Home Blog Page 43

வாய் விட்டு மாட்டிய கோபி, உண்மையை உடைத்த ராதிகா, பாக்கியா கொடுத்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

0

வாய்விட்டு கோபி சிக்கிக்கொள்ள உண்மையை உடைத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டே வீட்டுக்கு வர ராமமூர்த்தி என்னம்மா பிரச்சனை என்று கேட்க ராதிகா ஒன்றுமில்லை என்று சொல்லி மேலே சென்று விடுகிறார்.

அதைக் தொடர்ந்து ஈஸ்வரி கோபியை பிடித்து ஏன் பா இப்படி கத்துக்கிட்டே வரா என்று கேட்க ஒரு சின்ன பிரச்சனைதான்மா அதுக்கு கார்ல ஏறுனதில் இருந்து சண்டை போட்டுக்கிட்டே வரா, தினமும் இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா என்று சொல்ல ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு அவனுக்கு ஹார்ட் அட்டாக் வர நீ தான் காரணம் இப்ப எதுக்கு தினமும் அவனிடம் சண்டை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

உங்க பையன் ரொம்ப ஒழுங்கா என்று கேட்க ஈஸ்வரி ஆமா என் பையன் மாதிரி யாரையும் பார்க்க முடியாது ரொம்ப பொறுப்பான அமைதியான பையன். எப்பயும் உண்மையை மட்டும் தான் பேசுவான் என்று கோபியை பற்றி ஒரே பில்டப் ஆக பேச ஒரு கட்டத்தில் ராதிகா அப்படியா அப்போ உங்க பையன் ஆபீஸை இழுத்து மூடின விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகா சொன்னதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைய ஈஸ்வரி கோபியிடம் இவ என்னப்பா சொல்றா என்று கேட்க கோபி ஆமாம்மா ராதிகா சொல்றது உண்மைதான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதை ஏன்டா என்கிட்ட சொல்லல என்று கேட்க இந்த பிசினஸ் வச்சு தான் எல்லாத்தையும் சாதித்தேன் அப்படி இருக்கும் போது இப்போ ஆபீஸை இழுத்து மூடிட்டினேனு எப்படி சொல்றது என்று கேட்கிறார்.

இப்ப சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்க இந்த கோபிநாத் பிசினஸ் இழுத்து மூடிட்டேன் என்று சொல்லி சோபாவில் உட்கார்ந்து கண்கலங்குகிறார். அடுத்ததாக ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து முன்னாடியே கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டணும்னு 2, 3 தடவை வீட்டுக்கு வந்துட்டு போனாங்க. சரி எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடுவானு நினைச்சேன் ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை என்று அழ ராமமூர்த்தி செழியன் ஆகியோர் இதெல்லாம் எதுக்குப்பா எங்க கிட்ட சொல்லல என்று கேட்கின்றனர்.

எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்வியே இதையும் சொல்ல வேண்டியது தானே என்று ராமமூர்த்தி கேட்கிறார். அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரும்ப பாக்யா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே நீ வேகவேகமா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டு போற, நான் ஒன்னும் இல்லாம நிக்கிறேன் ரொம்ப சந்தோஷப்படு என்று பாக்யாவை வம்பு இழுக்க அவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார்.

அதன் பிறகு கோபி கூடிய சீக்கிரம் புதிய பிசினஸ் தொடங்கப் போறேன் அது கண்டிப்பா வெற்றியா அமையும் நான் பழையபடி திரும்பவும் மாறுவேன் என்று அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து கோபி தண்ணீர் எடுப்பதற்கு கிச்சனுக்கு வரும்போது ஃபோனில் யாரிடமோ வேலை கேட்டுக்கொண்டே வருகிறார்.

பாக்கியா அங்கிருக்க போனை வைத்து கோபி நான் பேசுவதெல்லாம் கேட்டு இருப்பியே ரொம்ப சந்தோஷமா இருக்குமே குளுகுளுன்னு இருக்குமே என்று கேட்க யார் கஷ்டப்படுறதையும் பார்த்து சந்தோஷப்படுற புத்தி எனக்கு இல்ல என்று கூறுகிறார். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என நாங்க புதுசா ஆரம்பிக்க போற ரெஸ்டாரண்டுக்கு நிறைய ஆளுங்களை எடுக்க போறோம். நீங்க வேணா அங்க மேனேஜரா வந்து சேர்ந்திடுங்க நான் உங்களுக்கு வேலை தருகிறேன் என்று சொன்ன கோபி அதிர்ந்து போகிறார்.

இந்த நேரம் பார்த்து ராதிகாவும் அங்கு வந்துவிட கோபி என்னது நான் உன்னோட ரெஸ்டாரன்ட்ல வேலை செய்யுணுமா? நீ எனக்கு சம்பளம் தருவியா? பாரு ராதிகா இதை நீயே கேளு நான் ஒன்னும் அந்த அளவுக்கு அதள பாதாளத்துக்கு போகல என்று பாக்கியாவிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

தர்ஷினியை வைத்து புது ப்ளான் போடும் குணசேகரன்.. நந்தினியால் உடைந்து போன ஞானம் – எதிர்நீச்சல் இன்றைய எபிசோட் அப்டேட்

0

தர்ஷினியை வைத்து குணசேகரன் புதிய பிளான் போட நந்தினியால் உடைந்து போய் உள்ளார் ஞானம்‌.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் கரிகாலன் மற்றும் ஜான்சிராணி சந்தித்து நான் சொல்லும் போது என்னை ஏதுன்னு கேட்காம கிளம்பி வந்துடனும் உங்களுக்கு செய்ய வேண்டியது நான் செய்கிறேன் என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து இங்கே ஞானம் மனது உடைந்து போய் உட்கார்ந்து இருக்க கதிர் நந்தினி சொன்னதுக்கா இப்படி இருக்க என்று கேட்க நந்தினி சத்தியமாக நான் தப்பான எண்ணத்தில் சொல்ல வரல என்று சொல்ல கதிர் வாயை மூடுடி என்று அடக்குகிறார்.

பிறகு குணசேகரன் தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்து நான் வர வரைக்கும் என் பொண்ணை நல்லபடியா பாத்துக்க என்று கூறுகிறார்.

 

சீரியலில் இருந்து வெளியேறிய மகாநதி லட்சுமி பிரியா.. இனி அவருக்கு பதில் சன் டிவி நடிகை – வெளியான ஷாக் தகவல்

0

மலையாள சீரியல் இருந்து வெளியேறியுள்ளார் மகாநதி லட்சுமி பிரியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லட்சுமி பிரியா.

இந்த சீரியல் மட்டும் இன்றி இவர் மலையாளத்தில் சந்திரகாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அப்படியான நிலையில் தற்போது திடீரென இந்த மலையாள சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார். இனி அவருக்கு பதிலாக அந்த சீரியலில் புதிய நந்தாவாக மான்ஸி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மான்ஸி சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தில் அடுத்தடுத்து இணையும் முக்கிய பிரபலங்கள்.. அடுத்தது யார் தெரியுமா?

0

தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணனின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

காதலரை மணக்கிறார் டாப்சி.. திருமணம் எப்போ தெரியுமா?

0

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதில் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் திருணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வணங்கான் டீஸர் வெளியீடு

0

இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள படம் ‛வணங்கான்’. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் கதை பிரச்னையால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின்னர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தார் பாலா. ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இதன் டீஸர் நேற்று(பிப்., 19) மாலை 5 மணியளவில் வெளியானது. 1:05 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீஸரில் வசனமே இல்லை. பின்னணி இசையும், அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

 

தனுஷின் 50வது பட தலைப்பு ‛ராயன்’

0

‛கேப்டன் மில்லர்’ படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது இந்த படத்திற்கு ‛ராயன்’ என பெயரிட்டு படத்தின் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் தள்ளுவண்டி கடை மாதிரியான ஒரு வாகனத்தில் சந்தீப் மற்றும் காளிதாஸ் கையில் கத்தியுடன் இருக்க, தனுஷூம் கையில் ஆயுதம் ஒன்றுடன் ரத்தக்கறை படிந்திருக்க உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு கோடை விடுமுறையில் அதாவது மே மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாம் ஜாம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அபிஷேக் ராஜா

0

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன.

“ஓ மை கடவுளே”, “பேச்சுலர்” என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த படங்களை தொடர்ந்து லவ் டிரையாலஜி சார்ந்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.

“ஜாம் ஜாம்” படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்” என்ற மலையாள படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

“என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இந்த பதிலை சொல்ல தோணும்..” நீலிமா ராணி பதிலடி..

0

நீலிமா ராணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நீலிமா ராணி. இதை தொடர்ந்து பாண்டவர் பூமி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் சின்னத்திரையில் அறிமுகமானார்.

மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சில படங்களிலும் நீலிமா ராணி நடிக்க தொடங்கினார்.

திமிரு, சந்தோஷ் சுப்ரஅனியம், நான் மகான் அல்ல, உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் கடைசியாக ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நீலிமா ராணிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இசைவானன் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றாலும அவர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்ததால் தங்களுக்கு ரூ.4 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டதாக நீலிமா ராணி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நீலிமா ராணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் “ என்னுடைய மார்பகங்களை பற்றி நெகட்டிவாக கமெண்ட் செய்யும் போது, எனக்கு உடனே பதில் சொல்ல தோன்றும். நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன் என்று சொல்ல தோன்றும்.

ஆனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று கமெண்டை டெலிட், அவரை பிளாக் செய்துவிட்டு நான் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவேன்” என்று தெரிவித்தார்.

அதே போல் என்னுடை உடல் எடை குறைத்தும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும். எனக்கே தெரியும் எனது உடல் எடையை குறைக்க சிறிது காலம் எடுக்கும் என்று.. ஏனெனில் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளேன். எனது உடல் 2 மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

சிங்கப்பூர் சலூன் – விமர்சனம்

0

வாழ்க்கையில் தனக்கு விருப்பமான வேலையில் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை. ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பெரிய ‘ஹேர் ஸ்டைலிஸ்ட்’ ஆக விரும்பும் ஒரு இளைஞன் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.

சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘அன்னபூரணி’ படத்தில் இந்தியாவின் நம்பர் 1 ‘செப்’ ஆக ஆசைப்படும் ஒரு பெண்ணின் கதையைப் பார்த்தோம். அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ‘ஒன் லைன்’ ஒன்றுதான். ஆண், பெண், செய்ய விரும்பும் தொழில், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அது மட்டும்தான் சற்றே வித்தியாசம்.

ஒரு ஹேர் ஸ்டைலால் மனிதனின் தோற்றத்தை மாற்றி, அவனுக்கு மரியாதை கிடைக்க வைக்க முடியும் என தங்கள் ஊரில் சலூன் கடை வைத்திருக்கும் லால்-ஐப் பார்த்து ஆச்சரியப்படுகிறார் சிறுவனான ஆர்ஜே பாலாஜி. வளர்ந்த பின் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என நினைக்கிறார்.

அப்பா சொன்னதால் இஞ்சினியரிங் படித்து முடித்து, சென்னையில் சலூன் கடையில் வேலைக்குச் சேர்கிறார். பின்னர் தனியாக 5 கோடி வரை செலவு செய்து சொந்தமாக ‘சிங்கப்பர் சலூன்’ கடையை ஆரம்பிக்க இறங்குகிறார். ஆனால், அதைத் திறக்க முடியாமல் சிக்கலுக்கு ஆளாகிறார். அவை என்ன, அவற்றைத் தீர்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் காட்சியிலேயே தற்கொலைக்கு முயலும் ஆர்ஜே பாலாஜியைக் காட்டி அதிர்ச்சியூட்டுகிறார் இயக்குனர். சரி போகப் போக கலகலப்பான பாலாஜியைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் ஏமாற்றமே. ஒரு சில காட்சிகளில் மட்டும் ‘பாலாஜி டைப்’ வசனங்கள் வந்து போகிறது.

குறிப்பாக அந்த ‘பாய் பெஸ்ட்டி’ வசனத்திற்கு தியேட்டரில் கைத்தட்டல்கள். படம் முழுவதும் சீரியஸான பாலாஜியைப் பார்க்க முடியவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். படபடவென, கலகலவென சிரித்து கமெண்ட் அடிக்கும் பாலாஜிதான் ரசிகர்களுக்கான விருப்பம்.

பாலாஜியின் மனைவியாக மீனாட்சி சவுத்ரி. தற்போது விஜய் நடித்து வரும் ‘த கோட்’ படத்தின் கதாநாயகி. இதற்கு முன்பு மீனாட்சி அறிமுகமான ‘கொலை’ படத்தில் சிறப்புத் தோற்றம் போல சில காட்சிகள்தான் வந்தார். இந்தப் படத்தில் கூடுதலாக மேலும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

‘கஞ்சப் பிரபு’ மாமனாராக சத்யராஜ். ஒரு நீ…ளமான ‘பார்’ காட்சியை சத்யராஜுக்காகவே வைத்திருக்கிறார்கள். படத்தில் அது ஒரு திருப்புமுனையான காட்சி என்பதால் பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது. மற்ற காட்சிகளில் ஓவராகவே நடித்துத் தள்ளியிருக்கிறார் சத்யராஜ்.

பாலாஜியின் சிறு வயது நண்பனாக கிஷன் தாஸ், சகலையாக ரோபோ சங்கர், இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக ஜான் விஜய், பாலாஜி ‘கத்திரி’யைப் பிடிக்கக் காரணமாக இருந்த லால், அன்பான அப்பா தலைவாசல் விஜய் என மற்ற கதாபாத்திரங்கள் அளவோடு நடித்திருக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர்கள் விவேக் மெர்வின். படத்தில் எந்த இடத்தில் பாடல் வந்தது என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள். ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை ஓகே. ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற பிரம்மாண்ட கடையில் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. ஆரம்ப கிராமத்து காட்சிகளில் தனியாகத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

ஆர்ஜே பாலாஜியின் சிறு வயதுக் காட்சிகள் என படத்தின் டைட்டிலே ஒரு அரை மணி நேரம் போகிறது. அதன்பின் கதைக்குள் வந்த சிறிது நேரத்தில் இடைவேளை வந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பின் பாலாஜியின் பிரச்சனையைத் தவிர்த்து அவர் கடை அருகில் உள்ள இளைஞர்களின் பிரச்சனை, டிவி ஷோ என திரைக்கதை எங்கெங்கோ அலைபாய்கிறது.

விவசாயப் பிரச்சனை என்று சொன்னால் ஏதாவது விமர்சனம் வருமென்று ‘பறவைகள்’ பிரச்சனை என்று சொல்லியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சினிமாத்தனமாகவே முடிந்தாலும் அது நிறையவே நெகிழ வைத்துவிட்டது. இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல என்பதை உணர்த்தும் ஒரு முடிவு.

சிங்கப்பூர் சலூன் – ஆவரேஜ் கட்டிங்…