Home Blog Page 20

ராமம் ராகவம் படத்தின் டீசர்:

ராமம் ராகவம், தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படம், தயாரிப்பாளர் ப்ருத்வி பொலவரபு மற்றும் தொகுப்பாளர் பிரபாகர் ஆரிபகா ஆகியோரின் படைப்பு ஆழத்திலிருந்து உருவாகி, ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் என்ற பதாகையின் கீழ் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விறுவிறுப்பான கதையில் மதிப்புமிக்க நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திறமையான நடிகர் தன்ராஜ் இயக்குநராக அறிமுகமாகும்போது, ​​அவரது மகனாக நடிக்கிறார்.

முதல் பார்வையிலேயே “ராமம் ராகவம்” திரைப்படம் திரையுலகினர் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது. இன்று, தயாரிப்பாளர்கள் படத்தின் டீசரை வெளியிடுவதால், எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது, மறக்கமுடியாத அப்பா-மகன் சரித்திரத்தின் வாக்குறுதியுடன் பார்வையாளர்களை கிண்டல் செய்கிறது. சமுத்திரக்கனி மற்றும் தன்ராஜ் ஸ்கூட்டரில் பயணிப்பதை சித்தரிக்கும் போஸ்டரால் அலங்கரிக்கப்பட்ட டீஸர், ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டருக்கு களம் அமைக்கிறது.

தன்ராஜின் கதாபாத்திரமான ராகவா, ஒரு அடக்கமான பெட்ரோல் பங்க் ஊழியராக சித்தரிக்கப்படுவதன் மூலம் கதை விரிவடைகிறது. சமுத்திரக்கனியின் கேரக்டர், அவரது தந்தை, அவரது தொழிலைப் பற்றி வினவும்போது, ​​​​அவரது மகனின் திசையின்மை குறித்து புலம்புகிறார். அவர் அனைத்து சாத்தியமான கூட்டணிகளையும் கடுமையாக நிராகரிக்கிறார், அவருடைய கல்வித் திறமை இல்லாததால் அவரது மகனைத் தண்டிக்கிறார். தகப்பன்-மகன் இருவரும் தங்களின் இறுக்கமான உறவைப் பற்றிக் கொண்டு, பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும்போது உணர்ச்சிகள் அதிகமாக இயங்குகின்றன.

இருப்பினும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், டீஸர் ராகவாவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களின் காட்சிகளை வழங்குகிறது, ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது. வெளித்தோற்றத்தில் நன்கு தெரிந்த முன்மாதிரியாக இருந்தாலும், “ராமம் ராகவம்” ஒரு புத்துணர்ச்சியூட்டும் குடும்ப பொழுதுபோக்காக உறுதியளிக்கிறது, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான நீடித்த பந்தத்தைக் கொண்டாடுகிறது.

ஹைதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி, ராஜோலு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், ஹரிஷ் உத்தமன், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் ப்ருத்விராஜ் உள்ளிட்ட திறமையான குழும நடிகர்களைக் கொண்டுள்ளது. அருண் சிலுவேருவின் ஆத்மார்த்தமான இசையமைப்பாலும், துர்கா பிரசாத் கொல்லியின் மயக்கும் ஒளிப்பதிவினாலும், “ராமம் ராகவம்” அதன் இதயப்பூர்வமான கதையுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க தயாராக உள்ளது. மார்த்தாண்டன் கே வெங்கடேஷின் எடிட்டிங் திறமை, கதைசொல்லலுக்கு நேர்த்தியை சேர்க்கிறது, பார்வையாளர்களுக்கு தடையற்ற சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது. படத்தை பெரிய திரையில் கண்டு ரசிக்க திரையுலக ஆர்வலர்கள் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

https://x.com/DhanrajOffl/status/1784127161504542850

கல்கி 2898 கி.பி ரிலிஸ் டேட்

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கல்கி 2898 AD இன் தயாரிப்பாளர்கள் அமிதாப் பச்சனின் கதாபாத்திரக் காட்சியை வெளியிட்டனர், அது இணையத்தில் புயலை கிளப்பியது. அந்தப் பார்வையில் இருந்து, பிரபாஸ் நடிக்கும் இந்தப் படம் புராணங்கள் மற்றும் அறிவியல் புனைகதைகளின் கலவையாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது. நாக் அஸ்வின் இயக்குகிறார்.


சிறிது நேரத்திற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய புதுப்பிப்பு நாளை மாலை 05:00 மணிக்கு வெளிவரும் என்று அறிவித்தனர். இந்த அப்டேட் ரிலீஸ் தேதி அறிவிப்பா அல்லது பிரபாஸின் கேரக்டர் பார்வையா என்று பிரபாஸ் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

என்பதை அறிய நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும். தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வனி தத் கல்கி 2898 கி.பி.யை பயங்கரமான அளவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படம் ஜின் மாதம் 27ம் திகதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

https://x.com/Kalki2898AD/status/1784189891422646615 

https://x.com/PrabhasRaju/status/1784191127219814630

குட் நியுஸ் சொன்ன இர்ஃபான்…

0

பிரபல யூடியூபராக இருக்கும் இர்ஃபான் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் ஹோட்டல்களுக்கே அதிகம் ரிவ்யூ செய்து வருவதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்த நிலையில்… அதற்க்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக இருப்பவர் இர்பான். பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு பிரபலமாக இருக்கும் ஹோட்டல்களில் உணவுகளை சுவைத்து அதைப்பற்றி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் இர்பான். இவரது வீடியோக்களை பார்த்து பலர் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மிக குறுகிய காலத்தில், பிரபலமான இர்ஃபானை சுமார் யூடியூப்பில் 37 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள். பல பிரபலங்கள் இவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள்.

யூடியூபை தாண்டி, சமீப காலாக சில திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ள இர்ஃபான், இன்று முதல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு அசத்த உள்ளார்.

இவரை பற்றி அவ்வபோது மதவெறியுடன் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு இர்ஃபான் காட்டமாக தன்னுடைய தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது இர்ஃபான் 99 சதவீதம் முஸ்லிம் கடைகளுக்கு மட்டுமே ரிவ்யூ செய்து வருமானத்தை பெருக்கி வருவதாகவும்,  ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் நடத்தி வரும் கடைகளில் ரிவ்யூ செய்வதாக கூறினார்.

இதற்கு இர்ஃபான் அது எப்படி டா என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும், அங்க வந்து நொட்டுறீங்க… என கூறி இதற்க்கு முன் ரிவ்யூ செய்த இந்துக்களின் கடைகளின் பேயறைகளை கூறியுள்ளார். அதே போல் பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மதவெறியா திணிக்கிற உன் கிட்ட தான்டா இருக்கு செங்கல் சைக்கோ சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்நத ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.இவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் கவந்துக்கொண்டனர். இவர்கள் தற்போது கற்பமாக இருப்பதாக தெரிவுத்துள்ளனர்.பலர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.”வியா பிரக்ன்ட்” தமது சமுக வலைதலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அவர்கள் கடந்த காலத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகளையும் விவரித்துள்ளனர்.இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரலக்ஷ்மி சரத்குமாரின் சபரி

0

வரலட்சுமி சரத்குமார் சபரி ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். எட்ஜ் ஆஃப் தி சீட் த்ரில்லராக இருக்கும் இந்த படத்தை அனில் காட்ஸ் இயக்கியுள்ளார். இதற்கான விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் இன்று ஆல்பத்தின் முதல் பாடலான அனகனக ஓகா கதாலாவை வெளியிட்டனர்.

ஆஸ்கார் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடலை வெளியிட்டார், இந்த சந்தர்ப்பத்தில், “இந்த பாடல் சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தது, இதை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் மனைவி சுசித்ரா இந்த பாடலுக்கு நடனம் அமைத்தது எனக்கு மேலும் சிறப்பானதாக அமைந்தது. இது தாய்க்கும் மகளுக்கும் இடையிலான அழகான பிணைப்பை நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது.

இந்தப் பாடல் படத்தின் அடையாளமாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் மகேந்திர நாத் கோண்ட்லா தெரிவித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, பழம்பெரும் பாடகி கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார். ரஹ்மான் பாடல் வரிகளை தொகுத்துள்ளார். படம் மே 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

‘அரண்மனை 4’ டூப் இல்லாமல் செய்த ஸ்டண்ட்கள்..!

0

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’அரண்மனை 4’ படமும் அதே போல் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் போட்டி போட்டு ஆடிய பாடல் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் காட்சியின் வீடியோவும் இருக்கும் நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் ’அரண்மனை 4’ படத்திற்காக தமன்னா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து உள்ளாரா என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த பதிவில் தமன்னா ’அரண்மனை 4’ திரைப்படம் ரசிகர்களை அலற வைத்து பயமுறுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்திற்கு பின் உள்ள சில இனிமையான தருணங்களை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். இந்த படத்தில் பணி புரிந்தது சவால் ஆனதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த ஸ்டண்ட்களை எல்லாம் நானே ரிஸ்க் எடுத்து செய்து முடித்தேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்த பதிவு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு செய்யப்பட்ட நிலையில் அதற்குள் கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C6QNEmtLVHB/?utm_source=ig_web_copy_link

 

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ‘ராபர்’ .

0

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது . நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறான். ‘உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே’ என்றார் புத்தர். நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களை பாதிக்கின்றன’ என்கிறது தம்மபதம். நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே ‘ராபர்’ படத்தின் கதை.

‘ராபர்’ படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கவிதா கூறியபோது, ‘உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகள் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். ‘ராபர்’ படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன். நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாக குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.

’ராபர்’ திரைப்படம் படத்தின்’ டைட்டில் பர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மே மாதத்தின் இறுதியில் ராபர் படம் வெளியாகவுள்ளது.

ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?.

0

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் தனுஷ்.

கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.

தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது ராயன் படத்தின் ஷூட்டிங் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது ஆனால் தேர்தல் நடைபெறுவதால் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது.

ஜூன் மாதத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் படத்தை மீண்டும் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

கசிந்தது படங்கள் ராமாயணத் படபிடிப்பிலிருந்து

0

டங்கல் இயக்குனர் நித்தேஷ் திவாரி தற்போது மதிப்புமிக்க ராமாயணத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முறையே ராமர், சீதை மற்றும் ராவணன் வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் இப்படம் மும்முனை படமாக உருவாகி வருகிறது.

செட்டில் இருந்து ரன்பீர் மற்றும் சாய் பல்லவியின் படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன, மேலும் அவை சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளன. ராமர் மற்றும் சீதையாக ரன்பீரும் சாய் பல்லவியும் அசத்தியுள்ளனர். சஞ்சு நடிகர் வேட்டி அணிந்து நீண்ட கூந்தலுடன் காணப்பட்டார். ராமாவின் கேரக்டருக்கு சரியான தோற்றத்தை பெற நடிகர் நிறைய கிலோவை குறைத்துள்ளார். மறுபுறம், சாய் பல்லவி, புடவையில் நகைகளை ஏற்றி அசத்தினார்.

படப்பிடிப்பில் இருந்து கசிந்தது இது முதல் அல்ல, இதனால் ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். மேலும் கசிவுகளைத் தடுக்க தயாரிப்பாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் இது உற்சாகத்தைக் கொல்லும். இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

குறிப்பு: கசிந்த படங்களைப் பகிர்வது நெறிமுறை அல்ல என்பதால், அவற்றை எங்கள் இணையதளத்தில் பகிர்வதைத் தவிர்க்கிறோம்.

வயது அதிகமான நடிகையுடன் இணையும் கவின்..

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. அதில் கவின் 5வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். மேலும் கவின் 6வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ளது என அவரே கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், அடுத்ததாக கவின் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன்மூலம் கவின் – ஆண்ட்ரியா முதல் முறையாக இணைகிறார்கள்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.

ராஜூ முருகனின் அடுத்த ஹீரோ இவர்தான்..!

0

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்தது ராஜூ முருகனை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டதாகவும் இனிமேல் பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் பெரிய நடிகரும் வேண்டாம் என்று தனது அடுத்த படத்திற்கு சசிகுமாரை நாயகனாக தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ராஜூ முருகன் ‘குக்கூ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு ’ஜோக்கர்’ ’ஜிப்சி’ ஆகிய படங்களை இயக்கினார். கடந்தாண்டு அவர் கார்த்தி நடிப்பில் உருவான ’ஜப்பான்’ படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன்  வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததோடு விமர்சன ரீதியிலும் படுமோசமாக விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்த ராஜூ முருகன் இனிமேல் பெரிய நடிகரும் வேண்டாம், பெரிய பட்ஜெட்டும் வேண்டாம் என்று முடிவு செய்து சூப்பர் கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம்.

இந்த கதையை சமீபத்தில் சசிக்குமாரிடம் ராஜூ முருகன் கூறிய போது அவருக்கு அந்த கதை பிடித்து விட்டதை அடுத்து அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சசிகுமார் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அந்த படங்களை ஒத்தி வைத்துவிட்டு ராஜூ முருகன் படத்தில் முதலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.