Home Blog Page 27

என் கடமைய நான் செஞ்சுட்டேன்

0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து கொண்டிருக்கிறது. வெயில் காலம் என்பதால் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்குப்பதிவு துவங்கியதுமே வந்து வாக்களித்தார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், தனுஷ், பிரபு, சிவகார்த்திகேயன், குஷ்பு, சுந்தர் சி, சசிகுமார் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்துவிட்டார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதீப் ஆண்டனியும் காலையிலேயே வாக்களித்துவிட்டார்

தான் வாக்களித்த பள்ளிக்கு முன்பு நின்று செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதீப் ஆண்டனி கூறியிருப்பதாவது,

https://x.com/TheDhaadiBoy/status/1781166237109895189

என் கடமைய நான் செஞ்சுட்டேன். உங்க கடமையா, எங்கள செய்யாம இருங்க. பார்த்து செய்யுங்க என தெரிவித்துள்ளார்.

ஒரு அழகான மெலடி உங்கள் வழியில் வருகிறது..

0

ஸ்டார் என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இது இளன் எழுதி இயக்கியது, மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் டைட்டில் ரோலில் நடித்துள்ளனர். முதலில், ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அவருக்கு பதிலாக கவின் நியமிக்கப்பட்டார். இப்படம் ஆகஸ்ட் 2023 இல் கவின்ஸ் நெக்ஸ்ட் என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 2023 இல் முதன்மை புகைப்படம் எடுத்தல் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு முக்கியமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

இப் படம் எதிர் வரும் மே 10ம் திகதி வெளிவரவுள்ள நிலையில்,இப்படத்தின் ஒரு அழகான மெலடி பாடல் இன்று மாலை 7 மணிக்கு  வெளியிடப்படவுள்ளது. 

https://x.com/SonyMusicSouth/status/1781196893265305888

முக்கிய தேர்தல்,பிரபலங்கள் வாக்களிப்பு

0

யார் எப்படி எந்த வேலையில் இருந்தாலும் மக்கள் அனைவருமே இன்று முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் வாக்களிப்பது தான். நாட்டில் பிறந்த அனைவரும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம்.

காலை முதலே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எல்லா இடங்களிலும் தேர்தல் சமூகமாக நடந்து வருகிறது.

பிரபலங்களிலும் அஜித், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் என பலரும் வாக்களித்து வருகிறார். இதோ ஓட்டு போட வந்து பிரபலங்களின் புகைப்படங்கள்,

ஜோ ரியோவின் அடுத்த படைபுக்கான அப்டேட்

0

ரியோ ராஜ் ஒரு இந்திய நடிகர் மற்றும் வீடியோ ஜாக்கி ஆவார், இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தோன்றியுள்ளார். பெரும்பாலும் ஸ்டார் விஜய் மற்றும் சன் மியூசிக் நெட்வொர்க்கின் நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறார்.தமிழ் சினிமாவில் பணிபுரியும் முன், “தொலைக்காட்சி 2020 இல் விரும்பத்தக்க மனிதர்”என அவர் சென்னை டைம்ஸால் பட்டியலிடப்பட்டார்.

ரியோ ராஜ் ஸ்டார் விஜய்யின் 2013 தொலைக்காட்சி நாடகமான கானா காணும் காலங்கள் கல்லூரி சாலையில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் சன் மியூசிக் உடன் வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார், காலூரிகாலம், சுதா சுதா சென்னை மற்றும் இலவச ஆ விடு போன்ற பகல் நேர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் 2016 மற்றும் 2018 க்கு இடையில் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தின் மூன்றாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஸ்டார் விஜய்க்கு திரும்பினார்.

சத்ரியன் (2017) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா (2019) என்ற நகைச்சுவை படத்தின் மூலம் ராஜ் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஒரு விமர்சகர் அவர் “கண்ணியமான அறிமுகம்” என்று குறிப்பிட்டார். அவரது அடுத்த படமான பிளான் பண்ணி பண்ணனும், மற்றொரு நகைச்சுவை நாடகம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமானது. அக்டோபர் 2020 இல், அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் பங்கேற்று நல்ல வரவேற்பை பெற்றார்.

கடந்த வருடம் ஜோ படத்திம் அபார வெற்றியை கண்டது. ரியோ ராஜின் அடுத்த படத்தில் பாரதிராஜா, நட்டி, சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.இப் படத்தின் பஸ்ட் லுக் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு பையன்….

0

விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரேஷ்மாவிடம், நீங்கள் வாழ்க்கையில் மனது உடைந்து அழுத நாள் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ஒரு நாள் கர்ப்பமாக இருக்கும் போது என்னுடைய முன்னாள் கணவர் அடித்துவிட்டார். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்து குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. அப்போது நானே கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனை வரை சென்றேன். என் மகன் ரகுல் பிறந்து 9 மாதம் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான்.

அதன் பின் இந்த போராட்டத்தை என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை, இந்தியாவுக்கு வந்துவிட்டேன். என் மகனுக்குகாக பல மருத்துவமனைகளை பார்த்து சரி செய்திருக்கிறேன்.

அந்த ரிலேஷன்ஷிப்பிற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான். அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே மாதிரி இவனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு படம் தான்.. ரூ.100 கோடி வசூல்.

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய நிலையில் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த ’டான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனை அடுத்து அவர் ரஜினி படத்தை இயக்கப் போவதாகவும், தனுஷ் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் தற்போது அவர் தனக்காக ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரே ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கி பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ள இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அஜித்த வெளிய வர சொல்லுங்க..!

0

தமிழகத்தில் இன்றைய தினம் பரபரப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தமது கடமையை சரிவர செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அஜித் முதன் முதலாக தனது வாக்கை  பதிவு செய்துள்ளார். அதன் பின்பு சிவகார்த்திகேயன், குஷ்பூ குடும்பம், ரஜினி, ராதிகா சரத்குமார், கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் என பலரும் வாக்கு பதிவுகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தை வாக்குப்பதிவு செய்வதற்காக முதன்முதலிலே உள்ளே அனுப்பியது தவறு என முதியவர் ஒருவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். தற்போது குறித்த காணொளி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது நடிகர் அஜித் எப்போதுமே வரிசையில் என்று வாக்கு  செலுத்துவது வழக்கம். அதன்படி இம்முறையும் திருவான்மையூரில் உள்ள அஜித் அங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலையிலேயே வந்து சில நிமிடங்கள் காத்திருந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றுள்ளார். தான் வாக்கு செலுத்திய பின் தனது மை வைத்த விரலைக் காட்டி ரசிகர்களையும் ஓட்டு போட சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இவ்வாறான நிலையில் வாக்குச்சாவடி மையத்திற்கு அதிகாரிகள் வந்ததும் முதல் ஆளாக நடிகர் அஜித்தை உள்ளே அனுப்பி உள்ளனர். இதை பார்த்து கோவம் அடைந்த முதியவர் ஒருவர் நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்க நீங்கள் எப்படி அஜித்தை முதலில் உள்ளே அனுப்பலாம்? அவரை வெளியே வர சொல்லுங்க என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். தற்போது குறித்த காணொளி சமூக வலைதளங்கள் வைரலாகி வருகின்றன.

 

அரண்மனை 4 ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

0

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார்.

இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.

இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

ஜீ தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டீவி பிரபலம்

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சீதாராம் சீரியல். இந்த சீரியலை மேலும்  விறுவிறுப்பாக்க பிரபல காமெடி நடிகை ஒருவர் அதிரடியாக என்ட்ரி ஆகியுள்ளார்.

சீதாராம் சீரியலில் தற்போது ராமின் தங்கச்சி அஞ்சலி, யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறார். அவருடன் சேர்ந்து அவரை அழைத்துச் சென்ற சீதாவும் பழியையும் ஏற்று, குடும்பத்தை எதிர்த்து நிற்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த அஞ்சலியையும் அவரது கணவரையும் வாசலில் நிற்க வைத்து கிழித்து தொங்க விட்டார் மகாலட்சுமி. அது மட்டும் இன்றி அஞ்சலி இனி சேதுவுக்கு மகள் இல்லை என கூறி அதிரடி காட்டி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சீதாராம் சீரியலை மேலும் விறுவிறுப்பாக பிரபல சீரியல் நடிகை தீபா இது சீரியலில் அன்புக்கு அம்மாவாக என்ட்ரி ஆகி உள்ளார்.

அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில் மகாலட்சுமி வீட்டுக்கு வந்த அன்புவின் அம்மா, அவர்கள் எல்லாரையும் விரட்டியதோடு மட்டுமில்லாமல் அன்புவையும் அஞ்சலியையும் பிரித்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என மிரட்டி உள்ளார். எனவே இனி இந்த  சீரியல் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

இதேவேளை, நடிகை தீபா விஜய் டிவி சீரியல்கள் நடித்து உள்ளதோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் டி20 அணியில் இடம்பிடித்தார்…

0

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது.