Home Blog Page 26

‘காதல், சிரிப்பு மற்றும் போர் சூரியா44 அப்டேட்

0

முன்னதாக ஜிகதண்டா டபுள் எக்ஸ் என்ற ஹிட் படத்தைத் தயாரித்த கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மார்ச் மாதம்  வெளியிட்டனர்.

இது கார் விபத்துக்குள்ளானதையும், மரத்தின் வழியாக அம்பு துளைப்பதையும் காட்டுகிறது. “எனது அடுத்த படம் எப்போதும் அருமை சூர்யா சார். இதற்காக உந்தப்பட்டேன்,” என்று கார்த்திக் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்டார்.

இதற்கமைய இப்படத்துக்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று கார்த்திக் சுப்பராஜின் தந்தை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். 

என்னது ரத்னம் ரிலீஸ் நிகழ்ச்சி கேன்சலா?

0

விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருந்த அதே தேதியில் ‘அரண்மனை 4’ படமும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ’அரண்மனை 4’ படம் மே மூன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி சோலோவாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் ‘ரத்னம்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக விஷால் சற்றுமுன் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள் என்பதால் வாக்கு போட்டு முடித்தவுடன் விஷால் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அதில் சில மாற்றம் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த விஷால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்து இருந்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ‘ரத்னம்’ படம் ஏமாற்றமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/VishalKOfficial/status/1781292825558294724

ஸ்டார் மெலடி அப்டேட்

0

ஸ்டார் என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இது இளன் எழுதி இயக்கியது, மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் டைட்டில் ரோலில் நடித்துள்ளனர். முதலில், ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அவருக்கு பதிலாக கவின் நியமிக்கப்பட்டார். இப்படம் ஆகஸ்ட் 2023 இல் கவின்ஸ் நெக்ஸ்ட் என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 2023 இல் முதன்மை புகைப்படம் எடுத்தல் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு முக்கியமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்டார் படத்தின் முதல் மேலடி பாடல் நாளை  வெளியிடப்பட்டுள்ளது.

https://x.com/proyuvraaj/status/1781315112021987411

கமல்ஹாசனை திடீரென கழட்டிவிட்ட த்ரிஷா.

0

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில் கமல் ஜோடியாக அவர் நடிப்பதாக தான் இதுவரை செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஏற்கனவே ’மன்மதன் அம்பு’ ’தூங்காவனம்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் த்ரிஷா நடித்திருந்ததால் மீண்டும் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென அவர் ’தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லை என்றும் அந்த படத்தில் தற்போது புதிதாக இணைந்துள்ள சிம்புவுக்கு தான் ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு பதிலாக தான் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது துல்கர் சல்மான் விலகவில்லை என்றாலும் கூட சிம்புவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் அவரது காட்சியும் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அவரும் தனது கேரக்டரை தொடர்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் ’தக்லைஃப்’ படத்தில் புதிதாக இணைந்த சிம்புவுக்கு தான் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு ஆகிய மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சிம்பு ’தக்லைஃப்’ படத்திற்குள் இணைந்ததும் அவருக்கு த்ரிஷா ஜோடி ஆகிவிட்டதை பார்க்கும்போது அப்போ கமல்ஹாசனை அவர் அம்போ என விட்டுவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் மணிரத்னத்தை பொருத்தவரை என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்பதால் ’தக்லைஃப்’ படம் வெளி வந்தால் மட்டுமே கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா? அல்லது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா என்பது தெரியவரும்.

ஏற்கனவே சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது. 14 வருடங்கள் பந்தம் மீண்டும் ’தக்லைஃப்’ படத்தில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பனிச்சாரலில் ஒரு க்யூட் வீடியோ..!

0

நடிகை ஜோதிகா பனிச்சாரல் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும், அவர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஜோதிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் நேபாள நாட்டிற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இமயமலை அடிவாரத்தில் பனிபடர்ந்த இயற்கை எழில் கொஞ்சம் சூழலில் மகிழ்ச்சியாக அவர் இருக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்திருப்பதாவது

சூரிய முதல் குளிர் உறையும் இரவுகள் வரை,
செங்குத்தான மலைகளில் இருந்து வழுக்கும் நீர்வீழ்ச்சி வரை.

சூடான தண்ணீர் குளிர்ந்த தண்ணீர் உள்ள பிளாஸ்க் வரை
சிரிப்பிலிருந்து குழப்பங்கள் வரை,

விளையாட்டுகள் முதல் வெள்ளை பனி புயல் வரை,
இஞ்சி டீ முதல் பூண்டு சூப்கள் வரை,

நாங்கள் வாங்கிய ஓவியங்கள் முதல் அனைத்தையும் ரசித்தோம்.

https://www.instagram.com/reel/C57sHy3sVDS/?utm_source=ig_web_copy_link

மிக அழகிய சூரிய உதயங்கள் முதல் மாயாஜால சூரிய அஸ்தமனம் வரை
அனைத்தும் என் இதயத்தில் எப்போதும் நினைவாக இருக்கும்!

நாங்கள் உண்மையிலேயே ஒரு இமாலய பணியை முறியடித்துள்ளோம்!!!
இனி என் வாழ்க்கையை வாழ்வதில் பெருமை கொள்வேன். இவை அனைத்தையும்

ஏற்பாடு செய்ததற்கு நன்றி,

ஒரு இனிமையான அனுபவத்திற்கு நன்றி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் வெளியானது.

0

தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது இவர் பாலிவுட் திரைபடஙக்ளில் பிஸியாக நடித்து வருகிறார்.

The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்துள்ளார். கடந்த 2018 -ம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படம் இந்தியாவில் தியேட்டரில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் The Wedding Guest திரைப்படம் இன்று நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் Slumdog Millionaire படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தேவ் படேல் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தேயின் நிர்வாண காட்சி காரணமாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது

குஷ்பு வெளியிட்ட புதிய போஸ்டர்..!

0

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்றும் இதே தேதியில் விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்றும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம்.

 

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ’அரண்மனை 4’ படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை வெளியிட்டு அது குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டர் படி ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

’அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு எந்த காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்றாலும் மே 3 என்பது சரியான ரிலீஸ் தேதி என்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார் என்பதும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/khushsundar/status/1781194177168171088

கையில் என்ன ஆச்சு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

0

தளபதி விஜய் சற்றுமுன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவர் கையில் உள்ள காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், ரஷ்யா சென்று இருந்த நிலையில் அவர் ஓட்டு போடுவதற்காக நேற்று ரஷ்யாவில் இருந்து கிளம்பியதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

துபாயில் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விஜய்யின் சென்னை வருகை கேள்விக்குறியாக இருந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்ற நிலையில் அவர் வாக்கு சாவடிக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய்யின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது ரஷ்யாவில் நடந்த ‘கோட்’ படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சியின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிர்ப்தியை ஏற்படுத்திய நடிகர்

0

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலாவது ஆளாகவே தனது வாக்கை பதிவு செய்திருந்தார் நடிகர் அஜித்.

தற்போது இளைய தளபதி விஜய்யையும் சென்னை திரும்பிய நிலையில், தனது வாக்கை பதிவு செய்வதற்காக கிளம்பியுள்ள காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அதேபோல சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், குஷ்பூ, சசிகுமார், கார்த்திக் ,பிரபு, திரிஷா ஆகிய பிரபல நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவு செய்ய சென்ற இடத்தில் அங்கு சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கூச்சாலினால் காதுகளை பொத்திக் கொண்டு சென்ற காணொளி தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

இவ்வாறு அஜித் குமாரை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் அவரின் பெயரை சொல்லி கூச்சலிட்ட நிலையில், அவர் தனது காதுகளை பொத்திக் கொண்டு சென்றுள்ளார்.

அஜித் குமாரின் இந்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே அஜித் குமார் ரசிகர்கள் செல்பி எடுக்கும் போது போனை பறித்து வீசிய சம்பவங்களும் இடம்பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகும் படம்..

ஷாருக் கானின்  அடுத்த முழுக்க முழுக்க ஆக்ஷனரான படமாக இணைந்துள்ளார்.இங்கு தி கிங்கை மகளாக சுஹானா நடிக்கிறார். இப் படம் 200 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகிறது. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 2023 இல் மூன்று உலகளாவிய வெற்றிகளுடன் பிளாக்பஸ்டர் பெற்றார், ஆனால் நடிகர் மெதுவாக இல்லை. நிறைய முன்னும் பின்னுமாக, ஷாருக் தனது அடுத்த படமான தி கிங் படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் அவரது மகள் சுஹானா கான் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.

ஹா ருக் தி கிங்குடன் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் இணைந்திருப்பதாக முன்னர் வதந்தி பரவியது, சுஹானா மைய அரங்கில் அதிக இடத்தைப் பிடித்தார். ஆனால் இன்றைய சூழ்நிலையில், SRK முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்கிரிப்ட் வேலை செய்யப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தி கிங் சுஜோய் கோஷ் இயக்குகிறார், வித்யா பாலன், பட்லா மற்றும் கரீனா கபூர், ஜானே ஜான் ஆகியோருடன் நெட்ஃபிக்ஸ் ஹிட் போன்ற த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றவர். அதிரடி காட்சிகளை ஷாருக்கானின் பதான் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளார்,அவர் “உலகளாவிய அளவிலான நடவடிக்கையை” செயல்படுத்த சிறந்த சர்வதேச அணியை மேற்பார்வையிடவும் ஒன்றிணைக்கவும் பணிபுரிகிறார் என ஆதாரங்கள் மேலும் கூறுகின்றன.

ஒரு பாலிவுட் ஹங்காமா அறிக்கை தி கிங்கின் பட்ஜெட்டாக ரூ. 200 கோடி என்று மேற்கோள் காட்டப்பட்டாலும், படத்திற்கான குழுவின் பார்வையைப் பொறுத்தவரை, ஆக்‌ஷன் அதே அடைப்புக்குறிக்குள் அல்லது அதற்கு மேற்பட்ட பட்ஜெட்டில் விழக்கூடும் என்று ஆதாரம் தெரிவித்துள்ளது. தி கிங் சுஹானாவின் கதாபாத்திரத்திற்கு வழிகாட்டியாக ஷாருக் கானைக் காட்டுவார், மேலும் 1994 ஆம் ஆண்டு பாராட்டப்பட்ட ஆக்‌ஷனர் லியோனின் அதே மண்டலத்தில் அவர் நடிக்கப் போகிறார்.

https://www.instagram.com/p/C4nfhoMIS_x/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

கிங் திரைப்படம் தற்போது ப்ரீ புரொடக்‌ஷனில் உள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 இல் திரைக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுஹானா கான் கடந்த ஆண்டு The Archies திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.