Home Blog Page 49

புதிய சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அந்த படம் திரைக்கு வந்தபோது லெக்சஸ் என்ற ஒரு காரை அவருக்கு பரிசாக வழங்கினார் கமல்.

அந்த காரின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார்.

இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் கடந்து விடும். ஸ்மார்ட்போன் வசதியுடன் அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். அதோடு இந்த கார் ஒரு லிட்டருக்கு 12 முதல் 13 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‛ஹே ராம்’ முழு படத்தையும் யூ-டியூபில் வெளியிட்ட கமல்

0

கடந்த 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹே ராம்’. இதில் ஷாரூக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் அதிக பேசப்படும் படமாக ஹே ராம் இருந்து வருகிறது. இந்தக்காலக்கட்டத்தில் இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என பல கூறி வந்தனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் இந்த படத்தின் முழு தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். படம் வெளியான 22 மணிநேரத்தில் 2.21 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

‛‛இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படத்திற்கென்று ஒரு இடம் எப்போதும் இருக்கும். இந்திய சினிமாவின் ஆக சிறந்த படைப்பு ஹேராம்… கமல் 200 வருஷம் வாழ்வான் வாலி சொன்னது. ஹே ராம் படம் 200 வருஷம் அல்ல இன்னும் ஆயிரம் வருடம் கமல் சார் வாழ்வார்” என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் புது வீட்டில் குடியேறுவது போல காட்சிகள் வர இருக்கிறது. தற்போது கிரஹப்ரவேசத்திற்கு ஏற்பாடுகள் நடப்பது போல் தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என மூத்த அண்ணியின் பெயர் தான் வைத்து இருக்கின்றனர் என்பதும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

மொத்த குடும்பமும் விரைவில் புது வீட்டுக்கு செல்ல இருக்கும் நிலையில் அதோடு சீரியல் முடிய வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாக்ராமில் இது பற்றி பதிவிட்டு இருக்கிறார். “பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா?” என அவர் கேள்விக்குறி மட்டும் வைத்து இருக்கிறார்.

அதனால் சீரியல் முடிவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடுத்து இரண்டாம் பாகம் தொடங்க்கிடாதீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?

0

பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளராலும் மிக பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். அதனாலேயே அந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங்.

தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் 7ம் சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் பரவி வருகிறது.

அதில் முதல் ஆளாக பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தான் வர போகிறார் என கூறப்படுகிறது. ‘பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்..’ என செய்தி வாசித்து பாப்புலர் ஆன ரஞ்சித் பிக் பாஸ் வந்தால் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஜவான் புரோமோ படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ள விஜய்சேதுபதி

0

நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ, அதன் பலனாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது குறித்த புரோமோக்கள் தொடர்ந்து வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு என தனியாக புரோமோ வீடியோ வெளியாக இருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ஹிந்தியில் ஒன்றிரண்டு படங்களில் மற்றும் வெப் சீரிஸில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் ஷாருக்கானுடன் நடித்துள்ள இந்த ஜவான் படத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு பாலிவுட்டிலும் அவருக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனம் கபூரை விமர்சிக்கவில்லை : வருத்தம் தெரிவித்த ராணா

0

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார் துல்கர் சல்மான். அந்தவகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துல்கரின் நண்பர்களான ராணா மற்றும் நானி ஆகிய இளம் நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் துல்கர் சல்மானின் பொறுமையையும் அமைதியையும் குறித்து பாராட்டும் விதமாக ராணா பேசும்போது, அவர் தன்னை அறியாமல் போகிற போக்கில் பாலிவுட் நடிகை சோனம் கபூரை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டது. .

அந்த நிகழ்வில் ராணா பேசும்போது, “துல்கர் சல்மானும், நானும் ஒரே நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள். அவர் என்னுடைய ஜூனியர். ஒருமுறை எனது வீட்டின் அருகே துல்கர் சல்மான் நடித்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கே துல்கர் சல்மான் ஒரு ஓரமாக நின்று புரடக்சன் பையனுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை லண்டனில் தனது கணவருடன் ஷாப்பிங் செய்த விஷயத்தை செல்போனில் சத்தமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதனால் அப்போது படமாக்கப்பட்ட காட்சிகளில் அவரால் முழு ஈடுபாட்டையும் செலுத்த முடியாததால் ஒரு முழுமையான தரத்துடன் காட்சிகளை படமாக்க முடியவில்லை. ஆனாலும் துல்கர் சல்மான் இந்த சூழலை அமைதியாக எதிர்கொண்டு தனது டென்ஷனையும் குறைத்துக்கொண்டு மிக பொறுமையாக இருந்தார். துல்கர் என்றாலே எங்களுக்கு அவர் அப்படித்தான்” என்று பேசினார்.

ராணாவின் இந்த பேச்சு குறித்த வீடியோக்களும் செய்திகளும் வெளியான உடனே ராணா குறிப்பிட்டு பேசிய நடிகை, துல்கர் சல்மான் இந்தியில் நடித்த சோயா பேக்டர் என்கிற படத்தில் அவருடன் நடித்த சோனம் கபூர் பற்றி தான் என பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட ஆரம்பித்தனர்.

இது பின்னர் ராணாவின் கவனத்திற்கு வந்ததும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தான் சோனம் கபூர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அப்படி சொன்னதாக யாரும் நினைத்தால் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தெறிக்க ஹரோல்ட் தாஸ் அதிரடி.. லியோ படத்தின் புதிய அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

லியோ படத்தின் புதிய அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸின் தொடர்பாக அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

 

தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

சமீபத்தில் தனுஷ் 51வது படமாக சேகர் கம்முலா இயக்கும் படம் உருவாகிறது, இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ராஷ்மிகா தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததைத் தொடர்ந்து இப்போது தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

பத்ரிநாத் கோவிலில் ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்

0

ஜெயிலர் படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து நேற்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்றார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.