Home Blog

வரும் பொங்கலுக்கு விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்தாண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

விஜய் கடைசியாக நடித்த தி கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார் அதில் துப்பாக்கியை புடிங்க சிவா என விஜய் வசனம் பேசுவார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்பொழுது ஒரே நாளில் வெளியாகும் இருவரின் திரைப்படமும் ஒருவித இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

டொவினோவின் நரிவேட்டை – ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி

0

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்!

0

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், நடிகர், நடிகைகள் அழகுக்காகவும், தோற்ற பொழிவிற்காகவும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்ருதிஹாசன் அளித்த பதிலின் படி, “மக்கள் மற்றவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சைகளின் மூலம் உடலில் மாற்றங்களைக் கொண்டு வருவது எந்தவொரு தவறும் கிடையாது.

அதுவும் மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ, அழகையோ, தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தான் தவறு” எனக் கூறினார்.


‘மதராஸி’ என்று டைட்டில் வைத்தது ஏன்? – ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

0

தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு ‘மதராஸி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்த ‘மதராஸி’ படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும்.

வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள்.

அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,” என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.

 AK_ன் சப்ரைஸ் ரியாக்சன்

0

கோலிவுட்டில் பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தை கவர்ந்து வருகின்றன. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.

அதே நேரத்தில் அஜித் குமார் நடிகராக மட்டுமில்லாமல் பைக், கார் ரேஸராக துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார். அதன் பின்பு அவர் வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் என்பன இணையத்தை கவர்ந்து வருகின்றன.

அஜித்குமார் சமூக வலைதள பக்கங்களில் இல்லாவிட்டாலும் அவர் தொடர்பான அப்டேட்டுகளை அவருடைய ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற கார் ரேசிங்கில்  வெற்றி பெற்ற அஜித்தை அவருடைய குடும்பம் கொண்டாடிய விதமும் அதன் போது ஷாலினி கொடுத்த ரியாக்சனும் பலராலும் ரசிக்கப்ட்டது.  

இந்த நிலையில், அஜித்குமாரை நேரில் கண்ட ரசிகர் ஒருவர் அஜித் குமார் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலை பாடி அசத்தியுள்ளார். அஜித் குமாரும் தனது ரசிகரின் பாடலை மெய்மறந்து கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் குமார் மிகப்பெரிய நடிகராக இருந்த போதும் தனது ரசிகர்களிடம் சகஜமாக பழகுவதும் தனக்காக உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றத்தை கூட கலைத்து, அஜித்- விஜய் வாழவேண்டும் என்று நினைக்காமல் உங்களுக்காக நீங்க வாழுங்க என்று ஒவ்வொரு முறையும் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CinemaWithAB/status/1883006419542405425

தோழி வித்யாவை லாக் செய்த முத்து,

0

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இன்றைய எபிசோடில், முத்து போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்து அங்கு நடந்ததை கூறுகிறார், அதோடு மனோஜ் அடி வாங்கிய விஷயத்தை கூற ஒரு கலாட்டா நடக்கிறது.

பின் தாத்தா-பாட்டி முத்துவிடம் ஒரு போன் கொடுத்து யாரோ ரோட்டில் விட்டுசென்ற போனை கொடுத்து இது யாருடையது என தெரியவில்லை, பார்த்து கொடுத்துவிடுங்கள் என்கிறார்.

அந்த போனை திறந்து பார்த்தால் அது முத்துவுடையது என தெரிய வருகிறது.

பின் அடுத்த வார புரொமோ ஒன்று வெளியானது. அதில், முத்து, தாத்தாவிடம் போன் எப்படி கிடைத்தது, அவர் ஒரு பெண் தவறவிட்டுவிட்டார் என்றார். அது ஏன் பார்லர் அம்மாவாக இருக்க கூடாது என கூற, வித்யா மீதும் சந்தேகப்படுகிறார்.

வித்யா வீட்டிற்கு சென்று இது என்ன என்று போன் காட்டி கேட்கிறார், அவர் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறார். இதோ புரொமோ,

https://www.instagram.com/reel/DFOwJkTydl-/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

தர்ஷிகாவின் புதிய இன்ஸ்டராகம் பதிவு..

0

VJ விஷாலை கட்டிப்பிடித்து சொன்ன விஷயம்
எல்லோரிடமும் விடை பெற்று கொண்ட தர்ஷிகா VJ விஷாலை கட்டிப்பிடித்து எமோஷ்னலாக பேசினார்.

“விதி நமக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என தெரியவில்லை. இந்த நினைவுகள் ரொம்ப நன்றாக இருந்தது. கப்போட வா” என கூறிவிட்டு கிளம்பினார் தர்ஷிகா.

இவ்வாறு கூறிவிட்டு வெளியேறிய தர்ஷிகாவின் புதிய இன்ஸ்டராகம் பதிவு மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்றப்படுத்தி உள்ளது.

அன்புள்ள குடும்பத்தாரே,

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் நுழைந்த எவரும் நான் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு என்னால் தாக்கம் செலுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 24/7 பார்த்த பார்வையாளர்களாக இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

நான் வெளியேற்றப்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று நான் நம்பவில்லை.

நான் வேண்டுமென்றே யாரையும் தவறாக வழிநடத்தவில்லை அல்லது புண்படுத்தவில்லை, யாருடைய இரக்கத்தையும் நான் பயன்படுத்தவில்லை அல்லது எந்த சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் என் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன், அது என்னை காயப்படுத்தியது, இப்போது இது தேவையற்ற நகைச்சுவையாக மாறுவதை நான் காண்கிறேன்.

“எனது அனைத்து கவலைகளும் நேரடியாக அந்தந்த நபரிடம் கேட்கப்படும், அதே மன்றத்தில் மட்டுமே கேட்கப்படும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்”

இது தொடர்பாக மற்றவர்களை குறை கூறுவதையோ அல்லது ட்ரோல் செய்வதையோ தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நேர்மறையாக முன்னேறுவதில் கவனம் செலுத்துவோம்.

என தனது இன்ஸ்டராகம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/DEh8zjEyOUR/?hl=en

விஷால் நீ லவ்வர் பாய் இல்ல பிளே பாய்

0

பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் தற்போது முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர்.

வெளியில் மக்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது, என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்கிற தகவல்களை எல்லாம் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்கள் சொல்லி இருக்கின்றனர்.

தர்ஷிகா, அன்ஷிதா என பலருடன் நெருக்கமாக இருப்பது போல நடந்துகொண்ட VJ விஷாலை தற்போது சாச்சனா பிக் பாஸ் வீட்டிலேயே விமர்சித்து இருக்கிறார்.

“அவர்கள் இரண்டு பேரையுமே நீ லவ் பண்ணது போல தான் இருந்தது” என சாச்சனா குற்றம்சாட்ட, “நான் சாதாரணமாக தான் பழகினேன்” என அவர் சமாளிக்கிறார்.

“இப்போ நீ லவ்வர் பாய் இல்ல.. பிளே பாய்” என சாச்சனா அவரை விளாசி இருக்கிறார்.

அதற்கு பிறகு அதை பற்றி மற்றவர்களிடம் கூறி விஷால் கண்ணீர் விட்டு இருக்கிறார். வீடியோவில் நீங்களே பாருங்க.

காதலிக்க நேரமில்லை படத்தின் டிரெய்லர் வெளியீடு

0

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ &’லாவண்டர் நேரமே சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

டிரெய்லரின் காட்சிகள் ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிரெய்லரின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.