Home Blog Page 44

கேப்டன் மில்லர் திரைவிமர்சனம்

0

கதைக்களம்

ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தை சேர்ந்த நாயகன் தனுஷ், ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், பட்டாளத்தில் சேர்கிறார். சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திர போராட்டகாரர்களை ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார். பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்னவரை கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் தனுஷ்.

இவரை பிடிக்க ஆங்கிலேயர்கள் தேடுகிறார்கள். இந்நிலையில், ஊர் கோயிலில் பழமையான பொக்கிஷத்தை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றுவிடுகிறார்கள். இதை அவர்களிடம் இருந்து திருட ராஜா ஜெயபிரகாஷ் தனுஷை நாடுகிறார்.

பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் ஊரை விட்டு ஓடுகிறார். இதனால் கோபமடையும் ஆங்கிலேயர்கள் ஊர் மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள்.

இறுதியில் ஊர் மக்களை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், தான் அசுர நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். மக்களுக்காக ஏங்குவது, மனம் வருந்துவது, போராடுவது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சுதந்திர போராட்டகாரர்கள் சுடப்பட்ட பிறகு வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். கிளைமாக்ஸில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும், பிற்பாதியில் தனுஷுக்கு உதவுபவராகவும் நடித்து மனதில் பதிகிறார். நிவேதிதா சதீஷ் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். குமரவேல் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்கம்

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வியலில் இருந்து தொடங்கி ஆக்ஷன் படமாக முடித்து இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை மாஸாக இயக்கி இருக்கிறார்.

இசை

படத்திற்கு பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை. படம் முழுக்க வித்தியாசமான பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு

பழைய காலத்திற்கு ஏற்ப காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா.

படத்தொகுப்பு

நாகூரன் படத்தொகுப்பு அருமை.

காஸ்டியூம்

பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

புரொடக்‌ஷன்

சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

அயலான் திரைவிமர்சனம்

0

கதைக்களம்

பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி சிவகார்த்திகேயன் சென்னை வந்து யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த கல்லை வைத்து வில்லன் பூமியில் அதிக துளையிட்டு வாயு ஒன்றை எடுக்க முயற்சிக்கிறார். இதனை அறிந்த ஏலியன் அந்த கல்லை மீட்க வில்லன் இருக்கும் இடத்திற்கு செல்கிறது. அப்போது கல்லை மீட்டு வெளியே வரும் பொழுது அடிப்பட்டு மயங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் குழுவிடம் மாட்டிக் கொள்கிறது.

ஒரு கட்டத்தில் ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார்.

இறுதியில் சிவகார்த்திகேயன் இதனால் என்ன பிரச்சனைகளை சந்தித்தார்? ஏலியன் கல்லை எடுத்துக் கொண்டு தன் கிரகத்திற்கு சென்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்‌ஷனிலும் கலக்கியிருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் அழகாக வந்து கவர்ந்துள்ளார்.

யோகிபாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கைக்கொடுத்துள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.

இயக்கம்

அயலான் படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதிரடி காட்டியுள்ளார் இயக்குனர் ரவிகுமார். கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வெட்டுகிளிகள் வரும் காட்சிகள், ஏலியன் வரும் காட்சிகள் என படம் முழுவதும் கிராபிக்ஸால் மிரட்டியுள்ளார்.

இசை

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

ஒளிப்பதிவு

நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

படத்தொகுப்பு

ரூபன் படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.

காஸ்டியூம்

பல்லவி சிங் மற்றும் நீரஜா கோனா சிறப்பாக காஸ்டியூம் டிசைன் செய்துள்ளனர்.

புரொடக்‌ஷன்

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் ’அயலான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- வெளியேறியவர்கள் இவர்தானா?

0

விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் கான்செப்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.

7வது சீசன் படு பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத விறுவிறுப்பின் உச்சமாக இந்த பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டு வீடு, டபுள் டபுள் எவிக்ஷன் என ஏகப்பட்ட புது விஷயங்கள் நடந்தன.

நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, ஆனால் இந்த 7வது சீசனின் வெற்றியாளராக யார் வருவார் என்பது ரசிகர்களால் இன்னும் கணிக்கவே முடியவில்லை.

இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ரவீனா வெளியேறியுள்ளார் என ஏற்கெனவே தகவல் வர இப்போது இன்னொரு எவிக்ஷன் நடந்ததாக கூறப்படுகிறது.

ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக குணச்சித்திர நடிகை ஒருவர் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். இதோ அவரது டுவிட்டர் பதிவு,

 

நேருக்குநேர் மோதும் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்

0

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதில் அயலான் படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படமும் ஜனவரி 12ம் தேதி தான் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கூடுதலாக கேப்டன் மில்லர் படத்திற்கு சென்சாரில் யு/ஏ அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் அயலான், கேப்டன் மில்லர் இரு படமும் ஒரே தேதியில் மோதுகிறது.

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

0

உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து உறியடி 2ஆம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து விஜய் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஃபைட் கிளப். ஆதித்யா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தனது G Squad நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிய ஃபைட் கிளப் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
சிறு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் பட்டையை கிளப்பும் கதாநாயகன் செல்வாவை [விஜய் குமார்] பெரிய கால்பந்து வீரனாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார் பெஞ்சமின்.

பெஞ்சமினுடைய தம்பி தான் ஜோசப். இவர் கிருபாகரன் என்பவருடன் இணைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்கிறார். இது பெஞ்சமினுக்கு தெரியவர முதலில் தனது தம்பியை எச்சரிக்கிறார். ஆனாலும் அதை கேட்காமல் கஞ்சா வியாபாரம் செய்கிறார் ஜோசப். ஒரு நாள் தனது தம்பியையும், கிருபாகரனையும் அடித்துவிடுகிறார் பெஞ்சமின்.

இதனால் தனது அண்ணன் என்றும் பார்க்காமல் கிருபாகரனுடன் இணைந்து பெஞ்சமினை கொலை செய்கிறார் ஜோசப். ஆனால், இந்த கொலையில் ஜோசப் போலீசிடம் சிக்கிக்கொள்ள கிருபாகரன் தப்பித்துவிடுகிறார். கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் சோசப் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்.

தன்னை ஒரே வாரத்தில் சிறையில் இருந்து ஜாமினில் எடுக்கிறேன் என கூறி 12 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்க வைத்த கிருபாகரனை பழிதீர்க்க வேண்டும் என முடிவு செய்கிறார் ஜோசப். இதற்கு பகடைக்காயாக கதாநாயகன் செல்வாவை பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் செல்வா சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
ஃபைட் கிளப் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படமுழுக்க சண்டைகள் தான் நிறைந்து இருக்கிறது. ஒரு பக்கம் அது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது.

சசி என்பவர் எழுதிய கதையை வைத்து இயக்குனர் அப்பாஸ் எடுத்த முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். முழுக்க முழுக்க ஒரு ராவான ஆக்ஷன் படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் சுவாரஸ்யம் இருந்ததா என்று கேட்டால், அது கேள்விக்குறி தான்.

சண்டை, போதை, பழி தீர்ப்பது இதுவே படம் முழுக்க இருப்பதால் படத்தின் மீது லேசாக சலிப்பு ஏற்படுகிறது. அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கூறியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சூப்பர்.

குறிப்பாக கதாநாயகன் விஜய்யின் செல்வா ரோல், அவினாஷின் சோசப் ரோல் மற்றும் கிருபாகரன் ரோல் மற்றும் இவர்களை சுற்றி இருக்கும் பசங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக அவினாஷ் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

மகாபாரதத்தில் வரும் சகுனியை போல் அவினாஷின் கதாபாத்திரத்தை பக்காவாக செதுக்கியுள்ளார் இயக்குனர் அப்பாஸ். ஆனால், எதற்காக இப்படத்தில் கதாநாயகி என்று தெரியவில்லை. அவருக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் கொடுக்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே அவர் வைத்திருந்தது போல் தெரிந்தது.

கமர்ஷியல் படங்களில் வருவது போல் இல்லாமல் நேரில் ஒரு சண்டை நடந்தால் எப்படி இருக்குமோ அதே போல் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்த விக்கி மற்றும் அபூபக்கருக்கு பாராட்டுக்கள். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

முக்கியமாக பல இடங்களில் பட்டையை கிளப்பியுள்ளது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. குறிப்பாக சண்டை காட்சிகளில் இவர் போட்டுள்ள பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. எடிட்டர் கிருபாகரன் உழைப்பு திரைக்கதையில் நன்றாக தெரிகிறது. திரைக்கதையை தனது எடிட்டிங் மூலம் அருமையாக காட்டியுள்ளார்.

இவை அனைத்தையும் தாண்டி வசனங்களுக்கு தனி பாராட்டு. ‘நான் பிறக்குறதுக்கு முன்னாடி ஆரம்பிச்ச சண்டை, நான் இறந்தாலும் நிக்காது’ என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்

விஜய் குமார், அவினாஷ் நடிப்பு

கோவிந்த் வசந்தா பின்னணி இசை

எடிட்டிங்

இயக்குனர் அப்பாஸின் ராவான ஆக்ஷன் மேக்கிங் அட்டெம்ப்ட்

மைனஸ் பாயிண்ட்

சண்டை காட்சிகள் ஒரு பக்கம் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது

படத்தில் கதாநாயகிக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லை

வெகுஜன மக்களை இப்படம் கவருமா என்பது கேள்விக்குறி தான்

மொத்தத்தில் வெறித்தனமான சண்டையோடு வெறுப்பேத்தியுள்ளது ஃபைட் கிளப்

தளபதி 68 படத்தில் மும்முரம் காட்டும் நடிகர் விஜய்

0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1-ஆம் தேதி தாய்லாந்து சென்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய் ‘தளபதி 68’ படப்பிடிப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ரத்னகுமார்.. ஏன் தெரியுமா?

0

கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரத்னகுமார் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கும் இணை எழுத்தாளராக இருந்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எழுதுவதற்காக ஆஃப் லை செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

முதல்வன் பட பாணியில் விஜய்யிடம் கேள்வி கேட்ட அர்ஜுன்

0

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முதல்வன். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ரகுவரனிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் அடங்கிய காட்சி மிகவும் பிரபலம்.

அதுபோல் லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் விஜய்யிடம் கேள்வி கேட்டார். விஜய்யாக இருப்பது கஷ்டமா? ஈசியா? என்று அர்ஜுன் கேள்வி கேட்டார். அதற்கு விஜய், வெளியே இருந்து பார்ப்பதற்கு கஷ்டமா தெரியும், ஆனா எனக்கு ரொம்ப ஈசி. ஏனா ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், என்றார்.

நான் கேட்டது யோகன்.. அவர் கொடுத்தது லியோ.. கவுதம் மேனன்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் லியோ படக்குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கவுதம் மேனன், “நானும் விஜயும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் இணைய வேண்டியது… முடியாமல் போனது. தற்போது லியோவில் இணைந்து இருக்கிறோம். யோகன் அத்தியாயம் ஒன்று உருவாகும் என்று நினைக்கிறேன். தளபதி am Waiting,” என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய் – மன்சூர் அலிகான்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் லியோ படம் 12 நாளில் 540 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில், படக்குழு லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மன்சூர் அலிகான், “சிவாஜி பேசிய சக்சஸ் வசனம் பேசிய இடத்தில் இருந்து விஜய்யின் நாளைய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பம் ஆனது. இன்று தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடு ராத்தரியில் போன் செய்து லியோ படத்தில் ஏன் பிளாஷ்பேக் பொய் சொன்ன என்று கலாய்க்கிறார்கள். யாரும் படத்தை பார்த்து தம், சரக்கு அடிக்காதீர்கள். அது எல்லாம் சும்மா, பொய். விஜய் ரசிகர்கள் நாளைய தீர்ப்பை எழுத தயாராக இருங்கள்,” என்றார்.