Home Blog Page 35

ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது ‘அண்டாவ காணோம்’..

0

விஷால் நடித்த ’திமிரு’ பிரகாஷ்ராஜ் நடித்த ’காஞ்சிவரம்’ தங்கர் பச்சான் இயக்கிய ’பள்ளிக்கூடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’.

இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின் தள்ளி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் திடீரென ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாகவும் அதன் பின் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ரிலீசுக்கு ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் முன்னா மற்றும் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கி உள்ளார். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://x.com/CineTimee/status/1778360107971056032 

 

 

 

 

 

 

‘துப்பறிவாளன் 2’..அப்டேட்

0

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ’துப்பறிவாளன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியை சமீபத்தில் முடித்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் செய்யும் வேலையை விஷால் நேரடியாக செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

’துப்பறிவாளன்’ திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக சமீபத்தில் லொகேஷன் பார்க்கும் பணிக்காக விஷால் லண்டன் சென்று இருந்தார் என்பதும் அதனை அடுத்து அஜர்பைஜான், மால்டா உள்ளிட்ட பகுதிகளில் அவர் லொகேஷன் பார்த்து விட்டு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால், பிரசன்னா தவிர மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை விஷாலே ஆடிஷன் வைத்து தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் ஆடிஷன் செய்து அதன் பிறகு தான் தேர்வு செய்யப்பட்டவர்களை இயக்குனரிடம் அறிமுகப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் விஷால் நேரடியாக ஆடிஷனில் கலந்து கொண்டு இந்த படத்தின் சில கேரக்டர்களுக்காக அவரே நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் உற்று பார்த்தால் தலையே சுற்றிடும்……

0

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது.

இதன் காரணமாக ரசனையே இன்றி உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் ஆடைக்கு பதிலாக f பேனை தனது மேலாடையை சுற்ற வைத்த காட்சிகள் ரசிகர்களை நிலைகுலைய வைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது அங்கங்கே கிழித்து போட்ட ஏதோ ஒரு வடிவிலான ஆடையை உடுத்தியுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

இது என்ன டிசைன் என்றே தெரியாமல் ரசிகர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஆனாலும் இவரது ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, இவரது போட்டோக்களை கொஞ்சம்  உற்று பார்த்தால் தலையே சுற்றிடும் என கலாய்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5nF7eJLh7Q/?utm_source=ig_web_copy_link

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அறிவிப்பு.

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் ஏற்கனவே சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் தற்போது ’குரங்கு பெடல்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த படம் குறித்த டைட்டில் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவின்படி இந்த படத்தை இயக்குபவர் கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்றும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தரமான சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/reel/C5no6H1RfRu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

‘ஒரு நொடி’ டீசர்..

0

‘ஒரு நொடி’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ’ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது.

இந்த டீசரில் ஒரு பெண் காவல் நிலையத்தில் ‘என் புருஷனை காணும்’ என்று புகார் கொடுக்கும் நிலையில் டீசரின் பின்னணியில் உள்ள வசனத்தில் ’ஒரு நேர்மையான போலீஸ்காரனுக்கு எப்பவாவது ஒரு சவாலான கேஸ் வரும், எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஒரு மிருகம் இருக்கும், சில சமயம் ஒரு நொடியில் நாம் எடுக்கிற முடிவு தான், நாம் மனுஷனா இல்ல மனித மிருகமான்னு காட்டிக் கொடுக்கும். அந்த ஒரு நொடி நம்ம வாழ்க்கையே புரட்டி போட்டு விடும், அப்படித்தான் இந்த கேசும்’ என்ற பின்னணியில் இருக்கும் காட்சிகள் உண்மையாகவே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி உள்ளது.

இந்த படத்தில் தமன் குமார், எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மணிவர்மன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

ரதிஷ் ஒளிப்பதிவில் குரு சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு

0

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க,ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் “லக்கி பாஸ்கர்” என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாஸ்கர் என்ற கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

சாதாரண மிடில் கிளால் மேனாக, ஒரு வங்கி ஊழியராக இருப்பவர் திடீரென்று அவருக்கு ஒரு மிகப் பெரிய பணத்தொகை கிடைக்கிறது இவ்வாறு டீசரின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஜூலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

 

 

 

அஜித்தை அடுத்து பிருத்விராஜ்க்கு ஆப்பு வைக்கும் நிறுவனம்..

சினிமாவில் தனது தந்தை சுகுமாரன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர்  என பன்முகம் கொண்டு தனக்கென ஒரு தடம்பதித்தவர் பிருத்விராஜ்.

தமிழில் மொழி, சத்தம் போடாதே, காவியத்தலைவன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார் பிருத்விராஜ்.

காவியத்தலைவன் திரைப்படத்திற்காக சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில விருதை  வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படத்திலும் பிரபாஸுக்கு இணையாக வில்லத்தனத்தில் அசுரனாக மிரட்டி இருந்தார் என்றே கூறலாம்

சமீபத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த “ஆடுஜீவிதம் தி கோட் லைஃப்” நேர்முறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூலிலும் கிட்டதட்ட 120 கோடியை தாண்டி சக்கை போடு போட்டு வருகிறது.

சினிமாவில் வாரிசு அரசியலை அதிகமாக முன்னெடுக்கும் போது, தான் தன் தந்தையின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டாலும்,

தனது கடின உழைப்பின் மூலமாக மட்டுமே இந்த இடத்தை அடைந்ததாக அடிக்கடி கூறி தெளிவுப்படுத்துவார் பிருத்விராஜ்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக தடம் பதித்த பிருத்விராஜ், மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பலரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் பிருத்விராஜ் இயக்கிய லூசிஃபர் திரைப்படமும் ஒன்று.

லூசிஃபர் படத்தில் தரமான அரசியல் கதையுடன் விறுவிறுப்பை கூட்டி எதிர்பார்க்க முடியாத திருப்பத்தை தந்து ரசிகர்களை வியக்க வைத்த பிருத்விராஜ் மீண்டும் இதன் அடுத்த பாகத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.

பான் இந்தியா மூவியாக ரெடியாக உள்ள இதில், முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் மீண்டும் இணைய உள்ளனர் என்பது தகவல். அடுத்த ஒரு மெகா ஹிட் கன்ஃபார்ம்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது யார் என்றால் அஜித்தை விடாமுயற்சியில் வச்சு செய்கிறதே அதே லைகா நிறுவனம் தான்.

நிதி நெருக்கடி, அது! இது! என்று பல கதைகளை அவிழ்த்து விட்ட லைகா தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கும் லூசிஃபர் 2 இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு லடாக்கில்  முடிந்துள்ளது  அடுத்த கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டுக்கு அடுத்து உள்ள மகேந்திரா சிட்டியில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘பொன் ஒன்று கண்டேன்’ டிரெயிலர்

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார். தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடித்துள்ளார்.அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

 

விஜய்க்கு என அட்வைஸ் இதுதான்: நடிகர் கார்த்திக்…..

நடிகர் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு எனது அட்வைஸ் இது தான் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோசம், அவரை நான் வரவேற்கிறேன், தம்பி விஜய் தாராளமாக வரட்டும், அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது, அதுவும் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் ஒரு அண்ணனாக நான் அவருக்கு கூறும் அட்வைஸ் என்னவென்றால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் திரையில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை சுலபமாக சென்றடையும். அதனால் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறேன்’ என்றார்.

கார்த்திக் அட்வைஸை ஏற்று கொண்டு விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது தனது முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜிம் பாய்ஸ் பவுன்சர்களையே மிரள விட்ட டாடா

0

பொதுவாக ஒருவருக்கு கொஞ்சம் பேரும் புகழும் வந்துவிட்டால் அதனுடன் சேர்ந்து திமிரும் தெனாவட்டும் வந்துவிடும் போல. அப்படித்தான் நடிகர் கவின் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும், வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவர் அலப்பறையை காட்டி வருகிறார்.

அத்துடன் தற்போது இவரைப் பற்றி வரும் விஷயங்கள் அனைத்தும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போவதில்லை. போனாலும் லேட்டாக போய்விட்டு சீக்கிரத்திலேயே வீட்டுக்கு கிளம்பி விடுகிறாராம். இதுல வேற அதிக சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி டீல் பேசி வரும் அளவிற்கு அதம்பல் பண்ணிக்கிட்டு வருவதாக பல விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இதோடு சேர்த்து தற்போது இன்னொரு விஷயமும் கசிந்திருக்கிறது. அதாவது தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த சூழலில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கவின் கிட்டத்தட்ட ஐந்து பவுன்சர்களுடன் போயிருக்கிறார். போன இடத்தில் ரசிகர்கள் கவினை பார்த்துடன் செல்பி எடுக்க அலை மோதி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பவுன்சர்கள் எதுவும் சொல்லாமல் போட்டோ எடுக்க அனுமதி கொடுத்து விட்டார்கள்.

 

 

இதனை பார்த்த கவின் அந்த பவுன்சர்கள் அனைவரையும் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் கொடுத்து திட்டி இருக்கிறார். இதோடு போகாமல் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் சண்டை போட்டிருக்கிறார். பொதுவாக எல்லா ஹீரோக்களும் ஸ்டண்ட் மாஸ்டர் என்றால் அவர்களின் கால்களில் விழுந்து தொட்டு வணங்குவார்கள்.

ஆனால் கவின், ஸ்டண்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு சூட்டிங் போன இடத்தில் ஏழரை இழுத்திருக்கிறார். இப்படி போன இடத்தில் எல்லாம் பிரச்சனை பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இவரால் தொடர்ந்து பட வாய்ப்பை பெற முடியும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் தான் ஆட்டம் போட்டு வருகிறார்.

இப்படித்தான் சில ஹீரோக்கள் ஓவராக ஆட்டம் போட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். இந்த லிஸ்டில் கவினும் இடம்பெறாமல் இருந்தால் சந்தோசம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் இவரை பற்றி தாறுமாறான கருத்துக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.