Home Blog Page 42

அடிதடியில் இறங்கிய முத்து.

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், ஸ்ருதி தனியாக வரும் போது நபரொருவர் அவரை வழிமறித்து தகராறு செய்ய, அங்கு வந்த முத்து அவரை அடித்து ஸ்ருதியை காப்பாற்றுகிறார்.

மேலும், என் மேல எவ்வளவு என்டாலும் கோபபட்டுக்கோ, ஆனா என் தம்பிய தண்டிக்காத. அவன் பாவம். நீ வந்தா தான் வீட்டுக்கு வருவன் என இருக்கான் என ஸ்ருதியிடம் சொல்கிறார்.

இதைக் கேட்டு அமைதியாக இருந்த ஸ்ருதி, வீட்டுக்கு வந்து முத்து இல்லாட்டி விச்சு என்ன எதாவது பண்ணி இருப்பான் என சொல்ல, அதுவும் முத்து வேலையா தான் இருக்கும் என வாசுதேவன் சொல்கிறார்.

அதற்கு ஸ்டாபிட் அச்சா. அன்னைக்கு நீங்க தான் மீனாவ தேவ இல்லாம பேசி இருக்கீங்க. அந்த வீட்டுல எல்லாரும் என்ன எப்படி பாக்குறாங்க தெரியுமா? என் தப்பு தான் இங்க வந்து இருக்க கூடாது. நான் கிளம்புறேன் என சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதியின் பெற்றோர் ஷாக் ஆகி நிற்கிறார்கள்.

சிறகடிக்க ஆசையில் எப்போது ஸ்ருதியும் முத்துவும் சேருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான கதைக்களம் உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமலா பால் -பேபி ஷவர் கொண்டாட்டம்

0

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

https://www.instagram.com/p/C5Xy1ZyNxIQ/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

 

‛இந்தியன் 2′ ஜூனில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0

‛இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்த படம் ‛இந்தியன் 2′. கமல் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பல பிரச்னைகள், தடைகள் கடந்து இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்தியன் 2 மட்டுமல்ல இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பும் சேர்ந்தே முடிந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தியன் 2 படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூனில் திரைக்கு வருவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், இந்தியன் படத்தின் தொடர்ச்சி என்பதாலும் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

 

கார்டியன் – விமர்சனம்

0

பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது ‘என்ட் கார்டு’ போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு பேய்ப் படம்தான் இந்த ‘கார்டியன்’.

இன்டீரியர் டிசைனிங் வேலைக்காக சென்னைக்கு வருகிறார் ஹன்சிகா. சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர். இன்டர்வியூவில் சரியாக பதில் சொல்லவில்லை என்றாலும் வேலை கிடைக்கிறது, அடுத்தடுத்து அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன்பின் தனக்குள் இருக்கும் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கெல்லாம் காரணம் எனத் தெரிகிறது. அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் எனக் கூற அதற்கு ஹன்சிகாவும் சம்மதிக்க அடுத்து என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதன்மைக் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ள படம். அழகான ஹன்சிகாவை இடைவேளை வரை காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பின் ஆக்ரோஷ ஹன்சிகாவைக் காட்டியுள்ளார்கள் இயக்குனர்கள். அதிர்ஷ்டமில்லாத தன்னைப் பற்றி கவலைப்படுபவருக்கு, திடீரென நினைத்ததெல்லாம் நடப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. அதற்கான காரணம் தெரிய வந்ததும் பெருந்தன்மையாக ஆவியை தனக்குள் இருக்க சம்மதிக்கிறார். அந்த ஆவியின் நிறைவேறாத முக்கிய ஆசை ஒன்றையும் நிறைவேற்றுகிறார்.

படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக ஒருவர் இருக்க வேண்டும் என அவருடைய காதலராக பிரதீப் ராயன் நடித்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.

90ஸ் காலத்து வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் நடித்திருக்கிறார்கள். ஹன்சிகா உடலுக்குள் புகுந்த ஆவி இவர்களைத்தான் பழி வாங்கத் துடிக்கிறது. அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக்.

நகைச்சுவை என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என்னமோ செய்கிறார்கள், ஆனால், சிரிப்புதான் வரவேயில்லை.

சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வழக்கம் போல சில காட்சிகளில் பொருத்தமாகவும், சில காட்சிகளில் சத்தமாகவும் உள்ளது.

படத்தின் இடைவேளை வரை ஹன்சிகாவின் அதிர்ஷ்டம் பற்றிய காட்சிகளாக அப்படியே கடந்து போகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். மிரள வைக்கும் பேய்ப் படமாக இல்லாமல் மிதமான பேய்ப் படமாகக் கடந்து போகிறது ‘கார்டியன்’.

கார்டியன் – பேய் காப்பாற்றுமா ?

சியான் 62-ல் இணைந்த பிரபல மலையாள நடிகர்

0

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் சியான் 62-ஐ இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடிகர் விக்ரமின் 62வது படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எச்.ஆர்.பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

 

காசி கோயிலில் தமன்னா சாமி தரிசனம்

0

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கடைசியாக தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். தமன்னா அவரது காதலர் நடிகர் விஜய் வர்மாவை விரைவில் மணக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.

இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்ட தமன்னா அடிக்கடி தெய்வ தரிசன சுற்றுலா செல்லுவது வழக்கம். அந்த விதத்தில் தற்போது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

“ஹர் ஹர் மகாதேவ்… காசி விஸ்வநாத், வாரணாசி,” என அப்புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்

0

நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. ‛போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ‛தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2′ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அசத்தி வருகிறார். தற்போது அவருக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 1ம் தேதி மும்பையில் இருவீட்டாரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க நடந்துள்ளது. இந்தாண்டுக்குள் திருமணம் நடக்கும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வரலட்சுமியும், நிகோலய் சச்தேவ்வும் கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

போர் – விமர்சனம்

0

ஒரு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர் ஒருவருக்கும், ஜுனியர் மாணவர் ஒருவருக்கும் இடையே நடக்கும் ‘ஈகோ’ மோதல்தான் படத்தின் மையக் கதை. கூடவே, வாரிசு அரசியல், சாதி, காதல், நட்பு என கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

புதுச்சேரியில் இருக்கும் செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தின் சீனியர் மாணவர் அர்ஜுன்தாஸ். அந்த பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டில் வந்து சேர்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவரும் சிறு வயதில் ஒரு போர்டிங் பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக இருக்கிறார்கள். அப்போது காளிதாஸுக்கு சீனியர் மாணவர்களால் வெறுப்பான ஒரு சம்பவம் நடக்கிறது. அதை மறக்காத காளிதாஸ், பல்கலைக்கழகத்தில் அர்ஜுன்தாஸை பழி வாங்க நினைக்கிறார். இருவருக்குமிடையே நடக்கும் சிறு சிறு சண்டைகள் பின்னர் எப்படி ‘போர்’ ஆக மாறுகிறது என்பதுதான் மீதிக் கதை.

அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதை மட்டும் படத்தில் காட்டவில்லை. அவர்கள் போதைப் பொருள் விற்பது, அதைப் பயன்படுத்துவது, சீனியர், ஜுனியர் சண்டை போட்டுக் கொள்வது என மற்ற விஷயங்களைத்தான் அதிகம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் கல்லூரி மட்டும் இருந்தால் சரியாக வருமா என்ற சந்தேகத்தில் ஒரு அரசியல்வாதி, கல்லூரி தேர்தலில் நிற்கும் அவரது மகள், அந்த மகளுக்கு எதிராக களமிறக்கப்படும் ஒடுக்கப்பட்ட மாணவி என கூடுதல் இணைப்பாக சேர்த்திருக்கிறார்கள். புதுச்சேரி பக்கத்து மாநிலமாக இருந்தாலும் வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கும் கல்லூரி போலவே படம் முழுவதும் தெரிகிறது. இப்படி ஒரு கல்லூரியில் படித்தால் மாணவர்களின் எதிர்காலம் ஆஹா, ஓஹோதான்.

அர்ஜுன் தாஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்கிறார்கள். அவரை மாணவர் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொள்ள கொஞ்ச நேரம் ஆகிறது. சீனியர் என்ற கெத்துடன் சுற்றி வருகிறார். அவருக்குப் பின்னால் ஒரு கூட்டமே திரள்கிறது. என்னவோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் கடைசியில் ஜுனியர் மாணவர்களுடன் போய் கைகலப்பில் ஈடுபடுகிறார். ஒரு நிறைவில்லாத கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். காளிதாஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும் போது இவரது முக்கியத்துவம் படத்தில் சற்றே குறைந்து போய் இருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம் கதாபாத்திரத்தை அழுத்தமாகவும், நிறைவாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் காளிதாஸ் பொருத்தமாக நடித்திருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவர் என முதல் காட்சியிலேயே ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிறு வயதில் அர்ஜுனால் தனக்கு ஏற்பட்ட அந்த வெறுப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர். அந்த கோபத்துடனேயே படம் முழுவதும் இருக்கிறார். அர்ஜுனைச் சுற்றியிருப்பவர்களை தன் வசப்படுத்த முயன்று வெற்றியும் பெறுகிறார். சீனியராக இருந்தாலும் சஞ்சனா நடராஜனை தன் காதல் வலையில் வீழ்த்துகிறார்.

போதைப் பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்கும் டாக்டர் மாணவியாக சஞ்சனா நடராஜன். அடிக்கடி ஊசி போடுகிறார், அதனால் டாக்டராகத்தான் இருக்க வேண்டும். ஜுனியராக இருந்தாலும் காளிதாஸைப் பிடித்துப் போய் அவருடன் ஊர் சுற்றி படுக்கையறை வரை போகிறார். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இவரது கதாபாத்திரம் பகீரென இருக்கும். பல்கலைக்கழகம் என்றால் தேர்தல், அரசியல் இல்லாமலா. மாணவ, மாணவிகளுக்காக குரல் கொடுப்பவராக டிஜே பானு. முன்னாள் மாணவி, இந்நாள் போராளியாக வலம் வருகிறார்.

ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் பொருத்தமாகவும், சில இடங்களில் துருத்திக் கொண்டும் நிற்கிறது. இரவு நேரக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் ஜிம்ஷி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிசௌசா ஆகியோருக்கு அதிக வேலை. கூடவே, எடிட்டர் பிரியங் பிரேம் குமாரை இயக்குனர் பிழிந்தெடுத்திருப்பார் எனத் தெரிகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள், என்ன படிப்பு படிக்கிறார்கள் என்பதை தெளிவாகவே காட்டவில்லை. நாமாக அவர்களை டாக்டருக்குப் படிக்கிறார், இஞ்சினியரிங் படிக்கிறார் என யூகித்துக் கொள்ள வேண்டும். மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளர் பிஜாய் நம்பியார். தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் வந்த ‘அக்னி நட்சத்திரம்’ அவருக்குப் பிடித்த படம் போலிருக்கிறது. அந்த பிரபு, கார்த்திக் கதாபாத்திரங்களை உல்டா செய்து அர்ஜுன் தாஸ், காளிதாஸ் கதாபாத்திரங்களாக மாற்றி, கதைக்களத்தை பல்கலைக்கழகமாக வைத்துக் கொண்டுள்ளார்.

எங்கெங்கோ சுற்றி என்னென்னமோ சொல்லி இரண்டரை மணி நேரத்தை ஓட்டுகிறார்கள். பொறுமை மிக அவசியம். கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் இதற்கா இவ்வளவு பில்டப் என கேட்க வைக்கிறது.

போர் – சின்னப் பசங்க சண்டை…

திருடு போன பணத்துடன் வீட்டுக்கு வந்த முத்து.. ரோகினிக்கு வந்த சந்தேகம், விஜயாவுக்கு ஷாக் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

0

திருடு போன பணத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்தியா பணத்தை எடுத்து வந்து கொடுத்து இது உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்ச பணம் திருப்பி கொடுத்தாச்சு. இனிமே அக்காவை வீட்டுக்கு அனுப்பி அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று முத்துவிற்கு வார்னிங் கொடுக்கிறார்.

முத்து அந்த பணத்தை எடுக்காமல் இருக்க சத்யா பணம் வேணாம்னா சொல்லுங்க திருப்பி எடுத்துக்கிறேன் என்று சொல்லி பணத்தை எடுக்க போக முத்து இது எங்க அப்பாவோட காசு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இது அவருக்கு தான் சேரனும் என்று எடுத்துக் கொள்கிறார்.

பிறகு சத்யா இனிமே உங்களால நேரடியா பேச முடியவில்லை என்று என் அக்கா அனுப்பி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. இன்னும் பணம் என்ன கேளுங்க என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி என எடுத்துக் கொடுக்க முத்து நீ சொன்ன பிச்சை காசு அதை நீயே வச்சுக்க என்று முகத்தில் தூக்கி எறிகிறார்.

அதைத் தொடர்ந்து இங்கே மீனா சமைத்துக் கொண்டிருக்க விஜயா சாப்பாடு ஆயிடுச்சா என்று கேட்க இன்னைக்கு நேரத்துக்கு சாப்பிட்ட மாதிரி தான் என்று கோபப்பட நீங்க டைமுக்கு கரெக்டா சாப்பிடணும்னா ஜெயிலுக்கு தான் போகணும் அங்க தான் மணி அடிச்சா சோறு கிடைக்கும் என்று சொல்லுவாங்க என்று விஜயாவுக்கு பதில் அளிக்கிறார். அதன் பிறகு பூ ஆர்டர் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து மீனா இல்லையா? கொஞ்சம் மீனாவை கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா நான் அவளை கூப்பிடனுமா என்று கோபப்பட மீனா வந்து பூவை கொடுத்து 600 ரூபாய் என்று கூறுகிறார்.

நீ எதுக்கு பூவை எல்லாம் பிரிட்ஜ்ல வைக்கிற எல்லாத்துலயும் ஒரே மல்லி பூ வாசனையா இருக்கு என்று மீனாவை திட்டி எடுக்க அண்ணாமலை இட்லி மல்லிப்பூ மாதிரி வேணும்னு கேக்குறேல அப்போ மல்லி பூ வாசம் வந்தா என்ன என கவுண்ட்டர் அடிக்கிறார். ரோகினாலும் என் பெயரில் பார்லர் வச்சிருக்கா மாச மாசம் எனக்கு பாக்கெட் மணி தரா இவ என்ன வாடகையா தரா என்று கேட்க உங்க அப்பன் வீட்டு ரோடா? பிளாட்பார்ம்ல தானே கடை வச்சிருக்க அதுக்கு எதுக்கு வாடகை தரவேண்டும் என்று கேட்கிறார்.

இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து வீட்டுக்கு மேல ரெண்டு பிளைட் பறந்துச்சு அவங்களாம் வாடகை கொடுத்தாங்களா? ஏன்னா அம்மா வீட்டுக்கு மேல பறந்துச்சு அதான் கேட்கிறேன் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து அண்ணாமலையிடம் கொடுக்க என்னடா இது என்று கேட்க உன் பணம் தான் பா என்று சொல்லும்போது பணம் என்ற வார்த்தையை கேட்டு ரூமுக்குள் இருந்த மனோஜ் வாயை பிளந்து கொண்டு வெளியே ஓடி வருகிறார்.

இந்த பொண்ணோட அப்பா உன்னை அலைய விட்டதுக்காக கோர்ட் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த அந்த பணத்தை கூட நீ அம்மாகிட்ட கொடுத்து காணாமல் போயிடுச்சுல, அந்த பணம் தான் இது, திருடனை புடிச்சிட்டாங்களாம் என்று பணத்தை கொடுக்க ரோகினி அது எப்படி மொத்த பணமும் வரும் என்று கேள்வி கேட்கிறார். சிலர் திருடினா தான் வராது சிலர் திருடுனா வரும் என கூறுகிறார்.

ஸ்ருதி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா ஆன்ட்டி என்று கேட்க அன்னைக்கு இருந்த நிலைமையில் அதெல்லாம் கொடுக்க முடியல என்று சொல்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் எப்படி பணம் திரும்பி வரும் என்று ஸ்ருதி கேட்க முத்து அன்னைக்கு நான் எனக்கு தெரிஞ்ச போலீஸ்கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்று சமாளிக்கிறார். அவனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்து அவனை செருப்பால் அடித்தால் தான் என் மனசு ஆறும் என்று விஜயா சொல்ல அப்படின்னா நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரூமுக்குள் ரோகிணி மனோஜிடம் இதனை ஏதோ தப்பா இருக்கு, திருடு போன பணம் முழுசா கிடைக்க வாய்ப்பே கிடையாது. ஒன்னு திருடனுக்கும் முத்துவுக்கும் ஏதாவது கனெக்சன் இருக்கணும் இல்ல இந்த திருட்டுக்கு முத்துக்கும் ஏதாச்சும் கனெக்சன் இருக்கணும் என்று சொல்ல மனோஜ் முத்து கோவமா பேசுவான், குடிப்பான். ஆனா பணத்தை எல்லாம் திருட மாட்டான் என்று கூறுகிறார்.

அப்படின்னா இதை திருடனுக்கு முத்து இருக்கும் ஏதோ லிங்க் இருக்கு அவர் சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்ல என்று ரோகிணி கூறுகிறார். இதையெல்லாம் மீனா கேட்டு விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் விஜய் டிவி சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ

0

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் நிஹாரிகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் அண்ணியாக நடித்திருந்தார்.

அது மட்டும் இன்றி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சிகளை 10 பிரபலங்களில் ஒருவராக பங்கேற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வைக்கும் குழந்தை வைத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிஹாரிக்கா மற்றும் ஸ்ரீநிதி என இருவரும் இந்த ரீல்ஸ் வீடியோவில் இடம் பெற்றுள்ளனர்.