Home Blog Page 36

ரிலீசுக்கு தயாரான வரலட்சுமி சரத்குமாரின் திரைப்படம்

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

நயன்தாராவின் அடுத்த படம்.. ரிலீஸ் எப்போது?

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ’ஜவான்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் அதன் பிறகு இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆண்டு வெளியாகும் நயன்தாராவின் முதல் படமாக ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ இருக்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிச்சது ஒரே படம் தான்.. அந்த படத்தின் இரண்டாம் பாகமா?

0

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘லெஜண்ட்’ சரவணன், ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விவேக் ,யோகி பாபு, சுமன், நாசர், விஜயகுமார், லதா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லெஜண்ட்’. இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரமாண்டமாக ‘லெஜண்ட்’ சரவணன் தயாரித்திருந்த நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ‘லெஜண்ட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘லெஜண்ட் 2’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்படும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை முற்றிலும் காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் 90 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்த திட்டமிட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

’கனா காணும் காலங்கள் 3’.. தரமான அப்டேட் வந்துருச்சு..

0

’கனா காணும் காலங்கள்’ இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சீசன் 3 வெளியாகும் என்று கூறப்பட்டது. முதல் இரண்டு சீசன்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மூன்றாவது சீசனும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இதற்கான  பூஜை நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’கனா காணும் காலங்கள் ’முதல் சீசன் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இரண்டாவது சீசன் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு முடிந்தது என்பது தெரிந்தது. முதல்  சீசன் பத்தாவது வரை படிக்கும் மாணவ மாணவிகளின் கனவுகள், நிகழ்வுகள் இரண்டாவது சீசனில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவ மாணவிகளின் அனுபவங்களாக இருந்தது என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் அதே மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும்? அவர்களது புதுமையான அனுபவம் எப்படி? காதல் அனுபவம் எப்படி? என்பது குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’கனா காணும் காலங்கள் 3’ பூஜை தற்போது முடிந்துள்ளதாக அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எனவே ’கனா காணும் காலங்கள்’ சீசன் 3 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் மாதம் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் ’கனா காணும் காலங்கள் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு சீசன்களில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மூன்றாவது சீசனிலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனின் தரமான அப்டேட் வந்ததை எடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த புகைப்படத்தை ஷேர் செய்த மௌன ராகம் 2 சீரியல் ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது, அதில் ஒரு தொடர் தான் மௌன ராகம்.

முதல் பாகத்தில் அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகியது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்த 2021ம் ஆண்டு 2ம் பாகமும் புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

2ம் பாகத்தில் ரவீனா, ஷில்பா, சல்மானுன் பாரிஸ், ராகுல் என பலர் நடித்தனர். இதில் சக்தி-வருண் மற்றும் ஸ்ருதி-தருண் ஜோடி மக்களிடம் மிகவும் பிரபலமானார்கள்.

இரண்டாம் பாகம் கடந்த வருடம் முடிவுக்கு வர அதில் நடித்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரீஸுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் படு ரொமான்டிக்காக, மணமகன் – மணமகள் கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/C5yMXshylr_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

அமீர் படத்தின் டிரெயிலர்

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன்,சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தக்லைஃப்’ படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்..

0

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த ’தக்லைஃப்’ படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கமல்ஹாசன் தேர்தல் பணி காரணமாக தற்காலிகமாக விலகினார் என்றும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை ’தக்லைஃப்’ படக்குழுவினர் வீணடித்து விட்டதாக கூறி இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் அடுத்த வாரம் முதல் ’தக்லைஃப்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் மீண்டும் ’தக்லைஃப்’ படத்திற்கு திரும்பி வர இருப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து அவருக்கு வேற ஒரு கேரக்டர் அளிக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு ஆகிய மூவருமே இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து விலகிய நடிகர்களே மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது தலைகீழ் மாற்றமாக கருதப்பட்டாலும் படக்குழுவினர் தற்போது திருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள்…..

0

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகாத நிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் இந்த இரண்டு படங்களிலும் சேர்த்து அவருக்கு ரூபாய் 20 கோடி சம்பளம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்பிற்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஒரு பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இரண்டுமே பிரபல  நடிகர்கள் படங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஒன்று தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படம் என்றும் எச் வினோத் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதம் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் சமந்தா தான் நாயகி என்றும் இந்த இரண்டு படத்திற்கும் தலா 10 கோடி ரூபாய் அவர் சம்பளம் வாங்க இருப்பதாகவும் எனவே அவருக்கு 20 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக 5 முதல் 6 கோடி மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வாங்க இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த சம்பளம் குறித்த தகவல் சமந்தாவின் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘குக் வித் கோமாளி’ தர்ஷன் திருமணமா?

0

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் அதன் பிறகு ’தும்பா’ ’துணிவு’ ’அயலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் இருப்பினும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை அஞ்சு குரியனுடன் தர்ஷன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அஞ்சு குரியன் தமிழில் ’நேரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’சென்னை டு சிங்கப்பூர்’ ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் திருமண புகைப்படத்தை பார்த்த பலர் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக நினைத்து வாழ்த்து கூறிவரும் நிலையில் இது ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பு என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தான் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் விளம்பரத்திற்காக திருமணம் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தர்ஷன் அஞ்சு குரியன் திருமண புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இனியாக்கு கமிட்டான புது ஜோடி! கோபிக்கு சோலி முடிஞ்சு

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்க இனியா தனக்கு ஏற்ற மாதிரி யாரும் இல்லை, எல்லாரும் வயதானவர்களாக இருக்கிறார்கள் என புலம்புகிறார். இதனால் எழில் பாட்டுபோட அங்கிருந்து பழனி அக்காவின் மகன் டான்ஸ் ஆடிக்கொண்டே கீழே வருகிறார்.

கீழே வந்து ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரையும் இழுத்து  வைத்து டான்ஸ் ஆடுகிறார். அத்துடன் ஈஸ்வரி பாட்டி க்யூட்டா  இருக்கீங்க என எல்லாருக்கும் ஐஸ் வைக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டு வர இனியாவை பார்க்கிறார். இனியாவை பார்த்ததும் அவருக்கு பிடித்து விடுகிறது.

இதைத் தொடர்ந்து இனியா வெளியில் வந்து போன் பேசிக் கொண்டிருக்க, அவருடன் பேசுவதற்காக வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனை பழனிச்சாமியின் தங்கை பார்த்துவிட்டு அவரது அக்காவை கூப்பிட்டு அண்ணனுக்கு அம்மா பொண்ணு பார்த்தா, அவங்க பொண்ண உங்க பையன் பார்க்கிறான் அப்படி என்று பேசுகிறார். இதனால் அவர்  விமலை உள்ளே கூட்டிச் செல்கிறார். அதன்பின் பழனிக்கு கேக் வெட்டுகிறார்கள்.

பழனிச்சாமியின் அம்மா பாக்கியா பேசுவதையும் அங்கு உள்ளவர்களை கவனிப்பதையும் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். பழனிச்சாமிக்கு கேக் வெட்டி முடித்த பிறகு எல்லாருக்கும் பாயாசம் கொடுக்கிறார். பாக்கியாவின் சமையலைப் பற்றி எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

அத்துடன் பாயாசத்தை கொடுத்துவிட்டு பாக்கியா செல்ல,  இதை செஞ்ச கைக்கு தங்க வளையல் இல்லை வைர வளையல் தான் போடணும் என பழனி சொல்ல, பழனிச்சாமியின் தங்கை ஒரு மாதிரி பார்க்கிறார். ஆனால் அவரது அக்கா சிரிக்கிறார்.

இறுதியாக எல்லாரும் போட்டோ எடுக்கலாம் என விமல் சொல்லி எல்லாரையும் வைத்து போட்டோ எடுக்கிறார். அதில் இனியாவை தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். அந்த இடத்திற்கு பாக்கியா வர பழனிச்சாமி அவரையும்  கூப்பிட்டு தனக்கு அருகில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதை பார்த்து அவரது அம்மா சந்தோஷப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.