Home Blog Page 3

“கூலி” படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

0

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கூலி படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2வது சிங்கிள் வரும் ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

அமீர் கான் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி – படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக அதிக வசூல் குவித்தது.

இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘தண்டேல்’ படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து இந்தியில் ‘ஏக் தின்’ என்ற படத்திலும் சாய் பல்லவி கமிட்டி ஆகி இருந்தார். இது அவரின் முதல் பாலிவுட் படமாகும். இதில் அமீர்கானின் மகன் ஜூனைத்கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ள இப்படத்தை சுனில் பாண்டே இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ஏக் தின்’ நவம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இந்தியில் ராமாயணா படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து சாய் பல்லவி நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன்

0

இசையமைப்பாளர் இளையராஜா பேரன் யத்தீஸ்வர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். திருவண்ணாமலையில் இன்று(ஜுன் 8) காலை நடந்த நிகழ்ச்சியில் ஓம் நமச்சிவாய என தொடங்கும் பக்தி ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் மூத்த மகன் தான் யத்தீஸ்வர். இளையராஜா அடிக்கடி செல்லும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திலேயே தனது முதல் பாடலை அவர் பேரன் வெளியிட்டு இருக்கிறார். ரமண ஆசிரம நிர்வாகிகளே இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

யத்தீஸ்வர் கூறுகையில், ‛‛எனக்கு சின்ன வயது முதலே இசை மீது ஆர்வம். முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த பாடல் குறித்து சில ஆலோசனைகளை தாத்தா இளையராஜாவிடம் கேட்டேன். அவரும் ஆர்வமாக வழங்கினார். அப்பா கார்த்திக்ராஜா பாடல் வரிகளில் உதவினார். எனக்கும் தாத்தா, அப்பா, குடும்பத்தினர் பலர் வரிசையில் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இளையராஜா குடும்பத்தில் கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. மறைந்த பவதாரணியும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் வரிசையில் யத்தீஸ்வரும் இணைந்துள்ளார்.

மகன் குறித்து பேசிய கார்த்திக்ராஜா, ”திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பக்தி பாடல்களை கேட்ட யத்தீஸ்வர் அப்படியொரு பாடல் உருவாக்க ஆசைப்பட்டார். அந்த அடிப்படையில் இந்த பாடலை தந்து இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் இருந்து அவர் இசையமைப்பாளர் ஆனது சந்தோஷம், பெருமை. ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இங்கே மக்கள்தான் நீதிபதி. இந்த பாடலை கேட்டு விட்டு அவரை வாழ்த்த வேண்டும்” என்றார்.

இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம்

0

பிரபல மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது குடும்பத்துடன் காரில் பயணம் மேற்கொண்டார்.

இரவு கிளம்பிய இவர்களது கார் காலையில் தர்மபுரி பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பி.சி சாக்கோ பலியானார்.

மற்றவர்கள் காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஷைன் டாம் சாக்கோவிற்கு வலது கையில் பலத்த அடிபட்டுள்ளது என்றும் இன்னும் சில தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து ஷைன் டாம் சாக்கோ கூறும்போது, இரவு முழுவதும் என் தந்தை ஜோக் அடித்து எங்களுடன் பேசிக் கொண்டு வந்தார். வழியில் ஆலப்புழாவில் நிறுத்தி இரவு உணவு சாப்பிட்டோம்.

அதன்பிறகு மாத்திரை போட்டுவிட்டு கொஞ்ச நேரம் நான் தூங்கி விட்டேன். காலையில் விபத்து நடந்த போது தான் எனக்கு விழிப்பு வந்தது.

ஆனால் என்ன நடந்தது என்று உணர்ந்து நான் பார்க்கும் போது, என் தந்தை அங்கே உயிருடன் இல்லை” என்று கண்கலங்க பேசியுள்ளார்.

தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம்..

0

தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாத நிலையில், ஓசுருக்கு வந்து பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள தக் லைஃப் படத்தின் சுகர் பேபி, ஜிங்குச்சா, விண்வெளி நாயகா, முத்த மழை உள்ளிட்ட பாடல்கள் அனைத்துமே சார்ட் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், மணிரத்னம் – கமல்ஹாசன் – ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சிம்பு காம்போவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தக் லைஃப் படம் அந்த எதிர்பார்ப்புகளை திரையரங்குகளில் பூர்த்தி செய்ததா? இல்லையா? என படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம்: “வாவ்.. வாவ்.. வாவ்.. வாவ்.. முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சிகள் அல்டிமேட்டாக உள்ளது. கமல்ஹாசனின் ராக் சாலிட் கம்பேக் இந்த தக் லைஃப்” என இந்த நெட்டிசன் தனது முதல் பாதி விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

செக்கச் சிவந்த வானம் 2: அப்படியே செக்கச் சிவந்த வானம் படம் பார்த்தது போலத்தான் உள்ளது. தக் லைஃப் படம் நத்தை வேகத்தில் மெதுவாக நகர்கிறது. முதல் பாதி முழுக்க சீட்டில் அமர முடியவில்லை. கமல்ஹாசன் தனது முத்தக் காட்சிகளையும், கில்மா காட்சிகளையும் காட்டி படத்தைக் காப்பாற்றுகிறார். செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் போர்ஷன் தான் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா போர்ஷன் என இந்த நெட்டிசன் கழுவி ஊற்றியுள்ளார்.

சிம்பு தான் செம மாஸ்: அமர் கதாபாத்திரம் கண்டிப்பாக தக் லைஃப் படத்தை தாங்கி பிடிக்கும். இடைவேளை காட்சியில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கு இடையே நடக்கும் அந்த யுத்தம் கொல மாஸ். இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு சொல்லும் இடமெல்லாம் செம ஃபயர் என இந்த நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

பைசா வசூல் படம்: “கல்ட் கிளாசிக் வித் பேங்கர் இன்டர்வெல், ஏற்கனவே பழக்கப்பட்ட கதை போலவே ஆரம்பித்தாலும், கொஞ்ச நேரத்தில் படம் பிக்கப் ஆகிவிடுகிறது. அதன் பின்னர், கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பு மற்றும் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள விதம் படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. கமல்ஹாசனுக்கு கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய பைசா வசூல் படமாக அமையும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ரொம்ப ஆவரேஜ்: விமர்சகர் வெங்கி, தனது எக்ஸ் தள பக்கத்தில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்த தக் லைஃப் திரைப்படம் ரொம்பவே ஸ்லோவாக முதல் பாதி செல்வதாகவும், கணிக்கப்பட்ட கதையாகவே படம் நகர்வது பொறுமையை சோதிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர்: தக் லைஃப் படத்துக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக கமல் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டி விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இந்த ரசிகர் படம் பிளாக்பஸ்டர் என்றும் 5க்கு 4.75 ரேட்டிங் கொடுக்கலாம் என்றும் தரமான கிளைமேக்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில், தக் லைஃப் படத்தின் முழு விமர்சனத்தை நமது சைட்டில் காணலாம்.

வரும் பொங்கலுக்கு விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்தாண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

விஜய் கடைசியாக நடித்த தி கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார் அதில் துப்பாக்கியை புடிங்க சிவா என விஜய் வசனம் பேசுவார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்பொழுது ஒரே நாளில் வெளியாகும் இருவரின் திரைப்படமும் ஒருவித இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

டொவினோவின் நரிவேட்டை – ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி

0

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்!

0

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், நடிகர், நடிகைகள் அழகுக்காகவும், தோற்ற பொழிவிற்காகவும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்ருதிஹாசன் அளித்த பதிலின் படி, “மக்கள் மற்றவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சைகளின் மூலம் உடலில் மாற்றங்களைக் கொண்டு வருவது எந்தவொரு தவறும் கிடையாது.

அதுவும் மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ, அழகையோ, தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தான் தவறு” எனக் கூறினார்.


‘மதராஸி’ என்று டைட்டில் வைத்தது ஏன்? – ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

0

தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு ‘மதராஸி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்த ‘மதராஸி’ படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும்.

வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள்.

அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,” என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.