Home Blog

மீண்டும் என்ட்ரி கொடுத்த சாச்சனா, மகிழ்ச்சியில் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

24 மணி நேர எவிக்ஷனில் சாச்சனா தேர்வாகி முதல் போட்டியாளராக பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களிடம் பேசுகிறார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

0

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விடுதலை 2 படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், கென் கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் 20:12:2024 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக பதிவை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது

0

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.

‘கனா காணும் காலங்கள்’ முதலில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சீரியல் பார்வையாளர்கள் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் புரிந்துகொண்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏப்ரல் 22, 2022 அன்று அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், பிரபலமான டிவி சீரியலை மீண்டும் ஒரு சீரிஸாக வழங்கியது.

இந்த சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மற்றும் அதிக எபிசோட்களை வேண்டிய ரசிகர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, சூப்பர்ஹிட் சீரிஸின் இரண்டாவது சீசனை வெளியிட்டது.

இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரிஸின், மூன்றாவது சீசனை வெளியிடுவதாக அறிவித்தது.

முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த மூன்றாவது சீசன், ரசிகர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு அருமையான கதையுடன், அவர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டவுள்ளது.

இதனால் கனா காலங்கள் சிரீஸின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

 

24 வருட காத்திருப்பு.. விக்ரமை சந்தித்த காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சிப் பதிவு

0

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விக்ரம் பிசியாக இயங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் குரல் கலைஞனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய விக்ரம், அசாதாரண நடிப்பாலும், தனித்துவமான குரலாலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். பாலா இயக்கத்தில் நடித்த சேது படம் விக்ரமிற்கு பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது.

தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக தூள், ஜெமினி என கலக்கிய விக்ரம், ரியலிஸ்டிக் ஹீரோவாக பிதாமகன், காசி உள்ளிட்ட படங்களின் ஊடாகவும் தனது நடிப்புத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டார்.

இந்தநிலையில் தற்போது, விக்ரமை சந்தித்துள்ள கன்னட திரையுலகின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார், இயக்குனர், காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.

https://x.com/shetty_rishab/status/1820889920531304827

 

அவரது பதிவில், நடிகனாக உருவாவதற்கான எனது பயணத்தில் விக்ரம் சார் எனக்கு எப்போதும் பெரிய இன்ஷ்பிரேஷன், 24 ஆண்டுகள் கழித்து எனது ஹீரோவை நேரில் சந்தித்தது உலகின் மிகவும் அதிஷ்டசாலியான மனிதனாக என்னை உணர வைக்கிறது. என்னைப்போன்ற நடிகர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி, தங்கலான் படத்துக்கு எனது வாழ்த்துக்கள் . லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பங்களிப்பே காரணம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://x.com/ikamalhaasan/status/1820774245816795530

 

 

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

0

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதுதவிர ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை அடுத்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித்தை அடுத்தபடியாக பிரசாந்த் நீல் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி அஜித்தை வைத்து அவரது 64வது மற்றும் 65வது படங்களை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கேஜிஎப் தயாரிப்பான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்தாண்டு 2025ல் அஜித் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

0

சில்லு கருப்பட்டி, ஏலே’ படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் ‘மின்மினி’. 2015ல் இந்த படம் ஆரம்பமானது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறியவர்களை மையமாக வைத்து இதன் கதை உருவாகி உள்ளது. இதற்காக இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களை, இளைஞர்களாக வளரும் வரை 7 ஆண்டுகள் காத்திருந்து நடிக்க வைத்துள்ளார் ஹலிதா.

மின்மினி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா பேசுகையில் ‛‛இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் நான் தயாராக இல்லை. ஆனால் ஹலிதா விடாப்பிடியாக நான் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒருகட்டத்தில் இந்த படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என அறிவித்த போது நிறைய டுவீட்களை பார்த்தேன். திறமையான நபர்கள் பலர் இருந்தபோதும் இவரை எதற்கு தேர்வு செய்தீர்கள் என பலரும் கமென்ட் செய்து இருந்தனர். அது என்னை மிகவும் பாதித்தது. இதற்காகவே நம் இயக்குநருக்கு நாம் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கடுமையாக உழைத்தேன். உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள், இல்லையென்றால் வலைதளங்களில் மோசமாக திட்டாதீர்கள்” என்றார்.

 

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

விரைவில் எட்டாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் போட்டியாளராக கலந்து கொள்ள போவது யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. ஜோயா

2. டிடிஎப் வாசன்

3. ரியாஸ் கான்

4. சோனியா அகர்வால்

5. பூனம் பாஜ்வா

6. குக் வித் கோமாளி அஸ்வின்

7. சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த லிஸ்ட் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

0

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி. ஆனால் இம்முறை இயக்குனருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அவர் அடுத்ததாக இயக்கி நடித்து இருக்கும் படத்திற்கு கடைசி உலகப்போர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 – வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஒரு ஜாலியான கமெர்ஷியன் திரைப்படம் இயக்கி இருப்பார் என்று நினைத்தால், அவர் முற்றிலும் மாறுப்பட்ட உலகப்போர் கதைக்களத்துடன் ஒரு சீரியசான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.

வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் ஒளிபதிவு உலகத்தரத்தில் உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் மிக அழகாக செய்துள்ளனர். இது யாரும் எதிர் பார்க்காத ஒரு விஷயம். எம்மாதிரி திரைப்படமாக இது இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 

 

திரிஷா உடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்.. வெளியானது விடாமுயற்சி படத்தின் Thirid Look.. இதோ

0

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது விடா முயற்சி படத்தின் thirid look வெளியாகி இருக்கிறது.