Home Blog Page 30

வீடியோவை வெளியிட்ட பிரபலம்- என்ன பாருங்க

0

தமிழகத்தில் நேற்று மக்கள் அனைவருமே தங்களது ஜனநாயக கடமையை செய்து முடித்தார்கள்.

ஆனால் விஜய் நேற்று ஓட்டு போட்டது சாதாரண விஷயம் இல்லை, காரணம் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவில் இருந்துள்ளார். அங்கிருந்து ஓட்டு போடுவதற்காகவே சென்னை வந்து தனது கடமையை செய்தார்.

தான் ஓட்டு போட்டு முடித்தவுடன் மக்கள் அனைவரையும் ஓட்டு போடுமாறு பதிவு போட்டார்.சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

ஏற்கெனவே கோட் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி படப்பிடிப்பு தள வீடியோவை தனது இன்ஸ்டாவில் இதுவரை எடுத்ததை மொத்தமாக சேர்த்து வெளியிட்டுள்ளார். இதோ,

https://www.instagram.com/reel/C57z8D1SxaI/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சவால் விட்டு சம்பவம் பண்ணிய இயக்குநர்..!

0

நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாற்றிய படம் என்றால் அது ’அறம்’ என்று கூறலாம். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த அட்டகாசமான கலெக்டர் கேரக்டருக்கு பிறகு தான் அவரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அதன் பிறகு அவர் நடித்த படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ’அறம்’ படத்தை மிகவும் பொறுப்புடனும் சமூக பார்வையுடனும் இயக்குநர் கோபி நாயனார் இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் கோபி நாயனாருக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அறம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய கோபி நயினார், அதன் பின்னர் ஏழு வருடம் கழித்து இயக்கிய திரைப்படம் தான் ’மனுசி’. இந்த படத்தில் நடிக்க முதலில் நயன்தாராவை தான் அவர் அணுகியதாகவும் ஆனால் நயன்தாராவுக்கு இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நயன்தாரா நடிக்க வேண்டிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்தார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் வெளியாகிய வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரெய்லரில் அரசியல் சார்ந்த பல விஷயங்கள், இந்தியா என்ற பெயர் வரும் முன்பே தமிழர்கள் வாழ்ந்த அடையாளம், ஜாதி மதத்தால் இந்தியாவை பிரிக்க செய்த சதி உள்ளிட்ட பல கன்னத்தில் அறையும் படியான வசனங்கள் உள்ளது என்பதும் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படங்கள் வெளியாகாத நிலையில் இந்த படம் நிச்சயம் அவரை முன்னணி நடிகையாக கொண்டு செல்லும் என்றும், இந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் லேடி சூப்பர் ஸ்டார் பட்டமும் இவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே த்ரிஷாவுக்கு லேடி சூப்பர் பட்டத்தை அவருடைய ரசிகர்கள் கொடுத்து வரும் நிலையில் நயன்தாரா அந்த பட்டத்தை தக்க வைப்பாரா? அல்லது த்ரிஷா அல்லது ஆண்ட்ரியாவிடம் இழப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்கியாவுக்கு ஆசையாய் பழனி கொடுத்த கிப்ட்

0

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், டாக்டர் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொல்ல, உண்மையாவே கர்ப்பம் தானா, கொஞ்ச நாள் போனா ரிசல்ட் மாறுமா என கேட்கிறார்.  டாக்டர் உங்க ரெண்டு பேர் முகத்திலையும் சந்தோசம் இல்ல, லேட் கர்ப்பம் என்று யோசிக்கிறிங்களா? முதல் பிள்ளைக்கு என்ன வயசு என கேட்க, இரண்டு பேரும் மாறி மாறி பதில் சொல்லுகிறார்கள்.

இதை தொடர்ந்து காரில் செல்லும் போது செழியனுக்கு பிள்ளை இருக்கு, எழிலும் இன்னும் கொஞ்ச நாளைல பெத்துடுவான், இனியாவுக்கு கல்யாணம் என கோபி பேசிக் கொண்டு வர, ராதிகா அப்போ என்ன பத்தி யோசிக்க மாட்டிங்களா என திட்டுகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் பண்ணி விசாரித்துவிட்டு, கிச்சனுக்கு வருமாறு கோபியை கூப்பிடுகிறார்.

அதன்பின் ராதிகா தன்னை தனது அம்மா வீட்டில் விடுமாறு சொல்லி அங்கு செல்கிறார். அங்கும் அவர் வாந்தி எடுக்க, ராதிகா விஷயத்தை சொல்லுகிறார். இதனால் அவர் சந்தோசப்பட்டு ஜூஸ் கொடுக்கிறார். மேலும் ராதிகா குழப்பமா இருக்கு என்று சொல்ல, உனக்கும் மாப்பிள்ளைக்கும்  இந்த குழந்தை தான் பிடிப்பு. அதனால் சந்தோசமா இரு என சொல்லுகிறார்.

மறுப்பக்கம் ஈஸ்வரி கோபியின் கிச்சனில் இருக்க, அங்கு கோபி வருவதை பார்த்துவிட்டு முடியாதமாதிரி ஆக்சன் போடுகிறார். மேலும் பாக்கியா இதனை நாள் பிசினஸ் பண்ணுற, ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டது இல்லை என சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியாவை பார்க்க பழனிச்சாமி அவரது ரெஸ்டாரண்ட் செல்கிறார். அவருக்கு செல்வி ஸ்னேக்ஸ் கொண்டு போய் கொடுத்து, இதை அக்கா உடனே செய்து உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க என ஏத்தி விடுகிறார்.  அவர் ரசித்து சாப்பிடும் போது அங்கு பாக்கியா வர, அவர்க்கு சில புத்தகங்களை பரிசாக கொடுக்கிறார்.

பாக்கியா உடனே  எவ்வளவு என்று கேட்க, அன்புக்கு விலை பேசாதைங்க என பழனி சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

”மனமே” தெலுங்கு பட டீசர்

0

நம்பிக்கைக்குரிய நடிகர் ஷர்வானந்த் மற்றும் அழகான கிருத்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் தெலுங்கு திரைப்படம் மனமே ஆகும். இளம் திறமையான ஸ்ரீராம் ஆதித்யா இந்த படத்தின் ஹெல்மர், விரைவில் திரையரங்குகளில் அறிமுகமாக உள்ளார்.

கடும் சலசலப்புக்கு மத்தியில் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெருங்களிப்புடைய மற்றும் சுறுசுறுப்பான டீஸர் ஷர்வானந்த் ஒரு விளையாட்டுப் பையனாகவும், கிருத்தி ஷெட்டியை அர்ப்பணிப்புள்ள இளம் பெண்ணாகவும் காட்டுகிறது. ஒரு குழந்தையின் காரணமாக இருவரும் எப்படி ஒன்றாகிறார்கள், பின்னர் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு வெளிப்படுகிறது என்பது வெள்ளித்திரையில் நாம் காண வேண்டிய விஷயங்கள் ஆகும்.

ஒரு புதுயுகக் கதையைக் கொண்டு வந்து நகைச்சுவையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிராம் ஆதித்யா. மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்தாமல் டீசரை சாமர்த்தியமாக வெளியிடடுயள்ளார். விரைவில் வெளியாகவுள்ள தியேட்டர் டிரெய்லருக்காக நம்மை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறார்.

டீசருக்கு இசை மேஜிக் டச் சேர்க்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்யா இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யாவின் மகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சீரத் கபூர், ஆயிஷா கான், வெண்ணேலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ராகுல் ரவீந்திரன், சிவா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டிஜி விஸ்வ பிரசாத் இந்தப் படத்திற்கு நிதியுதவி வழங்குகிறார், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

https://x.com/IamKrithiShetty/status/1781225847451742470

ஜீ தமிழில் ஆட்ட நாயகன்

0

சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்ற ஒரு பெயர் இருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி தட்டிப் பறித்துக் கொண்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த ரெண்டு சேனல்களுக்கும் போட்டியாக ஜீ தமிழில் உள்ள சீரியல்களும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா, சந்தியாராகம், கார்த்திகை தீபம், வீரா மற்றும் இதயம்போன்ற பல சீரியல்கள் மக்களின் ஃபேவரிட் நாடகமாக மாறிவிட்டது. முக்கியமாக சமீபத்தில் வந்த இதயம் சீரியலை தொடர்ந்து மக்கள் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் ஹீரோவாக நடிக்கும் ஆதியின் எதார்த்தமான நடிப்பும், பாரதி மீது வைத்திருக்கும் தீராத காதலும் மக்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பிரமோ வெளி வந்திருக்கிறது.

அதாவது பாரதியும் ஆதியும் ஒன்று சேராமல் தடுப்பதற்காக பாரதியை காயப்படுத்துவதற்கு துரை கருப்பசாமி போல் சூழ்ச்சி பண்ணுகிறார். ஆனால் இதை தெரிந்து கொண்ட ஆதி மேல் உண்மையான கருப்பசாமி வந்து தத்துரூபமாக ஆட்டம் ஆடும் கோலத்தை காட்டி விடுகிறார்.

அத்துடன் தீய எண்ணத்துடன் பாரதியை நெருங்க நினைத்த துரைக்கு கருப்பசாமியாக ஆதி தண்டனை கொடுத்து விடுகிறார். இதன் மூலம் ரத்தினத்தின் வாரிசாக ஆதி நுழைந்து விடுகிறார். இதனை தொடர்ந்து பாரதி செய்த பரிகாரம் அனைத்தும் நல்லபடியாக முடிந்த நிலையில் அடுத்ததாக இவர்களுடைய கல்யாண வேலைகள் மும்மரமாக நடக்கப்போகிறது.

ஆனால் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பல சதி வேலைகள் ஒவ்வொன்றாக வரப்போகிறது. அதையெல்லாம் முறியடித்து ஆதி பாரதியை கரம் பிடிக்க போகிறார். அத்துடன் ஆதி தான் தன்னுடைய அப்பா என்று தமிழ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஒட்டுமொத்த சந்தோசத்துடன் மூன்று பேரும் வாழ போகிறார்கள்.

கமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..

0

இன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நிமிடமே கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவருடைய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் விலகி விட்டதாக அறிக்கை வெளியிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாணவர் அணி தலைவராக இருந்த ஷங்கர் ரவி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கட்சியில் தனக்கு பல பிரச்சனைகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரை கட்சியில் இருக்க முடிவு செய்தேன் என்றும் தேர்தல் முடிவு அடைந்ததை அடுத்து நான் விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சியில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் உள்ளடி வேலைகள் தனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் அதனால்தான் எனது கட்சிப் பணியை நிறுத்துவது முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு பல ஏமாற்றங்கள் இருந்தாலும் கட்சி தலைமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் என்றும் எனக்கு நடந்த பிரச்சனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கட்சி தலைமைக்காக தொடர்ந்து பணியாற்றினேன் என்றும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் சலிப்படைந்து விட்டதால் இப்போது விலகல் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்று பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனாலும் கட்சிக்கு கடைசி நாள் வரை உண்மையாக உழைத்தேன் என்றும் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் என்னை போன்ற இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என்று நம்புகிறேன் என்றும் மக்கள் நீதி மய்யம் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே தனது கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் விலகியதை அடுத்து இப்படி கை விரிச்சிட்டாங்களே என்று கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

https://x.com/ShankarRavi369/status/1781302862380990646

தொகுப்பாளினி ஜாக்குலின் வருத்தம்

0

விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் பல தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி கலக்கப்போவது யாரு, சில விருது விழா நிகழ்ச்சிகளை மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்கி தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் தான் ஜாக்குலின்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி விஜய் டிவி ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரிலும் முக்கிய நாயகியாக நடித்தார்.பின் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜாக்குலின் அதன்பிறகு தொலைக்காட்சி பக்கம் அதிகம் வருவது இல்லை.

தொகுப்பாளினி ஜாக்குலின் அண்மையில் தான் சந்திக்கும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர், என்னை ஒரு லெஸ்பியன் என மோசமாக கமெண்ட் அடித்ததை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டேன். இது இல்லாமல் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்னுடன் தொடர்பு படுத்தி பேசுவது எல்லாம் ரொம்பவே மனதை கஷ்டப்படுத்திவிட்டது.

ரக்ஷனுடன் நான் பழகி வந்ததை வைத்து சில மோசமான வீடியோக்கள் எல்லாம் உருவாக்குகிறார்கள். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுடன் எல்லாம் சேர்த்து வைத்து பேசுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்.

ஆனால் ஒருகட்டத்தில் அப்படி பதிவிடும் நபர்களின் கமெண்ட்டுகளை நான் கண்டுகொள்வது இல்லை, இனி இதுபோல என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என காட்டமாக கூறியுள்ளார்.

 

‘பிரேமலு 2’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

0

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘பிரேமலு’ என்ற திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது ஆனால் அந்த படம் உலகம் முழுவதும் 136 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாள திரை உலகையே ஆச்சரியப்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியாக முழுக்க முழுக்க இருக்கும் என்பதும் சென்டிமென்ட் கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியாக கதை நகரும் என்பதால் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த படத்தை ரசித்து பார்த்தனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் காதலியை விட்டுவிட்டு லண்டன் செல்வது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் அவன் திரும்பி வரும் வரை காத்திருப்பது போன்று நாயகி தனது கண்களால் சொல்லும் காட்சிகள் அம்சமாக இருக்கும் என்பதும் படம் பார்த்தவர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் லண்டன் சென்ற நாயகனுக்கு என்ன ஆச்சு? நாயகன் நாயகி காதல் தொடருமா? லண்டனில் இருந்து நாயகன் திரும்பி வருவாரா? என்பதை எல்லாம் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கலாம்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் படக்குழுவினர் அதை அந்த பொறுப்பை உணர்ந்து நிச்சயமாக இரண்டாம் பாகத்தையும் வெற்றி பாடமாக்கும் வகையில் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://x.com/kollycorner/status/1781334109211791439

‘காதல், சிரிப்பு மற்றும் போர் சூரியா44 அப்டேட்

0

முன்னதாக ஜிகதண்டா டபுள் எக்ஸ் என்ற ஹிட் படத்தைத் தயாரித்த கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மார்ச் மாதம்  வெளியிட்டனர்.

இது கார் விபத்துக்குள்ளானதையும், மரத்தின் வழியாக அம்பு துளைப்பதையும் காட்டுகிறது. “எனது அடுத்த படம் எப்போதும் அருமை சூர்யா சார். இதற்காக உந்தப்பட்டேன்,” என்று கார்த்திக் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்டார்.

இதற்கமைய இப்படத்துக்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று கார்த்திக் சுப்பராஜின் தந்தை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். 

என்னது ரத்னம் ரிலீஸ் நிகழ்ச்சி கேன்சலா?

0

விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருந்த அதே தேதியில் ‘அரண்மனை 4’ படமும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ’அரண்மனை 4’ படம் மே மூன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி சோலோவாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் ‘ரத்னம்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக விஷால் சற்றுமுன் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள் என்பதால் வாக்கு போட்டு முடித்தவுடன் விஷால் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அதில் சில மாற்றம் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த விஷால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்து இருந்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ‘ரத்னம்’ படம் ஏமாற்றமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/VishalKOfficial/status/1781292825558294724