார். பிறகு மேலே வரும் கோபி இனியாவிடம் நீ ஏதோ ஒரு பையன் கூட பேசிட்டு இருக்கவே ராதிகா கோபப்பட்டா, அவ உன் மேல இருக்க அக்கறையில் தான் அப்படி நடந்துக்கிட்டா அவளுக்கு அது டியூஷன்ல படிக்கிற பையன்னு தெரியாதுல என சொல்ல தெரியலன்னா யாருன்னு கேட்கணும் நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்துட்டீங்க என இனியா சொல்ல கோபி ஷாக் ஆகிறார்.

மேலும் அன்னைக்கு அம்மா கூட எங்க ரெண்டு பேரையும் ரோட்ல வச்சு பார்த்தாங்க, திட்டுவாங்கன்னு நினைச்சேன் ஆனா அவங்க யாரு என்னன்னு விசாரிச்சு நல்லபடியாத்தான் பேசினாங்க, வீட்டுக்கு கூப்பிட்டு நல்லபடியா சாப்பிட வச்சு அனுப்புனாங்க அம்மாவுக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொன்னாங்க. ஆனா நீங்க அப்படி இல்ல இவங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டீங்க உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை என சொல்லி இனியா கீழே செல்கிறார்.

உடனே ராமமூர்த்தி இந்த வயசுல கல்யாணம் வேண்டாம் பிள்ளைகளோட எதிர்காலத்தைப் பாருன்னு அன்னைக்கு அடிச்சுகிட்டேன், என் பேச்சைக் கேட்டியா? இன்னைக்கு நல்லா அனுபவிக்கிற நீ இன்னும் அனுபவிப்ப அதை நான் பார்க்க தான் போறேன். இந்த வயசான காலத்துல இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ என திட்டி அவரும் அங்கிருந்து நகர்கிறார்.

மறுபக்கம் பாக்யா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது செல்வி சுடிதார் வந்துடுச்சு என எடுத்து வந்து கொடுத்து நான் போட்டு பார்த்தேன் எனக்கு சரியா இருக்கு என சொல்கிறார். பாக்கியா சுடிதார் எப்படி போட்டுட்டு போறது என யோசனையில் இருக்க அமிர்தா மற்றும் ஜெனி உள்ளிட்டோர் பாக்யாவை கூல் செய்கின்றனர். பிறகு எழில் நாளைக்கு நிலா பாப்பா பிறந்தநாள் என சொல்ல இதைக் கேட்டதும் அமிர்தாவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம் நிலா பாப்பா பிறந்தநாளை பெருசா செலிப்ரேட் பண்ணலாம் என பிளான் போடுகின்றனர்.

அடுத்து ராதிகா இனியாவை சாப்பிட கூப்பிட எனக்கு சாப்பாடு தேவை இல்லை என இனியா கோபமாக சொல்ல கோபியும் சாப்பிட கூப்பிட அப்போதும் இனியா சாப்பாடு வேண்டாம் என சொல்கிறார். நீ சாப்பிடலனா நானும் சாப்பிட மாட்டேன் என சொல்ல நீங்க சாப்பிடாதீங்க டாடி என இனியா ஷாக் கொடுக்கிறார். பிறகு இங்க சாப்பிடாம இருக்கிற அளவுக்கு ஒன்னும் பெரிய பிரச்சனை எதுவும் நடக்கல அவளுக்கு பசிக்கும்போது அவ சாப்பிடுவா, நீங்க வாங்க என ராதிகா கோபியை கூப்பிட ராமமூர்த்தி நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் அவளை சாப்பிட வைக்கிறேன் என சொல்லி இனியாவை சாப்பிட வைக்கிறார்.

அடுத்து கோபி இனியா வருத்தத்தில் இருப்பதால் சாப்பிட முடியாமல் எழுந்து வந்து விடுகிறார். மீண்டும் இனியாவிடம் பேச இனியா கோபத்தோடு எழுந்து வெளியே வந்து விடுகிறார். பிள்ளைகளோட எதிர்காலத்தை நினைத்து பார்க்காம உன்னோட சந்தோசம் தான் முக்கியம் என்று கல்யாணம் பண்ணல அனுபவி என ராமமூர்த்தி திட்டி செல்கிறார்.

அடுத்து மறுநாள் செல்வி சுடிதாரில் வர அனைவரும் ஆச்சரியப்பட பாக்யா சுடிதார் அணிந்து அமிர்தாவுக்கு பின்னால் மறைந்து கொண்டு வர பிறகு பாக்யாவை சுடிதாரில் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு பாராட்டுகின்றனர். எழில் நானே போட்டோ எடுத்துக்காட்டுறேன் அவ்வளவு அழகா இருக்கீங்க என சொல்லி பாக்கியாவை போட்டோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 

Related articles

Recent articles

spot_img