Home Blog Page 40

திவாலான ஆபீஸ்… தெருவுக்கு வந்த கோபி… பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்குமா?

0

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாவில் வில்லன்களும், சின்னத்திரையில் வில்லிகளும் ஆக்கிரமித்து வருவது வழக்கமான ஒன்று. இதில் சின்னத்திரையில் வில்லன்கள் முக்கியமாக இருப்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு.

அந்த வகையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி இருந்தாலும் பிரபதான வில்லனாக கோபி கேரக்டர் அதகளம் செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். காமெடி வில்லனாவும் சீரியஸ் வில்லனாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கோபி இல்லை என்றால் பாக்கிலட்சுமி சீரியல் இல்லை என்று கூறி வருகின்றனர்.

சீரியலில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் வேறு ஒரு கேரக்டராக இருக்கும் நடிகர் சதீஷ், அவ்வப்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்து ஹின்ட் கொடுத்து வருகிறார். மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் கோபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், தெருவை துப்புரவு செய்யும் வேலையை பார்த்தபடி இருக்கும் கோபி, என்னுடைய ஆபீஸ் திவாலாகி விட்டது. அதனால் நான் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ” பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே. அவ சுட்டது போதும் சிவ சிவனே, சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே. காசிக்கு போறேன் ஆளை விடு. என்னை இனிமேலாவது வாழ விடு. சுட்டது போதும் சொல்லாலே..” என்று பழைய பாடலை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி கட்டினால் நிலைமை இதுதான் என்று அவர் கருத்தும் சொல்லி இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கம்பெனி திவாலாகிவிடுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CvGpxxDMh2t/

 

இறந்து போய் விடுவேனோ என பயந்தேன் – ஷெர்லின் சோப்ரா

0

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. தமிழில் ‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். சமூகவலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்குவார். இந்நிலையில் தான் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛2021ல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இறந்து போய்விடுவேனோ என பயந்தேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். வாரம் மூன்று டயாலிசிஸ் செய்ய சொன்னார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் எனக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வரவில்லை. இருப்பினும் 3 மாதம் தொடர் சிகிச்சையால் அந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தேன்” என்றார்.

மேலும் கடந்த காலங்கள் சினிமா வாய்ப்பு பெற சென்றபோது சில சினிமா இயக்குனர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். ஆபாசமாக பேசனார்கள். சிலர் எல்லை மீறி நடந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. ஜெயிலர் படக்குழு

0

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி “ஜுஜுபி” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவித்து, மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தி எக்ஸ்ட்ரானடிரி மேன் ஆக மாறிய நிதின்

0

தெலுங்கில் வக்கான்தம் வம்சி இயக்கத்தில் தற்போது நடிகர் நிதின் தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீசத் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளத. அதன்படி, இந்த படத்திற்கு ‘ தி எக்ஸ்ட்ரானடிரி மேன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். மேலும், வருகின்ற டிசம்பர் 23ம் தேதி உலகமெங்கும் இந்தபடம் வெளியாகிறது.

ஓய்விற்காக வெளிநாடு சென்ற விஜய்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் தொடங்கி, சென்னை, ஐதராபாத் போன்ற லொகேஷன்களில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அறிவித்தார் லோகேஷ்.

இந்நிலையில், தனக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்ட விஜய், நேற்று ஓய்விற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சில வாரங்கள் வெளிநாட்டில் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்புகிறார் விஜய். அதன்பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக ‘திப்பு’ படத்தைக் கைவிட்ட தயாரிப்பாளர்

0

பாலிவுட் தயாரிப்பாளரான சந்தீப் சிங் இந்த வருடம் மே மாதம் ‘திப்பு’ (ஹஸ்ரத் திப்பு சுல்தான்) என்ற படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். திப்பு சுல்தான் பற்றிய உண்மை சம்பவங்களை படத்தில் சொல்லப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது பட அறிவிப்புக்கு அப்போதிருந்தே எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அப்படத் தயாரிப்பைக் கைவிடுவதாக சந்தீப் சிங் நேற்று அறிவித்துள்ளார்.

அது பற்றிய அறிக்கையில், “ஹஸ்ரத் திப்பு சுல்தான்’ பற்றிய படம் உருவாக்கப்படாது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் என்னை அச்சுறுத்துவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு எனது சக சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டுமென்றே யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புவதால், அவ்வாறு செய்வது எனது நோக்கமாக இருந்ததில்லை.

இந்தியர்களாகிய நாம் என்றென்றும் ஒற்றுமையாக இருப்போம், எப்போதும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தியில் வெளியான “அலிகார், சர்ப்ஜித், பூமி, பிஎம் நரேந்திரமோடி, ஜுன்ட்” ஆகிய படங்களைத் தயாரித்தவர் சந்தீப் சிங்.

விஜய் சேதுபதியின் ‛ஜவான்’ பட போஸ்டர் வெளியீடு

0

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்’. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ஆம் திகதி , தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டரை இன்று தனது ட்விட்டரில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அந்த போஸ்டரில் ‛தி டீலர் ஆப் டெத்’ என்று கேப்சனுடன் வெளியிட்டுள்ளனர். ஜவான் படத்தை 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் விமலின் ‛துடிக்கும் கரங்கள்’

0

‛காத்திருப்போர் பட்டியல்’ பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛துடிக்கும் கரங்கள்’. மிஷா நரங், சதீஷ், சவுந்திரராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்துள்ளனர்.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் திகதியை அவர்கள் வெளியிடவில்லை. முன்னதாக 1983ல் இதே பட தலைப்பில் ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

‛கேப்டன் மில்லர்’ டீசர் திகதி அறிவிப்பு

0

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‛கேப்டன் மில்லர்’. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ம் திகதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் தனுஷின் 50 பட பர்ஸ்ட் லுக்கும் வெளியாக உள்ளது.

‛அடியே’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்து தகவல் இதோ

0

திட்டம் இரண்டு் பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‛அடியே’. ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன், ஆர்.ஜே.விஜய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பொருட்செலவில் மாலி மற்றும் மான்வி நிறுவனம் தயாரித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் திகதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.