Home Blog Page 39

என்னது மகாலட்சுமிக்கு மீண்டும் விவாகரத்தா..??

0

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை மகாலட்சுமி. வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை என முக்கியமான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள்.

இவர்கள் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். புது கார் வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்கள்

இவ்வாறு  இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கைதான ரவீந்தர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில், என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்துள்ளதோடு, தனது பழைய புகைப்படத்தையும் போஸ்ட் பண்ணியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்னாச்சு விவாகரத்து ஆனதா என கேட்க, அதற்கு ரவீந்தர் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5iGLfZSW3b/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

ஸ்லீவ் லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டும் காவியா அறிவுமணி

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவியா அறிவு மணி.

வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்‌. இதை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் எங்கமா அவசரத்துக்கு போட மறநதுட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C5dR0BWyfzO/

 

முதல் வெப்சீரிஸில் நடித்து முடித்த நிவின்பாலி

0

சினிமாவுக்கு இணையான வேகத்தில் வெப் சீரிஸுகளும் வளர்ந்து வருகின்றன. முன்னணியின் நடிகர்களும் தயக்கமின்றி வெப் சீரிஸில் ஆர்வமாக பங்கேற்று நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலி முதன்முறையாக ‘பார்மா’ என்கிற வெப்சீரிஸில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

கதாநாயகியாக ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

மருத்துவ துறையில், குறிப்பாக பார்மசூட்டிக்கல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு திரில்லர் ஜானரில் இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நிவின்பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வருசங்களுக்கு சேஷம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 11 வெளியாக இருக்கிறது. இது தவிர தமிழில் ‘ஏழு கடல் ஏழுமலை’ மற்றும் மலையாளத்தில் ‘மலையாளி ப்ரம்’ இந்தியா ஆகிய படங்கள் நிவின்பாலி ஹீரோவாக நடித்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

தயாரிப்பாளர்களிடம் கைகூப்பி கெஞ்சும் வெங்கட் பிரபு..

0

சமீபத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் எனலாம். மாநாடு , மங்காத்தா போன்ற பல அசத்தலான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு குறித்த திரைப்படத்தையும் இயக்குகின்றார். கோட் படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் , பிரபுதேவா , லைலா , சினேகா என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

பொதுவாகவே விஜய் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் என்றாலும் குறித்த திரைப்படம் விஜய் அரசியலில் இறங்கிய பின்பு வரும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே கோட் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெங்கட் பிரபு தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோட் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பதி குடும்பத்தினர் ஆவர். குறித்த படப்பிடிப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாக இவர்களின் மகள்களான அர்ச்சனா கல்பதி , ஐஸ்வர்யா கல்பதி  ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த நிலையிலேயே கோட் படத்தின் படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் தடியுடன் நிற்பது போன்றும் அவர்களை பார்த்து பயந்து கை கூப்பிக்கொண்டு வெங்கட் பிரபு நிற்பது போன்றும் ஒரு நகைச்சுவையான புகைப்படத்தை  வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

 

முடிவுக்கு வந்தது தனுஷ் ஜஸ்வர்யா விவகாரம்………

0

தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் ஹந்தி,ஹலிவுட் துறைகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகின் சூபஸ்டார் ரஜனிகாந்தின் மகளை(ஐஸ்வரியா) காதலித்து திருமணம் 2004ல் செய்துக் கொண்டார். ஐஸ்வரியாவும் சினிமா துறையில் இயக்குனராக வலம் வருகிறார்.இவர்கள் இருவருக்கும் லிங்கா,யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் இடையில் ஏற்பட்ட மனகசப்பினால் கடந்த 2022ல் இருந்து பிரிந்து வாழந்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தவர்பகள் பல முயற்சிகள் எடுத்தும் வெற்றியளிக்கவில்லை. இதற்மைய இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை  ஐகோட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவ் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இச் செய்தி அக் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

 

தவிர்க்க முடியாத மோதல்…….

0

• AUG – #GOAT vs #Pushpa2TheRule

• Sep – #Kanguva vs #TheycallhimOG

• Oct – #Vettaiyan vs #Devara

• Nov – #VidaaMuyarchi vs #GameChanger         

இந்த படங்கள் ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டும் என பேசப்பட்டு வருகிறது. அதற்கமைய இம் மோதல்களில் ஒன்று அல்லது இரண்டு நிச்சயம் நடக்கும் என எதிர்பார்கப்பட்டு வருகிறது.

புஷ்பா 2 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா 1 தி ரைஸ். இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் சமந்தா. இவருடைய நடனம் புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. இதை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கடந்த 5ஆம் தேதி புஷ்பா படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதினால், அவருடைய கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீயா நானா பிரபலம் இரயில் மோதி மரணம்..

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை முதல் எபிசோடில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும், தோசை ஒரு சாதாரண உணவு என்றும் கூறுபவர்கள் மறுபுறமும் விவாதம் செய்து வந்தனர்.

இதில் இளம் பெண் ஒருவர் தனது அன்னான் விதவிதமாக தோசை சாப்பிடுவதை வெறுப்புடன் பேசியிருந்தார். அதற்கு அவரது தான் எதிர்பார்ப்பில் அமர்ந்து தனது மகனுக்கு துணையாக பேச நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றது.

தனது மகன் 20 தோசைக்கும் மேல் சாப்பிடுவான், அதுவும் விதிவிதமாக தான் சாமிடுவான் என பேசியிருந்தார். இதை கேட்டவுடன் யாருப்பா அந்த பையன் எனக்கே பார்க்கணும் போல இருக்கே என ஷாக்குடன் கூறியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பிரணவ். இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரணவ், இரயில் மோதி மரணமடைந்துள்ளார். குரோம்பேட்டை இரயில் நிலையில், கடந்த வாரம் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த 22 வயதாகும் பிரணவ் இரயில் மோதி உயிரிழந்துள்ளார். போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது தன இப்படி நடந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பிரணவ் மட்டுமின்றி அவருடன் தண்டவாளத்தை கடந்தன முயன்ற சதீஸ் என்பவரும் இரயில் மோதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 அப்டேட்

0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது.

லோகேஷ் பாணியில் கண்டிப்பாக இது மாஸான டீசராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாம்.

இந்த நிலையில், தலைவர் 171ல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஷோபனா தான் ரஜினியின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே இருவரும் தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளனர். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையை உடைத்த நடிகர் சக்தி!

0

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே சினிமாவுக்குள் நுழைந்து இன்று தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் அஜித்குமார் ஆவார். இவர் நடிப்பு மட்டும் இன்றி பைக் ரெய்டு , கார் ரேஸ்கல் என பல விடயங்களில் ஆர்வம் காட்ட கூடியவர். இவர் பல அறிமுக நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவ்வாறே நடிகர் சக்திக்கும் சில அறிவுரை வழங்கி உள்ளார்.

90s காலகட்டங்களில் பல பெண்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தவர் சக்தி ஆவார். இவர் சின்னத்தம்பி , மன்னன் , சந்தூரமுகி என பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசுவின் மகனும் ஆவார். சக்தி பல படங்களில் நடித்திருந்தாலும் ” அரபு  நாடே ” என்ற பாடலின் மூலமே பெரிதும் பேசப்பட்டார்.

இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவிக்கின்றார் எனலாம். அவ்வாறே சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு இன்டெர்வியுவில் கலந்துரையாடும் போது நடிகர் அஜித் பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில்” டப்பிங் காக சென்றபோது நான் அஜித் சேரை சந்தித்தேன் அவர் பல விடயங்களை கூறினார் அவ்வாறே நான் வெய்ட் போட்டிருப்பதை பார்த்து விட்டு ஹீரோவாக இருக்க வேண்டும் என்றால் வெய்ட் இருக்க கூடாது என்றார். அதையே நான் போலோவ் செய்கிறேன்” என கூறியுள்ளார் சக்தி.