Home Blog Page 6

விஷாலுக்கு என்னாச்சி? அப்போலோ மருத்துவமனை…

0

சென்னையில் நடைபெற்ற “மதகஜராஜா” செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கை நடுங்கியபடியும், குரல் நடுங்கியும் பிரபல நடிகர் விஷால் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்தது. விஷாலுக்கு என்ன நடந்தது என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலை இருந்து விஷாலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. 

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போதும், படம் வெளியாத நிலையில், இந்த பொங்கல் பண்டிகையொட்டி இப்படம் 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட விஷால் பார்ப்பதற்கே மிகவும் சோர்வுடன், கண்கள் சிவந்தபடி, மைக்கை பிடித்து பேசமுடியாமல் இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதைடுத்து, இணையத்தில் விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ காட்டுத்தீ போல பரவியது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா “காய்ச்சல் வந்தால் ஏன் கை நடுங்க வேண்டும், காய்ச்சல் இருக்கும் போது எதற்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் ” என்று பேசி இருந்தார்.

இவ்வாறு பல கருத்துக்கள் எழுந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து விஷால் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், அவர் முழுமையான படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு” அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஷால் குறித்து ரசிகர்கள் அனைவரும் விசாரித்து வருகிறார்கள்.

விஷால் காதில் சொன்னது இதுதான்..!

0

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகவும் பிக் பாஸ் சீசன் 8ல் இருந்தே எலிமினேஷன் ஆகி வெளியே வந்த அன்ஷிதா மற்றும் ஜெப்ரி சமீபத்தில் பிக்பாஸ் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர். கலகலப்பாக பேசிய அன்ஷிதா வெளியேறும் முன் விஷால் காதில் இதுதான் சொன்னேன் என்று ஓபனாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரங்களில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது அதில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா எலிமினேஷன் ஆனார்கள். தற்போது பிக்பாஸ் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்ஷிதாவிடம் தொகுப்பாளர் சபரி “விஷால் காதில் என்ன சொன்னிங்க?” என்று கேட்டார். 

அதற்கு அன்ஷிதா இவ்வாறு பதிலளித்தார் ” வெளிய எல்லாரும் வேற மாதிரி சொல்லுறாங்க, அர்னவ் பெயர் சொன்னதா சொல்லுறாங்க. உண்மைக்கும் நான் லவ் யு எல்லாம் சொல்லவில்லை மக்களே. அப்படி சொல்லணும் என்றா ஓபனாக சொல்லி இருப்பேன். நான் பிக் பாஸ் வீட்டுல இருந்துட்டு வந்து இருக்கேன் சோ பயம் இல்லை அங்கையே லவ் சொல்லணும் என்றால் சொல்லி இருப்பேன். உண்மைக்கும் நான் விஷால் காதில் சொன்னது என்னுடைய முன்னால் காதலனின் பெயர் தான். காதலும் சொல்லவில்லை, அர்னவின் பெயரும் சொல்லவில்லை” என்று ஓபனாக கூறினார்.

கிங்ஸ்டன் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு,

0

ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் – திவ்ய பாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

https://twitter.com/gvprakash/status/1875854777047003514

இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6.1 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் உருவாகும் முதல் கடல் ஃபேண்டசியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமாகும். சமீபத்தில் ஜிவி. பிரகாஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த கெஸ்ட்

0

பிக் பாஸ் 8 தற்போது 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ரானவ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் மஞ்சரி வெளியேறவுள்ளார்.

ஆம், இந்த வாரம் டபுள் எலிமினேஷன். இந்த 8வது சீசனில் இது நான்காவது முறையாக நடக்கும் டபுள் எலிமினேஷன் ஆகும். இந்த வாரம் ரானவ் மற்றும் மஞ்சரி வெளியேறிய நிலையில், மீதம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள். இதில் யார் வெற்றிபெற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில், வழக்கமாக அங்கிருக்கும் ஆடியன்ஸ் இடம் விஜய் சேதுபதி கருத்துக்களை கேட்பார். அப்போது, அந்த கூட்டத்தில் விஜய் சேதுபதியுடன் படித்த நீண்ட கால நண்பர் தனது குடும்பத்துடன் வந்து அமர்ந்திருக்கிறார்.

தனது நண்பனை பார்த்த விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் திகைத்து போக, அவருடைய மகன்களிடம் படிப்பை பற்றி பேசினார். யார் எதிர்பார்க்காமல் நடந்த இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/DEaXPRyyAEH/?utm_source=ig_embed&utm_campaign=invalid&ig_rid=5207a208-c7e3-4dc0-aed0-c9ea75f37076

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா அஜித் – தனுஷ் படங்கள்?

0

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி இறுதியில் ’விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அஜித்தின் இன்னொரு படமான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகிய இந்த படம், ஏற்கனவே பொங்கல் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனுஷ் நடித்து இயக்கி வரும் ’இட்லி கடை’ என்ற திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தமிழ் புத்தாண்டு திருநாளில் அஜித் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரூ.100 கோடி வசூலை கடந்த ‘மார்கோ’

0

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த உன்னி முகுந்தன்.

இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 20-ந் தேதி வெளியான படம் ‘மார்கோ’. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய ‘கே ஜி எப், சலார்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்து வருகிறது. உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு, கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NVRCinema/status/1875883718298210733

சேனலுடன் சண்டை போட்டாரா விஜய் சேதுபதி.?

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் தான் மஞ்சரி. இவர் சிறந்த பேச்சாளராக திகழ்கிறார். 

எனினும் இறுதியாக நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் மஞ்ரியும் ராணாவும் எலிமினேட் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மஞ்சரி வெளி ஏறுவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 

அதன்படி தெரியவருகையில், மஞ்சரிக்கு பிஆர் டீம் இல்லை.. அவர் சிறந்த பேச்சாளராக காணப்படுகின்றார்.. அத்துடன் பிக்பாஸ் வைக்கும் டாஸ்க்குகளிலும் ஸ்ட்ராங்கான ஒரு போட்டியாளராக காணப்படுகின்றார்.. இந்த காரணங்களுக்காக இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனில் மஞ்சரியை காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதி போராடியுள்ளார்.

ஆனாலும் சேனல் தரப்பில் எங்களுக்கு சிறந்த பேச்சாளர் வேண்டாம்.. சிறந்த நடிகர் தான் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மஞ்சரியை எலிமினேட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி சேனலில் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டுக்கு ஏற்றார் போல தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் தான் சொல்வதை சேனல் தரப்பிலிருந்து கேட்பதில்லை என்று பிக் பாஸ் மேடையிலேயே அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரத்தில் முடிவடைய உள்ளது. 

இதில் டைட்டில் வின்னராக டிஆர்பி டீம் இல்லாத ஒருவராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியாளராக உள்ள ஒருவரையும் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றி அப்டேட் கொடுத்த கல்யாண் மாஸ்டர்..!

0

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார்.

அதில் இந்த படத்தில் உள்ள பாடலில் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.அவரது நடனத்தை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.. இந்தப் பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நேசிப்பாயா பட பாடல் தொகுப்பு

0

நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு’ என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, ராஜா, கல்கி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் ஆக்ஷன் மற்றும் காதல் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று இடம் பெற்ற நிலையில் இப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் நிலையில் அப் பாடல்க்ளின் தொகுப்பை ஒரு அல்பமாக வெளியிட்டுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷ்ணு வரதன் இயக்கிய நெசிப்பய முழு ஆல்பம் ஆடியோ ஜூக்பாக்ஸை வழங்குகிறோம்.

`என்னை நீங்காதே நீ’ வீடியோ பாடல் வெளியானது

0

‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

https://twitter.com/kishendas/status/1875549555464532451

இந்நிலையில் படத்தின் பாடலான என்னை நீங்காதே நீ பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.