Home Blog Page 39

சினிமாவில் அந்த மாதிரி விஷயம் இருக்கு..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.

இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்”.

“அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்” என்று அபிராமி கூறியுள்ளார்.

பழனிக்கு வீடு தேடி வந்த சர்ப்ரைஸ்! தரமான சம்பவம்…

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி, பாக்கியா, அமிர்தா, எழில் ஆகியோர் கிச்சனிலிருந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு செழியன் வருவதை பார்த்த பாக்கியா, என்ன கண்ணு எல்லாம் சிவந்து போய் இருக்கு. நைட் தூங்கலையா என கேட்க, இல்லமா நைட் முழுக்க பாப்பா கத்திக்கிட்டே இருந்தா. இப்பதான் தூங்க வச்சிட்டு வாரேன் என பொய் சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி குழந்தையை தூக்கிட்டு வா நான் பாத்துக்குறேன் என சொல்ல, இல்லை இப்போ தான் தூங்க வச்சிட்டு வந்தேன் என சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழிலுடன் மேலே exercise செய்வதற்கு சென்று விட்டு எழிலிடம், ஜெனி இப்போ நிறைய சந்தேகப்படுறா என்று நைட் நடந்த விஷயத்தை பற்றி சொல்லுகிறார். அதற்கு எழில், இப்பதான் நீங்க சேர்ந்து இருக்கீங்க உங்களுக்கு இடையில் நிறைய விரிசல் இருக்கு போகப் போக சரியாகும். இப்போ போய் கொஞ்சம் தூங்கு என அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமியும் அம்மாவும் சாமி கும்பிட்டு விட்டு இருக்க, வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் யாரும் இல்லை. ஆனால் அவரது வீட்டுக்கு அவரது அக்காவும் தங்கச்சியும் வந்து சப்ரைஸ் கொடுக்கிறார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த காலிங் பெல் சத்தம் கேட்க, யார் என பார்த்தால் பாக்கியாவின் குடும்பம் வந்திருக்கிறது.

அவர்களையும் உள்ளே அழைத்து தனது அக்கா தங்கைக்கு அறிமுகம் பண்ணி வச்சு, எல்லாரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் போது பழனிச்சாமியின் அம்மா உள்ளே செல்ல, அவரது அக்காவும் தங்கையும் சென்று பழனிக்கு பொண்ணு பார்த்தேன் என்று சொன்னீர்களே யார் அவங்க எனக் கேட்க, அது பாக்கியா தான் என ஷாக் கொடுக்கிறார்.

அதற்கு அவரது தங்கச்சி அவங்களுக்கு கல்யாணம் ஆகி பையனுக்கு பிள்ளையும் இருக்குது. அவங்களை எப்படி அண்ணாக்கு கல்யாணம் கட்டி வைப்பிங்க என்று அவருக்கு விருப்பம் இல்லாத மாதிரி பேச, அந்த இடத்திற்கு வந்த பாக்கியா  அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கிறார். ஆனால் பழனிச்சாமியின்  அம்மாவுக்கும்  அக்காவுக்கும் சுகர் இருக்கு என சொல்லி கொடுக்க மறுக்கிறார்.

இதை தொடர்ந்து பார்த்தியா அவளுக்கு எங்க வீட்ட பத்தி எல்லாமே தெரியும். அவ தான் சரியான ஆள் என சொல்ல, பழனிச்சாமியின் அக்கா எனக்கு சம்மதம் என சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இதேவேளை, தற்போது பழனிச்சாமிக்கு பாக்கியாவை கல்யாணம் செய்து வைக்க அவரது அம்மா, அக்கா சம்மதம் சொன்ன நிலையில், இது பாக்கியா காதுக்கு போனால் என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

சன் டிவியில் முடிவுக்கு சில சீரியல்கள்…..

0

சன் டிவியில் ’அன்பே வா’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சீரியல்கள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் ஒரு சீரியலின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ’அன்பே வா’ என்ற சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரிக்கும் இரண்டு சீரியல்கள் புதிதாக ஆரம்பமாக இருப்பதாகவும் அதில் ஒன்று ’மாலினி’ என்றும் இன்னொன்று  டெல்னா டேவிஸ்  நடிக்கும் சீரியல் என்றும் கூறப்படுகிறது.

இதில்  டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய சீரியலின் பூஜை ஒரு மாதத்திற்கு முன்பே போடப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியலில்  டெல்னா டேவிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் அவரது புதிய லுக் மற்றும் சேலை கட்டிய புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் பிரபல சீரியல்

0

தமிழும் சரஸ்வதியும் ஒரு இந்திய தமிழ் மொழி சோப் ஓபரா ஆகும். இதில் தீபக் தினகர் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் நடித்துள்ளனர்.இது ஜூலை 12, 2021 அன்று ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது. S. குமரன் இந்த தொடரின் இயக்குனர் மற்றும் ராதிகா சீனிவாசன் மற்றும் B. சீனிவாசன் விகடன் டெலிவிஸ்டாஸ் அதன் தயாரிப்பாளர்கள்.சரஸ்வதி நன்றாகப் படிக்கவில்லை என்று தன் தந்தையின் தொடர்ச்சியான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக சரஸ்வதியை திருமணம் செய்து கொள்வதைக் கதை பேசுகிறது. அவள் அறியாத பெண்ணாக இருந்தாலும், வருங்கால மாப்பிள்ளைகள் அவளை திருமணம் செய்ய அதிக பணம் கேட்கிறார்கள். ஆயினும்கூட, உயர் தொழில் மதிப்புள்ள ஒரு படிக்காத நபரான தமிழை அவள் சந்திக்கிறாள். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தமிழ் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, ஏனெனில் அவர்கள் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பட்டம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இக்கதை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் முடிவுக்கு வரவுள்ளாதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ் எனும் தீபக்கின் இன்ஸ்டரகம் பக்கத்தில் கதையின் இறுதி நாள் படபிடிப்பு என பதிவிட்டு அங்கு இருக்கும் அனைவரையும் அறிமுகபடுதிள்ளார். 717 அத்தியாத்துடன் முடிவுக்கு வந்ததாக கூறிபிட்டுள்ளார்

https://www.instagram.com/p/C5lcsQ7iWMM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/reel/C5laHhLCGlT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை..

0

மிஸ்டர் மனைவி என்பது 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும், இது 6 மார்ச் 2023 அன்று திங்கள் முதல் ஞாயிறு வரை சன் டிவியில் திரையிடப்பட்டது. இந்தத் தொடரில் ஷபானா ஷாஜஹான் மற்றும் பவன் ரவீந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கதை பற்றியது இதுவாகும். சமூகத்தில் சமத்துவத்தை எதிர்பார்க்கும் வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணான அஞ்சலி, தனது வாழ்க்கையைத் தானே நிர்வகிக்கிறார், அதே நேரத்தில் மிஸ்டர் ஹோம்மேக்கராக (திரு மனைவி) ஆசைப்படும் விக்கி சிக்குகிறார். முக்கிய கதைக்களம் இதுதான்.

இக் கதையின் ஷபானாவை ரசிகரக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.இந் நலையில் அவர் தான் இந்த கதையில் இருந்து விலகுவதாக தனது இனடஸ்டராகம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது மிஸ்டர் மனைவி குடும்பத்திற்க்கு

”எனது கதாபாத்திரத்தை விட்டு விழகுவது கடினமான முடிவாக எனக்கு உள்ளது.ஆனாலும் அது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிக நன்றி உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த பலமாக அமைந்திருந்தது..நான் ஒரு புதிய பிராஜகட் , புதிய கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கின்றேன். எல்லோருக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C5li_dsyyED/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

யுவன் சங்கர் ராஜா அப்டேட்

0

யுவன் சங்கர் ராஜா தனது அடுத்த இசை நிகழ்ச்சிகள் இடம் பெற போகும் இடங்கள் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இவரின்  முதல் லோங் டிரைவ் இலங்கையிலிருந்து ஆரம்பமானது.

அதற்கமைய,

22/06/2024 –ஹைதராபாத்

29/06/2024 கோயம்புத்தூர் 

27/07/2024 – சென்னை

ஆகிய இடங்களில் தமது இசைநிகழ்சிகளை நடாத்த போவதை அழகிய வீடியோ ஒனடறின் முலம் தெரியப்படுத்தி உள்ளார். இதற்கான டிக்கட்டுகள் நாளை வெளியிடப்படும்.

https://www.instagram.com/reel/C5ldK2DP59a/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்

0

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் சற்று தள்ளிப்போனது.

செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர் உள்ளிட்டோர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் எதற்காக வெளியேறினார் என காரணம் தெரியவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட குக் வித் கோமாளி செட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு

0

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பபு பற்றி அறிவுத்துள்ளது. இப்படத்தை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந் மாரிமுத்து எழுதியுள்ளார். இதில் பிரதீப் ரங்கனாதன் நடிக்கினறார்.

 

‘தளபதி 69’ தயாரிப்பாளர் யார்?

0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் புதிய நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்பட பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து தளபதி விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் புரடொக்சன்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே விஜய் படங்களை தயாரித்துள்ள நிலையில் மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி..

0

விஜய் டிவியின் சீரியல்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சன் டிவி தொடர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என கடந்த வாரமே செய்தி வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வரும் கிழக்கி வாசல் என்ற தொடரையும் விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம்.

விரைவில் இதன் கிளைமாக்ஸ் வர இருக்கிறது என வந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த சீரியல் தொடங்கி இன்னும் 200 எபிசோடுகள் கூட ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.