Home Blog

டீசல்- திரைவிமர்சனம்

0

கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல் குறித்த படம்.
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார்.

இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.

இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார்.

இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.

கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை..

நடிகர்கள்

ஒரு மாஸ் ஆக்ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார். படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு.

சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

இயக்கம்

மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.

படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது.

இசை

திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.

ஒளிப்பதிவு

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம்

0

நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.

ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.

இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.

சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ‘என் பாட்டன் சாமி’ பாடல் வெளியானது

0

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ‘என் பாட்டன் சாமி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம்.. ரசிகர்கள் குஷி!

0

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SakthiFilmFctry/status/1967587783419273324

அன்பின் எழுச்சிதான் எல்லாமே – Haters குறித்து தனுஷ் கூறியது!

0

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

தனுஷ் அதில் வெறுப்பாளர்களை பற்றி சில வார்த்தைகள் கூறினார் அதில் “ஹேட்டர்ஸ் என்ற ஒரு கான்சப்ட் இல்லை, அது ஒரு 30 நபர்கள் பிழைப்பிற்காக 300 போலி ஐடி-களில் இருந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இங்கு யாரும் யாருக்கும் ஹேட்டர்ஸ் கிடையாது அந்த 30 நபர்களும் எல்லா திரைப்படங்களும் பார்ப்பார்கள். அன்பு கொடுத்தால் திருப்பி அன்பு கொடுப்போம் அன்பின் எழுச்சி தான் எல்லாமே!” என கூறினார்.

அரசியலில் களமிறங்கும் பார்த்திபன் – நான் தான் CM ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0

அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன்.

அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன். இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.

படத்தின் முதல் லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டு, பார்த்திபன் நகைச்சுவையான அரசியல் உரையுடன் கூறியுள்ளார்:

“பெரியோர்களே, தாய்மார்களே,

வாக்களப் பெருமக்களே!

ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

போடுங்கம்மா ஓட்டு

Boat’சின்னத்தைப் பாத்து!

இப்படிக்கு,

C. M . சிங்காரவேலன் எனும் நான்….

‘சோத்துக் கட்சி'”

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பை பார்த்திபனின் Bioscope Film Framers தயாரிக்கிறது

திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை இசை வெளியீட்டு விழா..!- நடிகர் தனுஷின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு

0

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

‘இட்லி கடை’ படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும், நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இட்லி கடையில் நடிக்கும் தனுஷின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனுஷ் முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா பாடலை பாடி இளைப்பாறிய மடோனா

0

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

அதனை தொடர்ந்து பல மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களி நடித்தார். இவரது அழகு மற்றும் நடிப்பிற்கு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகினர்.

கடைசியாக அவர் லியோ மற்றும் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவின் தென்ரல் வந்து என்னை தொடும் பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/DOVaN01E6sb

25வது நாளைக் கடந்த ‘கூலி’, வசூல் 600 கோடி கடந்திருக்குமா?

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் ‘கூலி’. நேற்றுடன் இப்படம் 25வது நாளைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் குறைந்த தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும்.

இப்படத்திற்கான வசூல் அறிவிப்பு 404 கோடி என நான்காம் நாளில் வந்ததோடு அப்படியே நிற்கிறது. 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். அது 600 கோடியைக் கடந்துள்ளதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. படக்குழுவினர் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நிறைவு வசூலையாவது அவர்கள் அறிவிப்பார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

25வது நாள் போஸ்டர்களில் படத்தில் இடம் பெற்ற ரஜினியின் பிளாஷ்பேக் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். 80களில் ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியான போஸ்டராக அது இருந்தது.

புகழ் நடிக்கும் ‘4 இடியட்ஸ்’

0

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணிக்கொண்டிருந்த புகழ், சினிமாவிற்கு வந்து காமெடி ரோலில் நடித்தார். அடுத்து ‘மிஸ்டர் ஷூ கீப்பர்’ படத்தில் கதைநாயகன் ஆனார். இப்போது காமெடியன், கதை நாயகன் என இரண்டிலும் நடித்து வருகிறார்.

‘அன்பேசிவம், கோகுலத்தில் சீதை, பகவதி’ போன்ற படங்களை தயாரித்த லட்சுமி மூவீ மேக்கர்ஸ் இப்போது தயாரிக்கும் படத்திலும் புகழ் ஹீரோ. அந்த படத்துக்கு ‘4 இடியட்ஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம். சஜோசுந்தர் முருகேசன் இயக்குகிறார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

இது தவிர, ‘அழகர்யானை’ என்ற படத்திலும் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார். புகழ் காமெடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தேசிங்குராஜா 2’ படுதோல்வி அடைந்தது. அதில் பெண் வேடத்தில் நடித்த புகழ் காமெடிக்கு வரவேற்பு இல்லை. அதனால், அவர் கதைநாயகன் பாதைக்கு திரும்புவதாக தகவல்.