Home Blog

Arasan | தொடர் படப்பிடிப்பில் “அரசன்” – வெளியான புது அப்டேட்

0

நடிகர் கமல் ஹாசனுடன் “தக் லைப்” திரைப்படத்தில் நடித்த பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் “அரசன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், “அரசன்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதுகுறித்த பதிவில், படக்குழுவினருடன் நடிகர் யோகி பாபுவை தயாரிப்பாளர் தானு டேக் செய்துள்ளார். அதன்படி அரசன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடிப்பதாகவும், இவர் தற்போது நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தெரிகிறது.

வடசென்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வரும் அரசன் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போல் கதையம்சம் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அரசன் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.

Dhanush | ஹேப்பி ராஜ் surprising-ஆ இருக்கு… தனுஷ் கொடுத்த ரிவ்யூ

0

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஹேப்பி ராஜ்.” வருகிற மார்ச் 27-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று (மார்ச் 17) மாலை வெளியானது. டிரெய்லரின் படி இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கி இருக்கும் ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் மற்றும் திரை பிரபலங்கள் பலர் வெளியிட்டனர். டிரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ் “ஹேப்பி ராஜ்” திரைப்படத்தின் ரிவ்யூவை எக்ஸ் தளத்தில் பகிர்நதுள்ளார். தான் படத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், “நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன்; இது ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்து, மிகவும் நகைச்சுவையான அதே சமயம் ஆச்சரியமூட்டும் வகையில் நெகிழ்ச்சியூட்டும் ஒரு படைப்பாகும். அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் சீதாவை அடித்த அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல்

0

இன்றைய சிறகடிக்க ஆசை தொலைக்காட்சி தொடரில் என்ன நடக்க போகிறது என பார்ப்போம்.

செல்வம் கார் அருண் அம்மா மீது மோதியதால் அவர் மரணமடைந்தார். தனது அம்மாவின் மரணத்திற்கு காரணம் செல்வம் மட்டுமல்ல முத்துதான். முத்து சொல்லித்தான் செல்வம் இப்படி செய்திருக்கிறான் என அருண் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

செல்வம் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கவேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என வக்கீல் முன் அருண் கூறியிருந்தார். அதன்பின், செல்வம் ரூ. 1.60 லட்சம் தயார் செய்துவிட்டார். மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், முத்து தனது இரண்டு கார்களில் ஒன்றை சத்யா வேலை பார்க்கும் இடத்தில் அடகு வைத்துவிட்டார்.

செல்வம் ரூ. 5 லட்சத்தையும் அருணிடம் கொடுத்துவிட்டார். வீட்டிற்கு பணத்துடன் வந்த அருணிடம் ‘செல்வம் அண்ணனால் பணத்தை ரெடி பண்ண முடியவில்லை, முத்து மாமாதான் காரை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார்’ என சீதா கூறுகிறார்.

முத்துவிற்கு ஆதரவாக சீதா பேசியதால் ‘என்னை விட உனக்கு உங்க அக்கா, மாமா, செல்வம்தான் முக்கியமா? என்று கேட்டு கடுப்பான அருண், மீண்டும் தனது மனைவி சீதாவை அடித்தார். ஏற்கனவே அருண் தன்னை அடித்ததை தனது அக்காவிடம் சீதா கூறியிருந்தார்.

ஆனால், முத்துவிடம் இருந்து இந்த விஷயத்தை மறைத்துவிட்டனர். தற்போது மீண்டும் சீதாவை அருண் அடித்துள்ள நிலையில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை சிறகடிக்க ஆசை சீரியலில் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த படத்திற்காக ஆம்பள அணியுடன் இணைகிறார் சுந்தர் சி.

0

சுந்தர் சி தனது அடுத்த படத்திற்காக தனது ஆம்பள குழுவினரான விஷால் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் இணைய உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆம்பள வெளியானபோது வெளியான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ் குஷ்பு சுந்தரும், பென்ஸ் மீடியா பேனரின் கீழ் ஏசிஎஸ் அருண் குமாரும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வழங்க உள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ ஜனவரி 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தலைப்பு மற்றும் பிற விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளன.

ராப்பர் ஆதி மற்றும் இசை தயாரிப்பாளர் ஜீவா ஆகியோரைக் கொண்ட இசை ஜோடியான ஹிப்ஹாப் தமிழா, சுந்தர் சியின் ஆம்பள (2015) மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஜோடி சுந்தர் சி உடன் இணைந்து பணியாற்றியது, ஆதி ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் ஆனார்.

கடந்த ஆண்டு ஜனவரியில், விஷால் மற்றும் சுந்தர் சியின் முதல் கூட்டணியான மத கஜ ராஜா 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. கதகளி (2016) மற்றும் கத்தி சண்டை (2017) ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தாலும், அவர்களின் சமீபத்திய வெளியீடு 6 ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்‌ஷன் (2019) இல் வெளியிடப்பட்டது.

சுந்தர் சியின் சமீபத்திய இயக்கம் கேங்கர்ஸ், இது ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. சமீபத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பை முடித்தார். ரஜினிகாந்த் நடித்து கமல்ஹாசன் தயாரித்த ஒரு படத்தை அவர் இயக்கவிருந்தார், ஆனால் பின்னர் பின்வாங்கினார். இதற்கிடையில், விஷால் தற்போது தனது இயக்குநராக அறிமுகமாகும் மகுடம் படத்தில் பணியாற்றி வருகிறார்.

வெளிநாட்டில் படகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா..

நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார்.

துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி செய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

40 வயதுக்கு பிறகும் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ. 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

0

பாம் படத்தை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். படத்திற்கு கான்சிட்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாடல்கள், டிரெய்லர், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கந்தர் ஸ்கிரிப்ட் மிகவும் வித்தியாசமாக இருந்தது

0

சமீப காலங்களில் அதிகம் பேசப்பட்ட சில படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அனிமல், சாவா, புஷ்பா 2, மற்றும் தம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இருப்பினும், அவரது மற்ற படங்களைப் போலல்லாமல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர், பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை. சமீபத்திய நேர்காணலின் போது, ​​சிக்கந்தர் படத்தின் ஸ்கிரிப்ட் படத்தின் தயாரிப்பின் போது எவ்வாறு மாற்றப்பட்டது என்பது குறித்து ராஷ்மிகா பேசினார்.

பிரேமாவிடம் பேசிய ராஷ்மிகா, சிக்கந்தர் தனக்கு முதன்முதலில் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். “சிக்கந்தருக்கு, முருகதாஸ் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. நிச்சயமாக, பின்னர் நடந்தது வேறு. ஆனால் நான் முதலில் ஸ்கிரிப்டைக் கேட்டபோது, ​​அது மிகவும் வித்தியாசமான ஸ்கிரிப்ட்.”

அதே நேரத்தில், திரைப்படத் தயாரிப்பில் இதுபோன்ற மாற்றங்கள் பொதுவானவை என்று ராஷ்மிகா ஒப்புக்கொண்டார். “நீங்கள் கேட்கும்போது, ​​அது நீங்கள் கேட்கும் ஒரு கதை. படத்தின் தயாரிப்பைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிகள், எடிட்டிங் தேர்வுகள் அல்லது வெளியீட்டு நேரத்தைப் பொறுத்து விஷயங்கள் பெரும்பாலும் மாறும். பொதுவாக இது படங்களில் நடக்கும்.

சல்மான் மற்றும் ராஷ்மிகாவைத் தவிர, சிக்கந்தரில் சத்யராஜ், கிஷோர், பிரதீக் ஸ்மிதா பாட்டீல், ஷர்மன் ஜோஷி, காஜல் அகர்வால், அஞ்சினி தவான் மற்றும் ஜதின் சர்னா ஆகியோரும் நடிக்கின்றனர். சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில் பிரிதம் இசையமைத்துள்ளார், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்துள்ளார். சக்னில்க் கூற்றுப்படி, இந்தப் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 184 கோடி (நிகரம்) வசூலித்தது, இது ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

சல்மான் தற்போது தனது அடுத்த வெளியீடான பேட்டில் ஆஃப் கால்வானுக்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், ராஷ்மிகா காக்டெய்ல் 2 இன் ஒரு பகுதியாக இருக்கிறார், கிருதி சனோன் மற்றும் ஷாஹித் கபூருடன் திரையில் பகிர்ந்து கொள்கிறார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படம் அப்டேட்

0

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகின்றது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஒரு தகவல் தற்போது கிடைத்திருப்பதாக தெரிகின்றது. சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபுவுடன் தான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

 சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. சுதா கொங்கரா இயக்கம் ,ஜி.வி பிரகாஷ் இசை அதுமட்டுமல்லாமல் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரது நடிப்பில் உருவான இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. ஆனாலும் வசூல் நல்லபடியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்தார்.

ஆனால் திடீரென ரஜினி பட வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு கிடைத்ததால் அப்படத்தை இயக்க சென்றுவிட்டார் சிபி சக்கரவர்த்தி. எனவே சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபுவுடன் தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக ஒரு தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது. அதாவது என்னதான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினாலும் ரிலீசாகப்போவது என்னமோ SK24 திரைப்படம் தான் என சொல்லப்படுகின்றது.

ஏனென்றால் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகப்போகும் சைன்ஸ் பிக்ஷன் படமாம். இப்படத்தின் படப்பிடிப்பிற்கும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிப்பதற்கும் ஒரு கால அளவு தேவைப்படும். சற்று டைம் எடுத்துக்கொண்டு தான் இப்பட வேலைகளை செய்ய முடியும் என தெரிகின்றது. அதே சமயம் SK24 திரைப்படம் மிக குறுகிய காலகட்டத்திற்குள் உருவாக்கப்படும் ஒரு படமாம்.

சிபி சக்ரவர்த்தியோ அல்லது வேறு ஒரு இயக்குனர் இயக்கினாலோ அப்படம் கண்டிப்பாக குறுகிய காலகட்டத்திற்குள் முடிக்கப்படும் படமாக தான் இருக்குமாம். அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தான் தயாரிக்க இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. எனவே அவர் தயாரிக்கும் படம் தான் பராசக்தி படத்திற்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயனின் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி அடுத்த வருடம் வரைதலைவர் 173 படத்தில் பிசியாக இருப்பார். எனவே அதுவரை பேஷன் ஸ்டுடியோஸ் காத்துகொண்டு இருப்பார்களா ?அல்லது வேறொரு இயக்குனரை தேர்ந்தெடுப்பார்களா ? என்பது தெரியவில்லை. பல மாதங்களுக்கு முன்பு குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் தான் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை இயக்குவார் என கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்டு வந்தது.

அப்படி இருக்கையில் ஒருவேளை அவருக்கு சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா ? என்பதும் தெரியவில்லை. இவ்வாறு SK24 படம் குறித்து பல குழப்பங்கள் இருந்து வருகின்றன. இதைத்தாண்டி வெங்கட் பிரபு இயக்கும் படம் தான் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படம் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்கெல்லாம் விடை இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தான் ரசிகர்களுக்கு தெரிய வரும்.

மிருணாள் தாக்கூர் குறித்த உண்மை புதிய தகவல்

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது இளம் வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சில நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். ஒரு பேட்டியில் மிருணாள் தாகூர், “தனுஷ் என்னுடைய சிறந்த நண்பர்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வட இந்தியாவில் இது செய்தியாகவும் வெளியான நிலையில், இதுபற்றி தனுஷோ அல்லது மிருணாள் தாகூரோ இதுவரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், “உண்மையிலேயே அப்படியிருக்குமோ?” என்ற கேள்வி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்குநர் கூறியதாவது:

“இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?

விவாகரத்து நடந்தபோது, மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள். தனுஷைப் பொறுத்தவரை, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அதற்கு காரணம், தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை.

தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொடங்கும் ரியாலிட்டி ஷோ.

0

சன் டிவி சீரியல்களின் கிங் என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக உள்ளனர். 

இதில் மிகவும் விதவிதமான கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாக ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

நடனம், பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் ஷோ ஒளிபரப்பானது.இதனை பார்த்து தான் சில தொலைக்காட்சிகளில் வேறு டைட்டிலுடன் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், அண்டா காகசம் என சூப்பர் சூப்பரான ஷோக்கள் ஒளிபரப்பாகிக்கொண்டு வருகிறது.

தற்போது விஜய் டிவி தங்களது சூப்பர் ஹிட் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் அடுத்து பிரம்மாண்டமாக தொடங்கும் ரியாலிட்டி ஷோ... வெளிவந்த புரொமோ | Jodi Are U Ready Season 3 Coming Soon

அதாவது ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த 3வது சீசனிலும் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் ரம்பா தான் நடுவர்களாக வர உள்ளனர்.

3வது சீசனின் முதல் புரொமோ இப்போது வெளியாகியுள்ளது