Home Blog Page 58

லியோ படத்தின் சென்னை படப்பிடிப்பு… வைரலாகும் நியூ அப்டேட் இதோ.!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் உருவாக்கி இருக்கும் இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு மே 1 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு ஒரு மாத காலம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோரின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிவாங்கியை திட்டிய நடுவர்! CWC இந்த வார எலிமினேஷன் இவரா?

0

குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் எலிமிநேஷன் போட்டி நடைபெற இருப்பதால் வெளியேறப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த வாரம் போட்டியாளர்கள் அசைவம் தான் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒரு சக்கரத்தை சுற்றி அவர்களுங்கான டிஷ் என்ன என்பதை தேர்வு செய்தனர். அப்போது சிவாங்கிக்கு squid வந்தது.

இதுவரை சிவாங்கி ஒரு முட்டையை கூட சமைத்தது இல்லை, ஆனால் இந்த முறை அசைவம் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் வந்துவிட்டது.

எலிமிநேஷன் லிஸ்டில் இறுதியாக சிவாங்கி, ஷெரின் மற்றும் ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கின்றனர். அந்த நேரத்தில் நடுவர் தாமு சிவாங்கியை திட்டி பேசி இருக்கிறார். “நான் வெஜிட்டேரியன், அதனால் Nonveg செய்ய மாட்டேன் என சொல்ல முடியாது. இது தான் ஷோ format” என தாமு கூறியிருக்கிறார்.

அதனால் இந்த வாரம் சிவாங்கி தான் எலிமினேஷனா என கேள்வி எழுந்திருக்கிறது.

 

மே 5க்கு ‛குலசாமி’ தள்ளிவைப்பு

0

சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛குலசாமி’. முன்னாள் டிஜிபி ஜாங்கிட் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி வசனம் எழுதி உள்ளார். இந்தப்படம் இன்று(ஏப்., 21) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் மே 5க்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛ஏப்ரல் 21 ஆம் தேதி குலசாமி படம் வெளியிட திட்டமிடப்பட்டது. உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது”.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விமல் நடித்துள்ள மற்றொரு படமான தெய்வ மச்சான் படம் இன்று வெளியானது.

‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு தொடங்கியது

0

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இதனை சர்தார், காரி, ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.

மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து பணியாற்றிய முதல் படமான ‘கனா’வும் கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி நடித்த வெப்சீரிஸ் குறும்படமாக வெளியாகிறது

0

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார். அசோகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் எபிசோட் முடிந்த நிலையில் மயில்சாமி மறைந்து விட்டதால் எடுத்த வரை உள்ள காட்சிகளை கொண்டு அதனை குறும்படமாக வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து இயக்குனர் ஏ.ராகுல் கூறியதாவது: இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும். நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார். அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம். என்றார்.

இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனக்கு இன்ஸ்டாகிராமில் புது கணக்கு தொடங்கியுள்ளார்.

மேலும் தனது புகைப்படத்துடன் “ஹலோ நண்பா, நண்பி” என முதல் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே டிவிட்டர்,முகநூல் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றார். இப்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார்.

விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 60 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

படுக்கை அறையில் காதலனுடன் எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிஹாசன்

0

படுக்கையறையில் காதலனை கட்டிப்பிடித்தபடி எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அவர் விஜய்க்கு ஜோடியாக புலி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தாலும், இவரால் கோலிவுட்டில் பெரியளவில் சோபிக்க முடிவில்லை.
தமிழில் ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த படம் லாபம். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. இப்படத்திற்கு பின் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் சுத்தமாக கிடைக்கவில்லை. இதனால் டோலிவுட் பக்கம் ஒதுங்கிய ஸ்ருதிஹாசனுக்கு அங்கு பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி,எப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தான் சலார் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், ஷாந்தனு என்கிற டூடுல் கலைஞரையும் காதலித்து வருகிறார்.

தற்போது ஷாந்தனுவும், ஸ்ருதியும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளனர். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். தனது காதலுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஸ்ருதி, அண்மையில் ஷாந்தனு உடன் படுக்கையறையில் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் ஸ்ருதிஹாசனை ஷாந்தனு இருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர். ஸ்ருதிஹாசன் பதிவிட்ட இந்த அந்தரங்க புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சில இரவுகளில்… என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

0

பிரபல மலையாள நடிகையான நிமிஷா சஜயன், ’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்கிற படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர். மலையாள திரையுலகில் மிகவும் போல்டன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இவர் நடித்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான… ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தான் தமிழில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

மேலும் தமிழில், முதல் முறையாக தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிமிஷா, நிர்வாண புகைப்படத்துக்கு பதிவு ஒன்றை போட்டு, மிகவும் சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.

அந்த பதிவில், ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ பதிவிட்டுள்ளார். இவர் போட்ட இந்த பதிவு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் சுயநினைவோடு தான் இந்த பதிவைநிமிஷா போட்டாரா? அல்லது யாரேனும் இவரின் இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்தார்களா? என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

கஜினி 2 கதை ரெடியா? இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பதில்

0

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குனர் முருகதாஸ் கஜினி 2 குறித்து பேசியுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான முருகதாஸ், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி, 7-ம் அறிவு விஜய் நடிப்பில், துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் தயாரித்துள்ள படம் ஆகஸ்ட் 16,1947.

கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் ஏ,ஆர்.முருகதாஸ், தனது இயக்கத்தில் அமீர் கான் மற்றும் அசின் நடித்த கஜினி படம் குறித்து பேசினார். பாலிவுட் சினிமாவில் ரூ 100 கோடி கிளப்பில் முதல் இடத்தை கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும், இந்த தகவல்களை இயக்குனர் மறுத்துள்ளார். மேலும் புதிய திரைக்கதையுடன் இந்தி படங்களில் மீண்டும் நுழைய திட்டமிட்டுள்ளதாக கூறினார். கஜினி 2 பற்றிய அப்டேட்டைக் கேட்டபோது, கஜினி 2 பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை, அந்த பெண் (அசினின் கல்பனா) இறந்துவிட்டார், அவருக்கு (அமீர் கானின் சஞ்சய்) ஞாபக மறதி உள்ளது. அத்துடன் முடிந்துவிட்டது. என்னிடம் இரண்டு புதிய ஸ்கிரிப்ட்கள் உள்ளன.

ஹிந்திக்கு புதிதாக ஏதாவது செய்வேன். பாகுபலி 1 மற்றும் 2, பொன்னியின் செல்வன்: 1, கேஜிஎஃப் 1 மற்றும் 2, மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பல தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் நாடு முழுவதும் வெற்றி பெற்றாலும், மக்கள் டேக் பான் இந்தியா என்று நினைக்க தொடங்கிவிட்டதாக முருகதாஸ் கூறினார்.

மேலும் மும்பையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறை தயாரிப்பாளராக உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பான்-இந்தியா என்ற குறிச்சொல்லால் நீங்கள் அனைவரும் சோர்வடைந்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இது உங்களை ஆச்சரியப்படுத்தும், நீங்கள் அதை அனுபவிப்பீர்கள். படத்தைத் தொடங்கும்போது, இதைத் தமிழ்ப் படமாக உருவாக்க விரும்பினோம்.

படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் ஒருவர் அதைப் பார்த்து, ‘இந்தப் படம் அதிக ரசிகர்களைச் சென்றடையும் திறனும் ஆற்றலும் உள்ளது, ஏன் பிற மொழிகளில் டப் செய்ய நம்மால் முடியாதா என்று யோசித்த பிறகுதான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம்.இந்தியர்களான நமக்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தது, அதே உணர்வுகளை உணர்ந்தோம், எனவே அதைச் செய்ய வேண்டும் என்று விவாதித்தோம். நீங்கள் படத்தை ரசிப்பீர்கள்.

இந்த படத்தின் இயக்குனர் எட்டு வருடங்களுக்கு முன் என்னிடம் வந்தார். இவர் என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவருடைய ஸ்கிரிப்டைப் படித்து அதைத் தயாரிக்க முடிவு செய்தேன். ஒரு அற்புதமான கதைக்கு அவருக்கு ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது என்று கூறியுள்ளார்.

முருகதாஸின் கடைசி சில படங்களான ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் மகேஷ் பாபு நடித்த படம் மற்றும் அவரது கடைசி ஹிந்தி படமான சோனாக்ஷி சின்ஹா நடித்த அகிரா ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது குறித்து பேசிய அவர்“நாங்கள் எல்லா படங்களுக்கும் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஒவ்வொரு படத்திலும், நாங்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்கிறோம், சில படங்கள் வேலை செய்யும், சில இருக்காது. எனவே, நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன், நான் அதை சரிசெய்வேன், நான் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்

என்.எஸ்.பொன்குமார் இயக்கிய ஆகஸ்ட் 16 1947, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலை – விமர்சனம்

0

தயாரிப்பு – ஆர்எஸ் இன்போடெயின்மென்ட்
இயக்கம் – வெற்றிமாறன்
இசை – இளையராஜா
நடிப்பு – சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி, கவுதம் மேனன்
வெளியான தேதி – 31 மார்ச் 2023
நேரம் – 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் – 4/5

அரசின் திட்டங்கள், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, மக்களின் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறையின் அடக்குமுறை, கடமைக்காக தங்கள் இன்னுயிரை பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் பல கதைகள் வந்திருக்கிறது. அவற்றில் ஒரு சில கதைகள் கமர்ஷியல் படமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டன. ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டியுள்ளன. அப்படி ஒரு படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி என இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள சில கலைஞர்களை முதலிலேயே பாராட்டாமல் இந்த விமர்சனத்தைப் பதிவு செய்யவும் முடியாது. அவரவர் பங்களிப்பில் இதுவரையிலான அவர்களது திறமையின் சிறந்த வெளிப்பாடு இந்தப் படம்.

அருமபுரி என்ற ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்த சுரங்கத்தை எதிர்த்து விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற தீவிரவாதக் குழு பேராடுகிறது. ரயில் குண்டு வெடிப்பு, காவலர்களைக் கொல்வது என பலவித தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது. மக்கள் படை தலைவன் ஆன விஜய் சேதுபதி யார் என்றே அரசுக்கு தெரியாது. அவரைக் கண்டுபிடிக்கவும், அவரது படையை அழிக்கவும் பல மாதங்களாக சேத்தன் தலைமையில் ஒரு காவல் துறை அணி போராடி வருகிறது. அந்தக் குழுவில் டிரைவராக வேலைக்குச் சேரும் சூரி, ஓரிரு முறை விஜய் சேதுபதியைப் பார்க்கிறார். தனது கடமையில் ஈடுபாட்டுடன் இருக்கும் சூரி, மேலதிகாரி சேத்தன் ஆணையை மதிக்காத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணித் தண்டனை கொடுக்கப்படுகிறார். காவல் துறை குழுவுக்கு புதிய அதிகாரியாக டிஎஸ்பி கவுதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அந்தக் குழுவினர் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்தார்களா, சூரி அதனுள் எப்படி வருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், படத்தில் கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வொருவருமே குறிப்பிடும்படியான அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்குள்ளாகும் படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என யோசித்தவர்கள், இந்தப் படத்தைப் பார்த்த பின் குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஒரு இடத்தில் கூட இதற்கு முந்தை நகைச்சுவை நடிகர் சூரியை படத்தில் பார்க்க முடியாது. மேலதிகாரியாக இருந்தாலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். பவானிஸ்ரீ மீது வரும் காதலில் அவருடைய காதல் நடிப்பு கூட கவனத்தை ஈர்க்கிறது. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சூரியின் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் தியேட்டர் முழுவதும் கைத்தட்டல் கிடைப்பதே கதையின் நாயகனாக சூரிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் பாராட்டு.

இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதியைத் தேடும் குழுவிற்கு முதல் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனனை விட அவருக்குக் கீழ் சிஓ–வாக பணி புரியும் சேத்தன் தனது கடுகடுப்பை அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார். சூரியைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்று சொல்லுமளவிற்கு அவரது கதாபாத்திரம் உள்ளது.

டிஎஸ்பி ஆக கவுதம் மேனன், அந்தப் பதவிக்குரிய மிடுக்குடன் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கலாம் எனத் தெரிகிறது. சூரியின் ஜோடியாக மலை கிராமத்துப் பெண்ணாக பவானிஸ்ரீ. அந்தப் பார்வையும், தன் பெற்றோரைப் பறிகொடுத்த சோகத்தையும் பற்றிச் சொல்லும் போது கண்கலங்க வைக்கிறார். தலைமைச் செயலாளராக ராஜீவ்மேனன். அந்தப் பதவிக்குரிய அதிகாரத் தோரணையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு இந்த முதல் பாகத்தில் காட்சிகள் குறைவுதான். இடையிடையே வந்து போகிறார். கிளைமாக்சுக்கு முன்பாகக் கொஞ்சமாக வருகிறார். இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள்தான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. படம் முடிந்த பிறகு இரண்டாம் பாகக் காட்சிகள் சிலவற்றைக் காட்டுவதிலிருந்து அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ் சினிமாவில் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. அவருடைய இசைத் திறமை என்னவென்பது பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கறிவார்கள். இந்தப் படத்திற்காக தனி கவனம் செலுத்தி, உலகத் தரம் வாய்ந்த வேறொரு விதமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை படத்துக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறது அவரது பின்னணி இசை. இரண்டு பாடல்களும் அப்படியே மனதோடு கலக்கிறது. தன் காதலியை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்ற சூரி ஓடும் போது இளையராஜாவின் குரலில் வரும் அந்தப் பாடல் உருக வைக்கிறது.

காடு, மேடு, மலை, இரவு, பகல், பனி எனக் கடந்து இயற்கையுடன் ஒன்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி கலை, பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோரின் சண்டைக் காட்சிகள், என மற்ற தொழில்நுட்பக் குழுவினர்களும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள்.

காவல் துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சரியம்தான். படத்தின் ஆரம்ப ரயில் குண்டு வெடிப்புக் காட்சி நீளமாகவும், இடைவேளைக்குப் பின் கொஞ்ச நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

‘விடுதலை’ போராட்டம்…