Home Blog Page 21

அஜித்தின் 63வது படத்தில் தெலுங்கு நடிகையா?

0

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை மகிழ்  திருமேனி இயக்குகின்றார்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த படத்திற்காக அஜித் குமார் எடுத்த ரிஸ்கை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார்.

மேலும் குட் பேட் அக்லி படத்தின் வில்லன் ரோலில் நடிப்பதற்கு பாபி தியோல் நடிக்க கமிட்டான நிலையில் அவர் விலகி இருந்தார். அதன்பின் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் எஸ்.ஜே சூர்யா இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.அஜித்தின் 63வது படத்தில் ஸ்ரீ லீலா நடித்தால் அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும், இவர் மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டு இருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 44வது கதையின் புதிய அப்டேட்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைத்தும் உள்ளார்.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதோடு, இந்த ஆண்டுக்குள் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமும் இதுவாகும்.

சூர்யாவின் 44 வது படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதோடு, இதன் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சூர்யா நடிக்க உள்ள 44வது படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி  உள்ளன

அதன்படி சூர்யாவின் 44வது படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும், இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுவும் சரித்திர கதை அம்சம் கொண்ட அட்வெஞ்சர் படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சூர்யாவின் 44வது படத்தை நடித்து முடித்த பிறகு சுதா கொங்கார இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் படங்களில் சூர்யா நடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 இல் உள்ள வரும் 90ஸ் சாக்லேட் ஹீரோ.

0

லோகேஷ்மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் மல்டி ஸ்டார் படமாக தான் இப்படம் உருவாக இருக்கிறது.

ஏனென்றால் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி
ஷெரீப் என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தனர். அதேபோல் லோகேஷின் விக்ரம், லியோ போன்ற படங்களும் மல்டி ஸ்டார் படமாக தான் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் சத்யராஜை நடிக்க வைக்க உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் சத்யராஜை லோகேஷ் சந்திக்கவே இல்லையாம். ஏனென்றால் தலைவர் 171 படத்தின் கதையை அவரிடம் சொல்ல வேண்டும்.

அந்தக் கதை, கதாபாத்திரம் பிடித்தால் தான் ஓகே சொல்லுவார். இப்படி நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது. இதனால் தெலுங்கு நடிகரை இப்போது தலைவர் 171ல் புக் செய்துள்ளார் லோகேஷ்.

தமிழ் சினிமாவில் ரஜினி எப்படியோ அவர் தான் தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனா. அவர் இப்போதும் சில படங்களில் நடித்த வந்த நிலையில் தலைவர் 171ல் கமிட்டாகி இருக்கிறார்.

இவர் தமிழில் கார்த்திக் உடன் தோழா படத்தில் நடித்திருந்தார். மேலும் 90களில் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக நாகர்ஜுனா வலம் வந்தார். இப்போது திரும்பவும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்

0

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தின் கதையின் படி மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாட்டில் வாட்டர் மற்றும் கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான வணிக அரசியல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பல மினரல் வாட்டர் குடிப்பதற்கு தயங்கும் அளவுக்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் தண்ணீர் விவகாரம் குறித்த கதையை ஆழமாக கூறிய பிஎஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தில் போதை விவகாரம் குறித்த பின்னணியை சொல்ல இருக்கிறாராம். கடந்த சில வாரங்களாகவே போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதும், அவருக்கும் திரையுலகில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பிஎஸ் மித்ரன் தற்போதைய சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஊடகத்திற்கு வெங்கட் பிரபு பேட்டி..!

0

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார் என்றும் அவர் வாக்களிப்பதற்காக சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

விஜய் சென்னை திரும்பினாலும் ‘கோட்’ படத்தின் குழுவினர் மாஸ்கோவில் தான் தற்போது உள்ளனர் என்றும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியளித்த போது சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ‘இந்த படத்தில் மாஸ்கோ ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது என்றும் இந்தியர்கள் பார்க்காத பல மாஸ்கோவில் உள்ள இடங்களை இந்த படத்தில் நாங்கள் காண்பிக்க விருப்பப்பட்டு உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சில பாலிவுட் படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டு இருந்தாலும் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் மாஸ்கோவில் படமாக்கப்படவில்லை என்றும் எங்கள் ஆடியன்ஸ்களுக்கு மாஸ்கோவை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து ஒரு டாக்குமென்டரி படமே மாஸ்கோவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பதும் பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.

https://x.com/RT_com/status/1781744643127890425

எதிர்மறையான கதாபாத்திரத்தில் சித்திக் என்டிரி

0

அதிகாரி! மலையாள நடிகர் சித்திக் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர்கள் நடிகரின் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வ புதுப்பிப்பை அறிவித்தனர், அவரை திட்டத்திற்கு வரவேற்றனர். புதிய அப்டேட்டின் தலைப்பு, “வீரதீராசூரனுக்காக எங்களுடன் மற்றொரு சிறந்த நடிகர் சித்திக் இணைந்து  இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த சித்திக், 1996 ஆம் ஆண்டு சுபாஷ் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். நடிகர் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்தில் தான் தமிழில் கடைசியாக நடித்தார். வீர தீர சூரன் விக்ரம் மற்றும் சித்திக்கின் முதல் திரை ஒத்துழைப்பையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மலையாள நடிகர் வரவிருக்கும் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை அறிய ரசிகர்கள் இப்போது ஆர்வமாக உள்ளனர்.

https://x.com/sri50/status/1781962838074065240

”இங்கநான்தான் கிங்கு” கதாபாத்திரங்களின் அபடேட்

0

சந்தானம் STAR விஜய்யின் லொள்ளு சபையில் நடித்ததன் மூலம் உலகுக்கு அறிமுகம் ஆனார்.அங்கு அவர் தமிழ் திரைப்படங்களின் ஸ்பூஃப்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது முக்கிய சினிமாவில் வாய்ப்புகளைப் பெற வழிவகுத்தது, குறிப்பாக மன்மதன் (2004), சச்சியன் (2005) மற்றும் பொல்லாதவன் (2007) ஆகியவற்றில் பாராட்டப்பட்ட நடிப்புடன் துணைப் பாத்திரத்தில் நடித்தார். அவரது நகைச்சுவைத் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்ட அவர், “காமெடி சூப்பர் ஸ்டார்” என்ற பெயரைப் பெற்றார். பாரிஸ் ஜெயராஜ் (2021) படத்தில் யூடியூபராகவும், ஏஜென்ட் கண்ணாயிரம் (2022) இல் துப்பறியும் நபராகவும் அவரது சமீபத்திய பாத்திரங்கள் அடங்கும்.

அவரின் புதிய படமான  நான் தான் கிங்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எழிச்சூர் அரவிந்தன். படத்தின் இசையமைப்பாளர் டி இமான், திரைப்பட தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஓம் நாராயணனும் எடிட்டராக எம் தியாகராஜனும் உள்ளனர். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் கடைசியாகப் பார்த்த சந்தானத்தின் தனித்துவமான நகைச்சுவை பாணி இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகரும் காமெடி நடிகருமான சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை வெளியிடப்பட்டது, இதில் சந்தானம் உடன் நடிகர்கள் தம்பி ராமையா மற்றும் பால சரவணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். போஸ்டர் வெளியிடும் தேதியை வெளியிட்டது: மே 10. கோபுரம் ஃபிலிம்ஸ் பதாகையின் கீழ் சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இந்த திட்டம், வடக்குப்பட்டி ராமசாமி (2024) படத்தில் அவர் தோன்றியதைத் தொடர்ந்து சந்தானம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த வெளியீட்டைக் குறிக்கிறது.

 

இந்த போஸ்டரில் சந்தானம் வெள்ளை நிற சீருடையில் சிவப்பு வாளியை பிடித்தபடி, பல்வேறு உடைகளில் மற்ற நடிகர்கள் சூழ இருப்பது போல் இடம்பெற்றுள்ளது. ஒரு மடடோர் வேன் காட்சியின் பின்னணியை உருவாக்குகிறது. ஆனந்த் நாராயண் இயக்கிய இந்தப் படம், போஸ்டரில் டாக்டர் கோட் அணிந்திருக்கும் ப்ரியாலயாவின் நடிப்பு அறிமுகமாகும். குழும நடிகர்கள் முனிஷ்காந்த், மறைந்த மனோபாலா, விவேக் பிரசன்னா, மாறன் மற்றும் கூல் சுரேஸ் மற்றும் பலர் உள்ளனர்.

இதற்கமைய நாளை (22.04.2024) காலை 10 மணிக்கு #இங்கநான்தான் கிங்கு👑 படத்தின் சந்தானத்தின் மற்றும் அனைவரதும்  கதாபாத்திரங்களை சந்திக்க தயாராகுங்கள் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் 

https://x.com/gopuramfilms/status/1781926170579058738

சூது கவ்வும்2 நாடும் நாட்டு மக்களும்

0

தமிழ்த் திரைப்படமான சூது கவ்வும் 2 அதன் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் உள்ளது, இது 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த சூது கவ்வும் படத்தின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. சூது கவ்வும்: நாடும் நாட்டு மக்களும் என்ற தலைப்பிலான இதன் தொடர்ச்சி, முதல் படத்தின் நிகழ்வுகளை எங்கே நிறுத்தியது என்று கூறப்படுகிறது.

கருணாகரன், ரமேஷ் திலக், யோக் ஜேபி மற்றும் ராதா ரவி உட்பட சில அசல் நடிகர்கள் மீண்டும் நடிக்கும் படம். நடிகர் சிவா முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி அதன் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தாலும், அதன் தொடர்ச்சியை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்குகிறார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான @ThirukumaranEnt இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, படம் முடியும் தருவாயில் உள்ள செய்தியை திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளுடன் பகிர்ந்துள்ளது. அந்த ட்வீட்டில், “அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட #சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.  கர்த்தருடைய தேவன் விரைவில், கும்பலுடன், புதிய விதிகளுடன் வருகிறார்!”

சூது கவ்வும் 2 திரைப்படம் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவா, சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் இசையமைக்க, கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 முதல் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய அசல் சூது கவ்வும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வம், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்திருந்தனர். 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மே 1, 2013 அன்று வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 35 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இப்படத்தின் முதல் பாடல் வௌியான நிலையில் இதன் இரண்டாவது பாடல் நாளை வெளியிடபடும் என குறிபிட்டுள்ளனர்.

https://x.com/elvoffl/status/1781676991608992240

வாரிசு நடிகர்கள் போட்டிபோட போகிறார்களா ?

0

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நிறைய ஹிட் படங்களை கொடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருபவர்.

இவரது நடிப்பில் அடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் Glimpse வீடியோக்கள் சில வெளியாகி உள்ளது.

மும்பையில் செட்டில் ஆகியுள்ள சூர்யா அண்மையில் ஓட்டு போட தனது தம்பி மற்றும் தந்தையுடன் வந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் மகன் தேவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

தேவ் பெல்ட் வாங்கிய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

https://x.com/CinemaWithAB/status/1781894446440915391

சன்னிலியோன் நிகழ்ச்சியக்கிடையில் சண்டை நடந்தது என்ன?

0

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.

 

இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.

இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் எம் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகின்றார். ஸ்பிலிட் வில்லா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இடையே திடீர் என மோதல்கள் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. அப்போது இடையில் வந்த சன்னி லியோன் அவர்கள் அனைவரையும் ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையால் திட்டி அமைதியாக்கியுள்ளார். குறித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்

https://www.instagram.com/reel/C5_COgCRE3q/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==