Home Blog Page 20

ஹரிப்பிரியா ரொமான்ஸ் வீடியோ வைரல்..!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா ரொமான்ஸுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் மீண்டும் காதலில் விழுந்து விட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுந்து வருகின்றனர்.

’எதிர்நீச்சல்’ சீரியலில்  நந்தினி என்ற கேரக்டரில் ஹரிப்பிரியா நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு பல எபிசோடுகளில் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஹரிப்பிரியா அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ் பார்வையுடன் கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவின் பின்னணியில் ’அவனோடு பேசும் போது அதுபோல வார்த்தை ஏது, உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்’ என்ற த்ரிஷா நடித்த ‘ராங்கி’ பட பாடல் பின்னணியில் ஒலிக்கும் நிலையில் மீண்டும் ஹரிப்பிரியாவுக்கு காதல் வந்து விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஹரிப்பிரியா கடந்த 2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C5_jMYxy5S4/?utm_source=ig_web_copy_link

விசில போட்டு ஆட்டைய போட்டாரா வெங்கட் பிரபு?

0

தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று அமோக வரவேற்பு காணப்படும். அதிலும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.

இளைய தளபதி நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து இருந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனது கட்சியை ஆரம்பித்து தனது ரசிகர்களையே உறுப்பினர்களாக மாற்றி தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடித்தவரும் கோட் படமும், அதற்கு அடுத்ததாக கமிட்டாகியுள்ள விஜயின் 69ஆவது படத்துடனும் தான் சினிமா துறையில் இருந்து ஓய்வெடுத்து முற்றாக அரசியலில் பயணிக்க இருப்பதாக அறிவிப்பொன்றை  வெளியிட்டிருந்தார்.

 

ரணமாக தற்போது விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  காணப்படுகிறது. ஒவ்வொரு அப்டேட்களையும் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில், கோட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு ஏற்கனவே இயக்கியிருந்த படத்தின் கதை தான் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தின் கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி விஜயின் கோட் படம் சில வருடங்களுக்கு முன்பு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலாஜி  படம் வெளியாகி இருந்தது. அதில் லோகம் என்ற குறும்படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வருண் அதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது லோகம் தான் கோட் படத்தின் கதையாக இருக்குமோ ஆன ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனாவுக்கு நடமாடும் பூக் கடை

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து எல்லாரையும் கீழே வர சொல்லி, மீனாவுக்கு நடமாடும் பூக் கடை என்று புது பைக் வாங்கி கொடுக்கிறார். இதை பார்த்து விஜயா, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் விஜயா பெயர்ல பாலரம்மா கடை வச்சிச்சு ஆனா அது மாறிட்டு, மீனா பூக்கடையும் தூக்கிட்டு போய்ட்டாங்க. அதனால அந்த பெயர் ராசி இல்லை என்று பைக்க்கு மீனா என்று பெயர் வைத்துள்ளார். அதன்பின் முத்துவை ஏற்றிக் கொண்டு பைக்ல ரவுண்டு போகிறார்.

மறுபக்கம் மனோஜ், எல்லாரும் முன்னுக்கு வாறாங்க, நான் மட்டும் கீழ போய்ட்டு இருக்கன். யாரும் எனக்கு உதவி செய்ய இல்லை என புலம்ப, நமக்கு காசு வேணும். அதுக்கு நீ அங்கிள்ட வாங்கின 27 லட்சத்தை எடுத்துட்டு போன ஜீவாவை கண்டு பிடிக்கணும் என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து மீனா தனது வீட்டுக்கு சென்று புது பைக் வாங்கியதை காட்டி மகிழ்கிறார். ஆனாலும் சத்யா முத்துவை அசிங்கப்படுத்துவது போல பேச, மீனாவின் அம்மா அவருக்கு பேசுகிறார்.

இதையடுத்து, மனோஜ், ரோகிணி வெளிநாட்டு முகவர் இருக்கும் இடத்திற்கு சென்று, ஏற்கனவே நான் இங்க வந்து இருக்கன் ஒரு பொண்ண கனடா அனுப்பி வைக்க என்று ஜுவாவின் போட்டோவை காட்ட, நீ இன்னும் ஜீவாட போட்டோவ போன்ல வச்சா இருக்கா என பேச, இல்லை அது மெயில்ல இருந்து எடுத்தன் என சொல்லுகிறார். அவருக்கு போட்டோவை காட்ட, அவர் தெரியவில்லை என்று சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

கிளாமர் நடனத்தில் டஃப் கொடுக்கும் நடிகை

0

பல லட்சம் ரசிகர்களை கொண்ட இந்திய நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இப்படம் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தமன்னாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என படத்தின் இயக்குனர் சுந்தர்.சி கூறியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து ப்ரோமோ பாடல் வெளிவந்து டிரெண்டிங் ஆனது.

இந்த கிளாமர் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர். ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் காவ்யா அறிவுமணி, இந்த பாடலுக்கு கிளாமராக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை காவ்யா அறிவுமணி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/reel/C6AYTWiyIJz/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

லார்ன்சின் அதிகாரம் பட அப்டேட்

0

ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 ஆம் படம் இது. அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக ‘ஹண்டர்’ படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார். இப்படம் 2 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் இப்படத்தை எடுக்கவுள்ளனர். கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இதுக்குறித்து ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் சார், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் மிரண்டுவிட்டேன், மிகவும் பிரம்மிப்பாக இருந்தது.

வெற்றி மாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் முன்பு அறிவித்த இரண்டு படங்களுக்கு பிறகு இந்த படத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது காத்திருப்புக்கு மதிப்பானது மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐயா இதை நடந்ததற்கு. உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும். என பதிவிட்டுள்ளார்.

https://x.com/offl_Lawrence/status/1782025269752000887

 

கல்கி 2898 adல் பாலிவுட்டின் ஹரோ பச்சன்

0

இப்படத்தில் அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் நடிக்கிறார்

பான் இந்தியன் நட்சத்திரமான பிரபாஸ் அடுத்ததாக மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை என்டர்டெய்னர் கல்கி 2898 AD இல் நடிக்கிறார். இப்படம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாசிக் கிளாசிக் மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இதன் இயக்குனர். வாக்குறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் பாலிவுட்டின் ஷாஹேன்ஷா அமிதாப் பச்சன் இடம்பெறும் புதிய காட்சியை அறிமுகப்படுத்தினர். இந்தப் படத்தில் அவர் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்.

பார்வையில், ஒரு குழந்தை பிக் பியிடம் அவர் அழியாதவரா என்று கேட்கிறது. தான் அஸ்வத்தம்மா என்றும், துவாபர் யுகத்தில் இருந்து தசாவதாரத்திற்காக காத்திருப்பதாகவும் அமிதாப் கூறுகிறார். பார்வை குறுகியதாக இருந்தாலும், அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது, படத்தை எதிர்நோக்குகிறது. காட்சிகள் பிரமாண்டமாக இருக்க, சந்தோஷ் நாராயணனின் இசை ஆர்வத்தை உருவாக்குகிறது. தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வனி தத் தயாரிப்பாளர். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்ப்படவில்லை

 

https://x.com/Chrissuccess/status/1782048367293477113

சிவாஜி மகனால் பெயர் அறிவிக்கப்பட்ட படம்…

0

நடிகர்  எனும லால் ஜூனியரால் இயக்கப்பட்டு சுவின் எஸ். சோமசேகரனால் எழுதப்பட்ட வரவிருக்கும் இந்திய மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.இது மே 3, 2024 அன்று வெளியிடப்படும்  இப்படத்தை காட்ஸ்பீட் சினிமா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பாவனா ஆகியோர் தலைமையில் ஒரு குழும நடிகர்கள் நடித்துள்ளனர், இந்த படம் கடினமான பாதையில் செல்லும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையையும் அவரது ஹீரோவின் பயணத்தையும் பின்தொடர்கிறது,

டேவிட் படிக்கல் ஒரு நடிகர் ஆவார். இது அவருக்கு டன்னிங்-க்ரூகர் விளைவை ஏற்படுத்துகிறது, மேலும் அவர் ஒரு நடிகராக தனது திறமைகள் மற்றும் திறன்களை மிகைப்படுத்தி மதிப்பிடத் தொடங்குகிறார். புகழில் குடித்துவிட்டு, கடந்த காலத்தால் ஆட்கொள்ளப்பட்ட டேவிட், தனது வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய மோசமான முடிவுகளை எடுக்கிறார். டேவிட்டின் சிக்கலான உளவியலைச் சுற்றியே கதை சுழல்கிறது மற்றும் அது அவரைக் கவனித்துக் கொள்ளும் நபர்களுடனான அவரது உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது, அவரது சுய-கண்டுபிடிப்பு செயல்முறை மற்றும் இறுதியில் அவர் எவ்வாறு சிறந்த மனிதராக மாறுகிறார் எனப்சூத கதையனி மையம ஆகும், 

படத்தின் படப்பிடிப்பு 11 ஜூலை 2023 அன்று தொடங்கியது.கொச்சி, மூணாறு, ஹைதராபாத், துபாய் மற்றும் காஷ்மீரில் 30 இடங்களில் படமாக்கப்பட்டது, இதன் படப்பிடிப்பு 110 நாட்கள் நீடித்தது.முதலில் நடிகர் திலகம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் தலைப்பு, அதே பெயரால் அறியப்பட்ட பழம்பெரும் தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகர்களின் வேண்டுகோளின் பேரில் ஜனவரி 2024 இல் அதிகாரப்பூர்வமாக நடிகர் என்று மாற்றப்பட்டது. 23 ஜனவரி 2024 அன்று பெயர் மாற்றத்தை அறிவிப்பதற்காக ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது, அதில் சிவாஜி கணேசனின் மகன் பிரபு கணேசன் கலந்து கொண்டார்.

நடிகர் 2024 மே 3ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. 

https://x.com/MythriOfficial/status/1781995238418252055

 

 

ராம் சரணின் கேம் சேஞ்சர் பற்றிய ஜூசி அப்டேட்

0

மெகா பவர்ஸ்டார் ராம் சரண், அரசியல் திரில்லரான கேம் சேஞ்சர் படத்திற்காக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர் சண்முகத்துடன் இணைந்துள்ளார். கியாரா அத்வானி நாயகியாக நடிக்கும் இந்த பிக்பாஸ், இந்த ஆண்டின் இறுதியில் பெரிய திரைகளில் வரவுள்ளது. ஒரு வாரம் நீடிக்கும் புதிய ஷெட்யூல் நாளை ஹைதராபாத்தில் தொடங்கும் என்பது லேட்டஸ்ட் அப்டேட். ராம் சரண் மற்றும் பிறருடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நவீன் சந்திரா இந்த காலடியில் இணைவார்கள். அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.

https://x.com/AlwaysRamCharan/status/1640286670116499457

பொன்னி சீரியல் நடிகை மொடுன் லுக்

0

விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் வைஷ்ணவி. அவர் இதற்கு முன்பு ராஜா ராணி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பொன்னி சீரியலில் அப்பாவி பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார் வைஷ்ணவி.

வைஷ்ணவி சீரியலில் மட்டும் தான் அப்படி, நிஜத்தில் செம ட்ரெண்டியானவர். அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் ஸ்டில்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கும் வைஷ்ணவி, ஷார்ட் உடையில் கிளாமராக வலம் வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ.

https://www.instagram.com/p/C6BQRyJRVMx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தினருடன் செல்ஃபி

0

ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தினருடன் அழகிய செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.

பிரமிக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்,ஐஸ்வர்யா ராய்  பச்சனாக மாறி 17 வருடங்கள் ஆகிறது. அவர் நடிகர் அபிஷேக் பச்சனுடன் நெருக்கமான திருமண விழாவில் முடிச்சுப் போட்டார், மேலும் இந்த அழகான ஜோடி நேற்று தங்கள் 17 வது திருமண ஆண்டு விழாவை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் இருக்கும் அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார். அழகான படம் உடனடியாக நட்சத்திர ஜோடியின் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அபிமானத்தைப் பெற்றது, அழகான செய்திகளுடன் கருத்துகள் பகுதியை நிரப்பியது. பொன்னியின் செல்வன்படத்திற்க்கு பின் அவர் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.

https://www.instagram.com/p/C5_eIRHo8Uq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==