Home Blog Page 38

தியேட்டரில் காட்சிகள் ரத்து..

0

தமிழ்நாட்டில் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருவது சினிமா தியேட்டர்கள் தான்.

தற்போது தியேட்டரில் ஒரு நாள் மட்டும் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த தேதியில் மட்டும் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இரவு காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமாவில் வருவார் என்று எதிர்பார்த்தால் அரசியலுக்கு வந்துட்டாரே..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்தால் திடீரென அவர் அரசியலுக்கு குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் அசீம் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு டைட்டில் பட்டம் கொடுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

சீரியல் நடிகரான அசீம் ’மாயா’ என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பிரிவோம் சந்திப்போம்’ ’தெய்வம் தந்த வீடு’ ’பிரியமானவளே’ ’பகல் நிலவு’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’பூவே உனக்காக’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்ட அவருக்கு டைட்டில் பட்டம் அவர் கையாலே கிடைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில படங்களில் கூட அவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் அரசியலில் குதித்துள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ள அசீம் தனது நண்பர் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அசீம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘என்னுடைய அப்பா, தாத்தா எல்லாம் திமுக ஆதரவாளர்கள் தான், நானும் திமுக ஆதரவாளராக தான் இருந்தேன், ஆனால் சமீபத்தில் சீமானின் அரசியல் எனக்கு பிடித்தது, அதனால் அவருடைய கட்சியில் இணைந்தேன் என்று கூறியுள்ளார்.

அடுத்தது அரசியல்வாதியா? சினிமா வாழ்க்கையா? என்று கேட்ட கேள்விக்கு ’எதையும் நான் திட்டமிடுவதில்லை, முதலில் தொகுப்பாளராக தான் டிவிக்கு வந்தேன், அதன் பிறகு சீரியல் நடிகரானேன், பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் அதில் கலந்து கொண்டேன், டைட்டில் பட்டமும் கிடைத்தது, காலம் என்ன தருகிறதோ அதை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய அடுத்த நகர்வு சினிமாவா? அல்லது அரசியலா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் 2026 வரும் போது என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

நாளை ஒரு ஆச்சரிய அறிவிப்பு….

0

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் ’சித்தா’ அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சியான் 62’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படத்தில் எஸ் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஷிபு தமீன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது எடிட்டராக பிரசன்னா பணிபுரிய இருப்பதாகவும் சி எஸ் பாலச்சந்தர் என்பவர் கலை இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று குறிப்பாக டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை நிச்சயம் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C50qFjlhqvg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://x.com/hr_pictures/status/1780121509853331574

ரிலீசுக்கு தயாரான வரலட்சுமி சரத்குமாரின் திரைப்படம்

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

நயன்தாராவின் அடுத்த படம்.. ரிலீஸ் எப்போது?

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ’ஜவான்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் அதன் பிறகு இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆண்டு வெளியாகும் நயன்தாராவின் முதல் படமாக ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ இருக்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிச்சது ஒரே படம் தான்.. அந்த படத்தின் இரண்டாம் பாகமா?

0

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘லெஜண்ட்’ சரவணன், ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விவேக் ,யோகி பாபு, சுமன், நாசர், விஜயகுமார், லதா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லெஜண்ட்’. இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரமாண்டமாக ‘லெஜண்ட்’ சரவணன் தயாரித்திருந்த நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ‘லெஜண்ட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘லெஜண்ட் 2’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்படும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை முற்றிலும் காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் 90 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்த திட்டமிட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

’கனா காணும் காலங்கள் 3’.. தரமான அப்டேட் வந்துருச்சு..

0

’கனா காணும் காலங்கள்’ இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சீசன் 3 வெளியாகும் என்று கூறப்பட்டது. முதல் இரண்டு சீசன்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மூன்றாவது சீசனும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இதற்கான  பூஜை நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’கனா காணும் காலங்கள் ’முதல் சீசன் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இரண்டாவது சீசன் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு முடிந்தது என்பது தெரிந்தது. முதல்  சீசன் பத்தாவது வரை படிக்கும் மாணவ மாணவிகளின் கனவுகள், நிகழ்வுகள் இரண்டாவது சீசனில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவ மாணவிகளின் அனுபவங்களாக இருந்தது என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் அதே மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும்? அவர்களது புதுமையான அனுபவம் எப்படி? காதல் அனுபவம் எப்படி? என்பது குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’கனா காணும் காலங்கள் 3’ பூஜை தற்போது முடிந்துள்ளதாக அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எனவே ’கனா காணும் காலங்கள்’ சீசன் 3 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் மாதம் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் ’கனா காணும் காலங்கள் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு சீசன்களில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மூன்றாவது சீசனிலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனின் தரமான அப்டேட் வந்ததை எடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த புகைப்படத்தை ஷேர் செய்த மௌன ராகம் 2 சீரியல் ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது, அதில் ஒரு தொடர் தான் மௌன ராகம்.

முதல் பாகத்தில் அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகியது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்த 2021ம் ஆண்டு 2ம் பாகமும் புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

2ம் பாகத்தில் ரவீனா, ஷில்பா, சல்மானுன் பாரிஸ், ராகுல் என பலர் நடித்தனர். இதில் சக்தி-வருண் மற்றும் ஸ்ருதி-தருண் ஜோடி மக்களிடம் மிகவும் பிரபலமானார்கள்.

இரண்டாம் பாகம் கடந்த வருடம் முடிவுக்கு வர அதில் நடித்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரீஸுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் படு ரொமான்டிக்காக, மணமகன் – மணமகள் கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/C5yMXshylr_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

அமீர் படத்தின் டிரெயிலர்

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன்,சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தக்லைஃப்’ படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்..

0

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த ’தக்லைஃப்’ படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கமல்ஹாசன் தேர்தல் பணி காரணமாக தற்காலிகமாக விலகினார் என்றும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை ’தக்லைஃப்’ படக்குழுவினர் வீணடித்து விட்டதாக கூறி இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் அடுத்த வாரம் முதல் ’தக்லைஃப்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் மீண்டும் ’தக்லைஃப்’ படத்திற்கு திரும்பி வர இருப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து அவருக்கு வேற ஒரு கேரக்டர் அளிக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு ஆகிய மூவருமே இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து விலகிய நடிகர்களே மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது தலைகீழ் மாற்றமாக கருதப்பட்டாலும் படக்குழுவினர் தற்போது திருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.