தவறான செய்தி பரப்பாதீர்கள் : கல்யாணி கோபம்

Published:

அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. சில சீரியகளிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட கல்யாணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த காலகட்டத்தில் நான் மன உளைச்சலுடன் இருந்தேன். கணவர் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் உடல் உபாதையால் அவதிப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை வைத்து சிலர், நடிகை கல்யாணி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பது போன்று மார்பிங் செய்த போட்டோக்களை பதிவிட்டு தவறான தகவல்களை பரப்பி வந்தார்கள். இதையடுத்து உடனடியாக இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள நடிகை கல்யாணி, இன்னொருவரின் உடலில் என்னுடைய முகத்தை மார்பிங் செய்து தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். நான் உடல் நலம் இல்லாத போது மனரீதியில் எனது பிரச்சனை குறித்து தான் பேசியிருந்தேன். ஆனால் என்னை பற்றி தவறான வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தயவு செய்து இது போன்ற செய்திகளை யாரும் சோசியல் மீடியாவில் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை கல்யாணி.

Related articles

Recent articles

spot_img