Home Blog Page 14

ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு..

0

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்தார்.

கோமாளியை விட இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அறிமுக ஹீரோவின் திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததா என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

லவ் டுடே வெற்றிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தன்னுடைய அடுத்த புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று பிரதீப் – அஸ்வத் மாரிமுத்து படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.

https://x.com/pradeeponelife/status/1787040646358057057 

 

மொட்டை மாடி நீச்சல் குளத்தில் டிடி.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டல் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ’காபி வித் டிடி’ ‘ஜோடி நம்பர் ஒன்’ ’சூப்பர் சிங்கர்’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி சில பிரபலங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை அதில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் துபாய் சென்ற நிலையில் அங்குள்ள பல புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் தற்போது அவர் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார்.

அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள மொட்டை மாடி நீச்சல் குளத்தில் அவர் ஜாலியாக குளிக்கும் காட்சிகள், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை அவர் ரசிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த ஹோட்டல் மாடியில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை பார்ப்பது தனது இதயத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் வானம் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த கட்டிடத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் இந்த பயணம் தனக்கு என்றும் மறக்க முடியாத ஒரு பயணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். டிடியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C6gZ8gxyQlb/?utm_source=ig_web_copy_link 

 

மீண்டும் இணையும் ‘ஜோ’ நாயகி..

0

ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த ‘ஜோ’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் மிகப்பெரிய பார்வையாளர் எண்ணிக்கையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மிக இயல்பான காதல் கதையை இயக்குனர் ஹரிஹரன் ராம் படமாக உருவாக்கி இருந்தார் என்பதும் எமோஷனல் காட்சிகளில் ரியோ அசத்தலாக நடித்து இருப்பார் என்பதும் குறிப்பாக மாளவிகா மனோஜ், சுசி என்ற கேரக்டரில் அசத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை எடுத்து ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

சித்துக்குமார் இசையில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ‘ஜோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே ஜோடி மீண்டும் இணைவதால் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/DrumsticksProd/status/1786375177154318466

கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நயன்தாரா?

0

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் யாஷ் என்பதும் இவர் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ ஆகிய இரு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது யாஷ், ’ராமாயணம்’ என்ற படத்தில் ராவணன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

’டாக்ஸிக்’ படத்தில் யாஷ் சகோதரியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கால்சீட் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனை அடுத்து அந்த கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா, சகோதரி வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த கேரக்டரில் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதால் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா ஏற்கனவே மாதவன் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை 4 திரைவிமர்சனம்

அரண்மனை தொடரின் நான்காவது பாகம், விமர்சகர்கள் திரும்பத்திரும்பத் தாக்கிய இந்தத் தொடரில் உள்ள திரைப்படங்களைத் துண்டித்த பிறகும் அதே படைப்பாற்றல் மனப்பான்மை,கொண்ட சுந்தர் சி. ஆயினும்கூட, இந்த மனிதருக்கு எந்த பயமும் தெரியாது என்பது போல் தெரிகிறது, மேலும் தொடருக்கான பின்வருபவை உண்மையில் சரியவில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் கூட்டத்தை இழுக்க முடிந்தது. 2021 இல் சமீபத்தில் வெற்றி பெற்ற “அரண்மனை 3”, இந்தத் தொடர் பார்வையாளர்களின் விருப்பத்தில் வளர்ந்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் ராஷி கண்ணா மற்றும் தமன்னா பாட்டியாவுடன் சுந்தர் சி நடித்துள்ள “அரண்மனை 4” திரைப்படமும் குடும்ப பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும் அதே திகில் மற்றும் நகைச்சுவை கலவையாக அமைக்கப்பட்டுள்ளது. படம் ஒரு காடுகளுள்ள அரண்மனை பங்களாவில் அமைக்கப்பட்டுள்ளது, அமானுஷ்ய மர்மம், நகைச்சுவை கதாபாத்திரங்கள் மற்றும் ஒரு குடும்பம் மற்றும் ஒரு தீய சக்தியைச் சுற்றி சுழலும் நிலத்தடி பதட்டங்களின் கூறுகளை விவரிக்கிறது.

தமன்னா பாட்டியா நடித்த செல்வி, மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான மனைவி மற்றும் அவரது கணவர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் திடீரென்று வன்முறையில் ஈடுபடத் தொடங்கும் போது அவரது படம்-சரியான வாழ்க்கை அசிங்கமாக மாறும் கதையை படம் காட்டுகிறது. இதற்கிடையில், செல்வியின் சகோதரர் சரவணன், சரியாக என்ன நடந்தது என்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், இது வீட்டில் ஒரு பேய் பிரசன்னமாக மாறிய ஒரு தீய ஆவிக்கு அவரை அழைத்துச் செல்கிறது. டெல்லி கணேஷ், கோவை சரளா, மறைந்த நகைச்சுவை நடிகர் சேசு, யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் குழும நடிகர்கள் புதுப்பிக்கப்பட்டு, திரைப்படத்திற்கு கூடுதல் வேடிக்கை மற்றும் சூழ்ச்சிகளைச் சேர்த்துள்ளனர்.

இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்போது படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. திருப்பங்கள் மற்றும் பயனுள்ள நகைச்சுவையுடன் சஸ்பென்ஸ் மற்றும் ஆச்சரியத்தை புகுத்துவது மீதமுள்ள பணியாகும், மேலும் சுந்தர் சி அதை ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்கிறார். செல்வியாக தமன்னா பாட்டியாவும், மாயாவாக ராஷி கண்ணாவும் நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில், ஒரு சில காட்சிகள் க்ளைமாக்ஸுக்கு இழுத்துச் செல்வதை உணர்ந்து, “வாருங்கள், இதை சீக்கிரம் முடிப்போம்” என்ற உணர்வை ஏற்படுத்தியது, ஆனால் க்ளைமாக்ஸின் போது, ​​தொழில்துறை ஜாம்பவான்களான குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகியோர் இருப்பது எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கிறது.

“அரண்மனை 4” அதன் வெகுஜன ஈர்ப்பு மற்றும் தர்க்கத்திற்கு மேலான பொழுதுபோக்குடன் அது என்ன செய்ய விரும்புகிறதோ அதைச் செய்கிறது: இது ஜம்ப் பயம், நகைச்சுவையான உரையாடல், கலகலப்பான இசை மற்றும் விளக்கத்தை வழங்குகிறது. இது நாள் முக்கியமானதாக இல்லாமல் போகலாம், ஆனால் ஒளியை பார்க்கும் போது வெறுமனே அணைப்பதில் ஒருவர் திருப்தி அடைவது உறுதி.

இறுதியாக, அது சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அது ‘அரண்மனை 4’ இல் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட உரிமையின் மரபை அப்படியே வைத்திருக்கிறது.

அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வலுவான குழுமத்தால் நடத்தப்படுகின்றன, சுந்தர் சி நேர்த்தியாக இயக்குகிறார். அவரது பார்வை ரசிகர்களுக்கு படம் ஒரு பெரிய ஜாலி ரைடு என்று உத்தரவாதம் அளிக்கிறது. அரண்மனை 4, இன்னும் இல்லை, விரைவில் ஐந்தாவது பாகம் வரும் என்ற குறிப்புடன் அதன் பூட்சை தொங்கவிட தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எனவே, எந்த சரமும் இல்லாத பொழுதுபோக்குடன் நீங்கள் தளர்ந்துவிட நினைத்தால், “அரண்மனை 4” தான் பதில்.

“அரண்மனை 4” திகில் மற்றும் நகைச்சுவையின் நன்கு அறியப்பட்ட அதே சமயம் ரசிக்கத்தக்க கலவையை வழங்குகிறது, இது எல்லா வயதினருக்கும் முதுகுத்தண்டு சிலிர்ப்பு மற்றும் சிரிப்பை வழங்குகிறது.

அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

0

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

டாடா என்ற படம் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அப்படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி இருக்கிறார்.

இப்போது பியார் பிரேமா காதல் பட புகழ் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த படத்தில் கவின் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து கவின் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், இந்த புதிய படத்திற்காக மீட்டிங் நடந்தது உண்மைதான், எனது கமிட்மெண்ட் எல்லாம் சொல்லியிருக்கிறேன். சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறினார்கள், அதன்பிறகு எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

ஜேசன் சஞ்சய் பற்றி கூறியதாவது, விஜய் அவர்களை நாம் பெரிய அளவில் கொண்டாடி பேசுவோம், ஆனால் அவர் எதுவுமே இல்லாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார்.

அப்படி தான் ஜேசன் சஞ்சய்யும், அவரிடமும் பிரபலத்தின் மகன் என்று எந்த எண்ணமும் இல்லை. மிகவும் அமைதியான எல்லோரையும் மதிக்க கூடிய ஒருவர் என தெரிவித்திருக்கிறார் கவின்.

பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்..

0

இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் நிலையில் அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

கவின் தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். Bloody Begger என டைட்டில் வைங்கப்பட்டு இருக்கும் அதன் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்.. Bloody Beggar படத்தின் ப்ரோமோ வெளியானது | Kavin Bloody Beggar Movie Promo

https://x.com/Nelsondilpkumar/status/1786372666426831350

கவின் இந்த படத்தில் பிச்சைக்காரன் லுக்கில் நடித்து இருக்கிறார்.

 

அடுத்த லெவலுக்கு சென்ற நெல்சன்.

0

இயக்குனர் நெல்சன் அடுத்த லெவலுக்கு செல்லும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த நெல்சன் ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ’டாக்டர்’ ’பீஸ்ட்’ ‘ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’மீடியா மற்றும் சினிமா துறையில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பயணம் செய்து வருகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்த நிலையில் என்னுடைய வளர்ச்சிக்கு இந்த துறை எனக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளது.

இதையடுத்து தற்போது ஒரு புதிய திரைப்பட தயாரிப்பு கம்பெனியை தொடங்கி உள்ளேன். அந்த நிறுவனத்தின் பெயர் Filament Pictures. இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என்னவெனில் மிகவும் வித்தியாசமான சிந்திக்கும், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க உள்ளேன். எனது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் கவின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/C6bNzRAx35c/?utm_source=ig_web_copy_link 

 

 

வயிற்றில் ஊசி போட்ட மருத்துவர்.. வைரல் வீடியோ..

தனுஷ் பட நடிகை தனது வயிற்றில் மருத்துவர் ஊசி போடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் பிர்சதா. தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்பட சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள மெஹ்ரீனுக்கு 29 வயதாகும் நிலையில், திருமணம் செய்ய காலதாமதம் ஆகும் என்பதால், தனது கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு குழந்தை பெற்றுக் கொள்வது ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ள மெஹ்ரின், கால தாமதமாக திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்க தனது கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்ததாகவும் அதற்காக தான் மருத்துவரிடம் ஆலோசனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்காக நான் என்னை தயார் படுத்திக் கொண்டதாகவும் இந்த விஷயத்தை நான் பகிரலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் தன்னை போன்ற பல பெண்களுக்கு இது உதவும் என்பதால் பகிர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம் காலதாமதம் ஆகும் பெண்கள் மற்றும் குழந்தை பெறுவதை தள்ளி வைக்கும் பெண்களுக்கு இது உதவும் என்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை நம்மால் செய்ய முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனது திருமணம் இன்னும் சில வருடங்கள் தாமதம் ஆகிவிட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தான் கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்தேன் என்றும் தற்போது எனது கருமுட்டையை நான் சேமித்து வைத்துள்ளேன் என்றும் இதற்காக எனக்கு உதவியாக இருந்த என்னுடைய அம்மா மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம் காலதாமதம் ஆகும் பெண்கள் கருமுட்டையை சேமித்து வைத்துக் கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்வது எளிது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

https://www.instagram.com/reel/C6Xm-TwvinC/?utm_source=ig_web_copy_link

புஷ்பா 2 இன் முதல் சிங்கிள்

புஷ்பா 2: தி ரூல் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்திய வெளியீடுகளில் ஒன்றாகும், இதில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் சுகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது, இது மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன், புஷ்பா 2: தி ரூல் ஃபஹத் பாசில், சுனில், அனசூயா பரத்வாஜ், ஜெகதீஷ் மற்றும் பலர் உட்பட ஒரு நட்சத்திர நடிகர்களைக் கொண்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கவர்ச்சிகரமான விளம்பரப் பொருட்கள் மற்றும் போஸ்டர்களால் சலசலப்பை உருவாக்கி வருகிறது.

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து நகாஷ் அஜீஸ் (தெலுங்கு) பாடிய புஷ்பா புஷ்பாவின் முதல் சிங்கிள்  தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆறு இந்திய மொழிகளில்  வெளியிடபட்டுள்ளது.

ஹிந்தி -ரகீபாலம்

தமிழ் -விவேகா_பாடல் வரிகள்

கன்னடம் -ஆசாத்_வரதராஜ்

மலையாளம் -சிஜுதுராவூர்

பெங்காலி -srijatowrites

https://x.com/ThisIsDSP/status/1785589436274925696

https://x.com/MythriOfficial/status/1785634009747448165