Home Blog Page 37

யுவன் சங்கர் ராஜா அப்டேட்

0

யுவன் சங்கர் ராஜா தனது அடுத்த இசை நிகழ்ச்சிகள் இடம் பெற போகும் இடங்கள் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இவரின்  முதல் லோங் டிரைவ் இலங்கையிலிருந்து ஆரம்பமானது.

அதற்கமைய,

22/06/2024 –ஹைதராபாத்

29/06/2024 கோயம்புத்தூர் 

27/07/2024 – சென்னை

ஆகிய இடங்களில் தமது இசைநிகழ்சிகளை நடாத்த போவதை அழகிய வீடியோ ஒனடறின் முலம் தெரியப்படுத்தி உள்ளார். இதற்கான டிக்கட்டுகள் நாளை வெளியிடப்படும்.

https://www.instagram.com/reel/C5ldK2DP59a/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்

0

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் சற்று தள்ளிப்போனது.

செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர் உள்ளிட்டோர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் எதற்காக வெளியேறினார் என காரணம் தெரியவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட குக் வித் கோமாளி செட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு

0

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் புதிய படைப்பபு பற்றி அறிவுத்துள்ளது. இப்படத்தை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந் மாரிமுத்து எழுதியுள்ளார். இதில் பிரதீப் ரங்கனாதன் நடிக்கினறார்.

 

‘தளபதி 69’ தயாரிப்பாளர் யார்?

0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் புதிய நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்பட பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து தளபதி விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் புரடொக்சன்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே விஜய் படங்களை தயாரித்துள்ள நிலையில் மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி..

0

விஜய் டிவியின் சீரியல்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சன் டிவி தொடர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என கடந்த வாரமே செய்தி வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வரும் கிழக்கி வாசல் என்ற தொடரையும் விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம்.

விரைவில் இதன் கிளைமாக்ஸ் வர இருக்கிறது என வந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த சீரியல் தொடங்கி இன்னும் 200 எபிசோடுகள் கூட ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் வெட்கம் அறியாதுன்னு நிரூபித்த சூரி.

0

இப்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார். விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதாவது எதிரி போல் சண்டை போட்ட விஷ்ணு விஷால் உடன் இவர் பழம் விட்டுள்ளார்.

நிலம் வாங்குவது தொடர்பாக சூரிக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக மீடியாக்களில் தெரிவித்த சூரி அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்.

பதிலுக்கு விஷ்ணு விஷாலும் காட்டமாக பதிலளித்ததோடு எதிர்காலத்தில் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக அவரே தெரிவித்தார்.

அப்போதே இதை நாலு பேர் நாலு விதமாக பேசி வந்தனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் அப்பா மற்றும் சூரி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காலம் ஒன்றே அனைத்திற்கும் பதில் சொல்லும், நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா என தெரிவித்துள்ளார். அதற்கு சூரியும் நன்றி கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பணம் வெட்கமறியாது என நிரூபித்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் என்ன உருட்டு உருட்டினார்கள்.

ஆனால் இப்போது ஒன்றுமே நடக்காதது மாதிரி சேர்ந்து விட்டார்கள். ஆக மொத்தம் பணத்துக்கு தான் மதிப்பு என கண்டபடி விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலர் இவர்கள் இணைந்ததற்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் எடுத்த முட்டாள்தனமான முடிவு..!

தமிழ் திரை உலகை பொருத்தவரை சொந்த படம் எடுத்து நஷ்டம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கோடி கணக்கில் கஷ்டப்பட்டு பல வருடங்கள் சேர்த்த பணத்தை ஒரே ஒரு சொந்த பணம் எடுத்து நஷ்டம் அடைந்த நடிகர் நடிகைகள் ஏராளம் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சொந்த படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் தற்போது தான் அவர் படிப்படியாக தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை பார்த்து சிவகார்த்திகேயன் என்ன லூஸா? என திரை உலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார் என்பதும் சில படங்களை விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆர்டி ராஜா என்பவருடன் இணைந்து சில படங்கள் தயாரித்த நிலையில் அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது என்பதும் இதனால் சிவகார்த்திகேயனுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது சினிமாவில் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் நாளை முழுதாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தான் சிவகார்த்திகேயன் என்ன லூஸா? நன்றாகத்தானே அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது? அப்படி இருக்கும்போது எதற்காக திடீரென மீண்டும் சொந்த படம் எடுக்கிறார்? என்ற கேள்விகளை அவரது ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

மொத்தமா சொதப்பிய மொட்டை மாமா!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், விஜயா வீட்டுக்கு வந்த பிரவுன் மணி, உங்க அப்பா கூட இருந்த பிசினஸ் பார்ட்னஸ் எல்லாரும் சூழ்ச்சி பண்ணி அவரை ஏமாத்திட்டாங்க மா என சொல்லி அழுகிறார்.மேலும் இப்ப அவரு மலேசியா ஜெயிலில் இருக்காரு என ரோகிணியிடம் சொல்லி அழுகிறார்.

இதைக் கேட்ட ரோகிணி அழுது கொண்டே, என்ன அங்கிள் இப்படி சொல்றீங்க எனக் கேட்க, கரெக்டா சொல்லிவிட்டது தானே சொல்லுறன் என பிரவுன் மணி ஷாக் கொடுக்கிறார்.

இதைக் கேட்ட மீனா, என்னது சொல்லிவிட்டத சொல்றீங்களா எனக் கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ. ரோகிணி பிரவுன் மணி செய்யும் புதிய நாடகத்தை விஜயா வீட்டார் கண்டு பிடிப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஐஸ்வர்யாவுடன் விவாகரத்துக்கு காரணம் இதுதானா..

0

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தனுஷ் – ஐஸ்வர்யா.

இந்த தம்பதிக்கு யாத்ரா – லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை இதுவரை இவர்கள் அணுகவில்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி 2004ல் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய என்ன காரணம் என பலரும் கேட்டு வருகிறார்கள். பல தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல்கள் பேசப்பட்டு வரும் நிலையில், சில நடிகைகளுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மற்ற விஷயங்களை ஐஸ்வர்யா சகித்து கொண்ட போதிலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்ததால் தான் விவாகரத்தின் காரணம் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பல லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய ஏகே

0

எல்லோரிடமும் கலகலப்பாக பழகக் கூடியவர் தான். ஆனால் அவருடைய நெருங்கிய நட்பு வட்டம் என்று பார்க்கையில் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இருப்பார்கள்.

அதில் தற்போது நம்ம பிக்பாஸ் ஆரவ் இடம் பிடித்துள்ளார். விடாமுயற்சி படத்தில் இவர்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதில் ஆரம்பித்த நட்பு தற்போது நெருக்கம் ஆகி இருக்கிறது.

அதிலும் அஜித் பல லட்சம் மதிப்புள்ள பரிசு பொருளை வாரி வழங்கும் அளவுக்கு ஆரவ் அவர் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர்கள் இணைந்திருக்கும் போட்டோ வீடியோக்கள் வெளியானது.

அது மட்டும் இன்றி இருவரும் பல விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடுவார்களாம். இதற்கு முக்கிய காரணம் ஆரவ் ஒரு பைக் ரேசர் என்பது தான்.

அண்மையில் ஆரவ் அஜித்துடன் இணைந்து பைக்கில் ஒரு ட்ரிப் போயிருந்தார். இதுதான் அஜித்தின் நட்பு வட்டாரத்தில் இவர் இணைந்த ரகசியம்.

மேலும் இவருக்காக ஏகே 35 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கையும் கிஃப்ட் செய்திருக்கிறார். இப்படி யாரையும் எளிதில் நட்பு வட்டத்தில் சேர்த்துக்காத அஜித்தையே ஆரவ் இம்ப்ரஸ் செய்து விட்டார்.

https://www.instagram.com/p/C4xBiz8ryeE/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==