Home Blog Page 2

விஜய் தொலைக்காட்சியில் தொடங்கும் ரியாலிட்டி ஷோ.

0

சன் டிவி சீரியல்களின் கிங் என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக உள்ளனர். 

இதில் மிகவும் விதவிதமான கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாக ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

நடனம், பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் ஷோ ஒளிபரப்பானது.இதனை பார்த்து தான் சில தொலைக்காட்சிகளில் வேறு டைட்டிலுடன் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், அண்டா காகசம் என சூப்பர் சூப்பரான ஷோக்கள் ஒளிபரப்பாகிக்கொண்டு வருகிறது.

தற்போது விஜய் டிவி தங்களது சூப்பர் ஹிட் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் அடுத்து பிரம்மாண்டமாக தொடங்கும் ரியாலிட்டி ஷோ... வெளிவந்த புரொமோ | Jodi Are U Ready Season 3 Coming Soon

அதாவது ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த 3வது சீசனிலும் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் ரம்பா தான் நடுவர்களாக வர உள்ளனர்.

3வது சீசனின் முதல் புரொமோ இப்போது வெளியாகியுள்ளது

துல்கர் சல்மானுக்கு ஜோடியான அறிமுக நடிகை

0

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.

கடைசியாக ‘காந்தா’ படத்தில் நடித்திருந்த துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய படம் ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’. இதில் நாயகியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். இதன் மூலம் இவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், சாத்விகாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படமும் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

“தேரே இஷ்க் மெய்ன்” வெளியாவது எப்போது?

0

தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 23ந் தேதி வெளியாக உள்ளது

ரசிகர்களுக்கு சோதனை மேல் சோதனை..

0

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று அறிவித்தார்.

இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தெறி படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கலைப்புலி எஸ். தாணு சார், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளித்து, வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி 2 திரைப்படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, “புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு “தெறி” திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஜன நாயகன் ரிலீசாகாத விரக்தியால் இருக்கும் விஜய் ரசிகர்கள் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலை கேட்டு கடுப்பாகியுள்ளனர்.

அந்த கதாபாத்திரம் நான்தான்..

0

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. விரும்பினால் எம்மொழியும் கற்போம். ஈழத்தில் நாங்கள் எங்கள் தாய் நிலத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போனோம். ஒரு மொழி தேவை என்றால் கற்று கொள்வோம். ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும்.

கடந்த 3 தலைமுறைகளாக தாய் மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. நமக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை” என்று விமர்சித்தார்.

அப்போது பராசக்தி படத்தில் வரும் “செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா?”என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

அல்லு அர்ஜுன் படத்திற்கு சென்றுவிட்ட லோகேஷ்….

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை தான் இயக்க போகிறார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லி, அடுத்த ப்ராஜெக்ட்டை அவருடன் உறுதி செய்துவிட்டார்.

சமீபத்தில் லோகேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் AA23 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ உடன் வந்திருந்தது.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கும் பல்வேறு தியேட்டர்களுக்கு கார்த்தி நேரில் சென்று வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் “லோகேஷ் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்க சென்றுவிட்டார். கைதி 2 நிலை என்ன?” என கேள்வி எழுப்பினார்கள்.

“அதை லோகேஷ் கனகராஜே சொல்வார்” என ஒரே வரியில் பதில் கூறிவிட்டார் கார்த்தி.  

ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

0

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று அறிவித்தார்.

இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Bigg Boss Season 9 டைட்டில் வின்னர் இவரா? – வெளியான தகவல்

0

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.

இந்த சீசனில் பார்வதி – கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

ரேஸிங் களத்தில் அஜித்தை நேரில் சந்தித்த திரைப்பிரபலங்கள்

0

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், லீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அஜித்தின் ‘ரேஸிங்’ பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது.

விஜய் சேதுபதி பிறந்தநாள்… புதிய படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு

0

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘Slum Dog – 33 Temple Road’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.