Home Blog Page 36

ஸ்ருதிஹாசன்!! லேட்டஸ்ட் தகவல்

0

தமிழ், தெலுங்கு, இந்தியில், என்ன படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

இவர் ஏற்கனவே தி .ஐ ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவும் தேர்வாகி இருந்தார்.

பிலிப் ஜான் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருப்பதாவும் கூறப்பட்டது. இதற்கு முன் சென்னை ஸ்டோரி படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யப்பட்டது . ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் சென்னை ஸ்டோரி படத்தில் இருந்து விலகி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.

ரோமியோ திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி யுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.

சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி ரவியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், மிர்னாலினி ரவிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, விருப்பம் இல்லை என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர் என்ன செய்தார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகள் மற்றும் மனைவியிடம் சகித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் ஆண்டனி.

கதாநாயகி மிர்னாலினி நடிப்பில் குறை எதுவும் இல்லை. முழு கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த நடித்த நடிகர், நடிகைகளும் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.

மனதை தொடும் கதைக்களத்தை, அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு, இன்னும் கூட படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மற்றபடி படத்தில் குறை என்று பார்த்தால் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம் என்பது தான். பாடல்களை வைத்து காட்சி அமைத்தது என்பது அருமை. ஆனால் அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது. பின்னணி இசை வேற லெவல். படத்திற்கு பலம் சேர்க்கிறது. ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் அருமையாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்

விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி நடிப்பு

கதை

ப்ரீ கிளைமாக்ஸ்

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு

மொத்தத்தில் ரோமியோ ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டான்..

 

சமந்தாவின் லெட்டஷ்ட் ஆட் பொட்டோ ஷுட்

சமந்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது பக்கத்திற்கு 34 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

https://www.instagram.com/p/C5nH_93rq-s/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் படத்தின் டைட்டில்

0

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற திரைப்படத்தை தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான்கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சல்மான் கானுடன் இணையும் திரைப்படத்திற்கு ’சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சல்மான் கான் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு மிக விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/C5nF1yop-Qe/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

வெயிட்டிங் வீணா போகல, மாஸ் அப்டேட் கொடுத்த VP..

0

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று அசால்டாக அப்டேட் கொடுத்து விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. GOAT படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து மெர்சல் ஆகி இருக்கின்றனர்.

ரம்ஜான் அதுவுமா எந்த முஸ்லிம் பிரண்ட்ஸ் கிடைப்பாங்க, பிரியாணி ட்ரீட் கேட்கலாம்னு எல்லாரும் சுத்திக்கிட்டு இருக்கும்போது, ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வேற லெவல் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் வெங்கட் பிரபு.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் என ஏதாவது வெளியிடுவார்களோ என்று தான் முதலில் எல்லோருக்கும் தோணுச்சு. ஆனால் நேரம் போகப் போக அட இவர் ரிலீஸ் தேதியை தான் சொல்லப் போகிறார் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.

அடிடா மேளம், போடுடா வெடி என்று விஜய் ரசிகர்களும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 2,3 மணி நேரமா ட்விட்டரில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் நேரம் வீண் போகவில்லை.

GOAT படத்தின் மூலம் தளபதி விஜய் தரிசனத்தை வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பார்ப்பதற்கு எல்லாரும் ரெடியாக வேண்டி தான். லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில், தளபதியின் அடுத்த படமான GOAT இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறிவைத்து இந்த ரிலீஸ் தேதியை லாக் செய்து இருக்கிறார்கள் பட குழுவினர். கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பது இந்த படத்தின் பெரிய பாசிட்டிவான விஷயம்.

பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளங்களை திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே விஜய் நடிப்பில் GOAT படம் ரிலீஸ் ஆகிறது.

சினிமாவில் அந்த மாதிரி விஷயம் இருக்கு..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.

இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்”.

“அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்” என்று அபிராமி கூறியுள்ளார்.

பழனிக்கு வீடு தேடி வந்த சர்ப்ரைஸ்! தரமான சம்பவம்…

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி, பாக்கியா, அமிர்தா, எழில் ஆகியோர் கிச்சனிலிருந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு செழியன் வருவதை பார்த்த பாக்கியா, என்ன கண்ணு எல்லாம் சிவந்து போய் இருக்கு. நைட் தூங்கலையா என கேட்க, இல்லமா நைட் முழுக்க பாப்பா கத்திக்கிட்டே இருந்தா. இப்பதான் தூங்க வச்சிட்டு வாரேன் என பொய் சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி குழந்தையை தூக்கிட்டு வா நான் பாத்துக்குறேன் என சொல்ல, இல்லை இப்போ தான் தூங்க வச்சிட்டு வந்தேன் என சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழிலுடன் மேலே exercise செய்வதற்கு சென்று விட்டு எழிலிடம், ஜெனி இப்போ நிறைய சந்தேகப்படுறா என்று நைட் நடந்த விஷயத்தை பற்றி சொல்லுகிறார். அதற்கு எழில், இப்பதான் நீங்க சேர்ந்து இருக்கீங்க உங்களுக்கு இடையில் நிறைய விரிசல் இருக்கு போகப் போக சரியாகும். இப்போ போய் கொஞ்சம் தூங்கு என அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமியும் அம்மாவும் சாமி கும்பிட்டு விட்டு இருக்க, வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் யாரும் இல்லை. ஆனால் அவரது வீட்டுக்கு அவரது அக்காவும் தங்கச்சியும் வந்து சப்ரைஸ் கொடுக்கிறார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த காலிங் பெல் சத்தம் கேட்க, யார் என பார்த்தால் பாக்கியாவின் குடும்பம் வந்திருக்கிறது.

அவர்களையும் உள்ளே அழைத்து தனது அக்கா தங்கைக்கு அறிமுகம் பண்ணி வச்சு, எல்லாரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் போது பழனிச்சாமியின் அம்மா உள்ளே செல்ல, அவரது அக்காவும் தங்கையும் சென்று பழனிக்கு பொண்ணு பார்த்தேன் என்று சொன்னீர்களே யார் அவங்க எனக் கேட்க, அது பாக்கியா தான் என ஷாக் கொடுக்கிறார்.

அதற்கு அவரது தங்கச்சி அவங்களுக்கு கல்யாணம் ஆகி பையனுக்கு பிள்ளையும் இருக்குது. அவங்களை எப்படி அண்ணாக்கு கல்யாணம் கட்டி வைப்பிங்க என்று அவருக்கு விருப்பம் இல்லாத மாதிரி பேச, அந்த இடத்திற்கு வந்த பாக்கியா  அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கிறார். ஆனால் பழனிச்சாமியின்  அம்மாவுக்கும்  அக்காவுக்கும் சுகர் இருக்கு என சொல்லி கொடுக்க மறுக்கிறார்.

இதை தொடர்ந்து பார்த்தியா அவளுக்கு எங்க வீட்ட பத்தி எல்லாமே தெரியும். அவ தான் சரியான ஆள் என சொல்ல, பழனிச்சாமியின் அக்கா எனக்கு சம்மதம் என சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இதேவேளை, தற்போது பழனிச்சாமிக்கு பாக்கியாவை கல்யாணம் செய்து வைக்க அவரது அம்மா, அக்கா சம்மதம் சொன்ன நிலையில், இது பாக்கியா காதுக்கு போனால் என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

சன் டிவியில் முடிவுக்கு சில சீரியல்கள்…..

0

சன் டிவியில் ’அன்பே வா’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சீரியல்கள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் ஒரு சீரியலின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ’அன்பே வா’ என்ற சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரிக்கும் இரண்டு சீரியல்கள் புதிதாக ஆரம்பமாக இருப்பதாகவும் அதில் ஒன்று ’மாலினி’ என்றும் இன்னொன்று  டெல்னா டேவிஸ்  நடிக்கும் சீரியல் என்றும் கூறப்படுகிறது.

இதில்  டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய சீரியலின் பூஜை ஒரு மாதத்திற்கு முன்பே போடப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியலில்  டெல்னா டேவிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் அவரது புதிய லுக் மற்றும் சேலை கட்டிய புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் பிரபல சீரியல்

0

தமிழும் சரஸ்வதியும் ஒரு இந்திய தமிழ் மொழி சோப் ஓபரா ஆகும். இதில் தீபக் தினகர் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் நடித்துள்ளனர்.இது ஜூலை 12, 2021 அன்று ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது. S. குமரன் இந்த தொடரின் இயக்குனர் மற்றும் ராதிகா சீனிவாசன் மற்றும் B. சீனிவாசன் விகடன் டெலிவிஸ்டாஸ் அதன் தயாரிப்பாளர்கள்.சரஸ்வதி நன்றாகப் படிக்கவில்லை என்று தன் தந்தையின் தொடர்ச்சியான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக சரஸ்வதியை திருமணம் செய்து கொள்வதைக் கதை பேசுகிறது. அவள் அறியாத பெண்ணாக இருந்தாலும், வருங்கால மாப்பிள்ளைகள் அவளை திருமணம் செய்ய அதிக பணம் கேட்கிறார்கள். ஆயினும்கூட, உயர் தொழில் மதிப்புள்ள ஒரு படிக்காத நபரான தமிழை அவள் சந்திக்கிறாள். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தமிழ் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, ஏனெனில் அவர்கள் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பட்டம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இக்கதை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் முடிவுக்கு வரவுள்ளாதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ் எனும் தீபக்கின் இன்ஸ்டரகம் பக்கத்தில் கதையின் இறுதி நாள் படபிடிப்பு என பதிவிட்டு அங்கு இருக்கும் அனைவரையும் அறிமுகபடுதிள்ளார். 717 அத்தியாத்துடன் முடிவுக்கு வந்ததாக கூறிபிட்டுள்ளார்

https://www.instagram.com/p/C5lcsQ7iWMM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/reel/C5laHhLCGlT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை..

0

மிஸ்டர் மனைவி என்பது 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும், இது 6 மார்ச் 2023 அன்று திங்கள் முதல் ஞாயிறு வரை சன் டிவியில் திரையிடப்பட்டது. இந்தத் தொடரில் ஷபானா ஷாஜஹான் மற்றும் பவன் ரவீந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கதை பற்றியது இதுவாகும். சமூகத்தில் சமத்துவத்தை எதிர்பார்க்கும் வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணான அஞ்சலி, தனது வாழ்க்கையைத் தானே நிர்வகிக்கிறார், அதே நேரத்தில் மிஸ்டர் ஹோம்மேக்கராக (திரு மனைவி) ஆசைப்படும் விக்கி சிக்குகிறார். முக்கிய கதைக்களம் இதுதான்.

இக் கதையின் ஷபானாவை ரசிகரக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.இந் நலையில் அவர் தான் இந்த கதையில் இருந்து விலகுவதாக தனது இனடஸ்டராகம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது மிஸ்டர் மனைவி குடும்பத்திற்க்கு

”எனது கதாபாத்திரத்தை விட்டு விழகுவது கடினமான முடிவாக எனக்கு உள்ளது.ஆனாலும் அது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிக நன்றி உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த பலமாக அமைந்திருந்தது..நான் ஒரு புதிய பிராஜகட் , புதிய கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கின்றேன். எல்லோருக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C5li_dsyyED/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==