Home Blog

முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்!

0

Pandian Stores 2 Serial This Week Promo Video

தங்களது கடையில் வேலை பார்த்து கோமதியை திருமணம் செய்ததால் பாண்டியனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரியாகவே முத்துவேல் பிரதர்ஸ் நினைத்து வந்தனர். எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று பல வழிகளில் எல்லாம் பாண்டியனுக்கு குடஞ்சல் கொடுத்தனர்.

அப்படியே இருவீட்டாரும் சென்ற நிலையில் தான் அரசியை வைத்து பாண்டியனை பழி வாங்க திட்டம் போட்டு கடைசியில் அந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது. இதில் அரசி மட்டும் அன்று கூண்டில் குமரவேலுவிற்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால், இந்த நேரம் குமரவேல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், தன்னை காப்பாற்றிய அரசி காலில் விழுந்து குமரவேல் மன்னிப்பு கேட்டார். இந்த சூழலில் தான் இன்று பாண்டியனை காப்பாற்றிய முத்துவேல் கையை பிடித்து பாண்டியன் கதறி அழுதுள்ளார். அது ஏன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாக்கியம் மற்றும் தங்கமயில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் ச்தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையிலும் முத்துவேல் பிரதர்ஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜீ மற்றும் அரசி மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், மற்ற அனைவரது மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கோமதி ஒரு ஜெயிலிலும், பாண்டியன், செந்தில், கதிர், சரவணன் ஆகியோர் ஒரு ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கான புரோமோ வீடியோவில் கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், முதலில் பாக்கியத்திம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். அதற்கு பாண்டியன் பதிலளிக்கும் காட்சியும், பின்னர் முத்துவேல் பிரதர்ஸ் சாட்சி சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

முதலில் பேசிய முத்துவேல் கூறுகையில், இதில், வீட்டிற்கு வந்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு என்னுடைய தங்கச்சி குடும்பம் அப்படி ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை என்று கூறினார்.இவரைத் தொடர்ந்து சக்திவேல் பேசுவதற்கு கூண்டில் ஏறுகிறார்.

அவரைப் பார்த்ததும் பாக்கியத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால், அவர் தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சொன்னார். அவரது பேச்சைக் கேட்டு பாக்கியமும் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதை கேட்டு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரது சாட்சிகளின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் வருகின்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும் போது முத்துவேல் கையை பிடித்து கொண்டு பாண்டியன் கதறி அழுதார்.

இதே போன்று இக்கட்டான சூழ்நிலையில் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுனீங்களே எனக்கு இது போதும் அண்ணே என்று கூறி அவரது மார்பில் சாய்ந்து அழுகிறார்.அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இனிமேல் மயில் இனி அந்த வீட்டில் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம். இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? பாண்டியன் குடும்பத்தினர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் தங்கமயில் மற்றும் பாக்கியம் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

I’M COMING..!- வெளியானது “ஜனநாயகன்” டிரெயிலர்

0

‘ஜனநாயகன்’ நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இதுவரை வெளியான 4 பாடல்களும் செம்ம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (ஜனவரி 2) வெளியான “ராவண மகண்டா” பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைபோல், டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Season 9: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு?

0

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பார்வதி – கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதாக நம்மதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் சந்தாஷமாகியுள்ளனர்.

அனலி- திரைவிமர்சனம்

0

நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு உங்களிடம் சிக்கிக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் கண்டெய்னர் குடோனில் இருந்து வெளியேறும் சிந்தியா, தனது குழந்தையையும் ஒரு பையையும் அங்கு தொலைத்து விடுகிறார்.

இறுதியில் குழந்தையும் பையையும் சிந்தியா மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே, குழந்தை பாசம், ஆக்சன் என நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் சக்தி வாசு தேவன் நடிப்பு. வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கபீர் சிங், இனியா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்கம்

கடத்தல் கும்பலிடம் சிக்கி அவர்களை போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் தீனா. பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிக லாஜிக் மீறல்கள், காட்சிகளின் தொடர்ச்சி இல்லை. திரைக்கதை வலுவில்லை. காட்சிகளின் சுவாரசியம் இல்லை. இவை அனைத்தையும் சரி செய்து இருக்கலாம்.

இசை

தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவரவில்லை.

ரேட்டிங்-1.5/5

ராவண மவன்டா..! இன்று இரவு வெளியாகும் ஜனநாயகனின் 4வது பாடல்

0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஜன நாயகன் ரிலீஸ் திகதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் திகதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கசசேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

டீசல்- திரைவிமர்சனம்

0

கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல் குறித்த படம்.
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார்.

இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.

இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார்.

இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.

கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை..

நடிகர்கள்

ஒரு மாஸ் ஆக்ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார். படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு.

சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

இயக்கம்

மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.

படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது.

இசை

திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.

ஒளிப்பதிவு

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம்

0

நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.

ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.

இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.

சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ‘என் பாட்டன் சாமி’ பாடல் வெளியானது

0

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ‘என் பாட்டன் சாமி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம்.. ரசிகர்கள் குஷி!

0

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SakthiFilmFctry/status/1967587783419273324