Home Blog Page 32

விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ

0

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளன.

இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி வைத்து தனது ஒட்டுமொத்த கெட்டப்பையே மாற்றி நடித்திருக்கிறார் விக்ரம். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன.

இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகவும் ரிஸ்க் எடுத்து விக்ரம் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.

 

கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி

0

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, லால் சலாம் படத்தை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கி இருக்கிறார்.

சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி சென்று வரும் ஐஸ்வர்யா ரஜினி, வெறித்தனமான ஒர்க் அவுட்டிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி இருவரும் விவாகரத்து சம்பந்தமாக குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல்

0

தனது 50 வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ள தனுஷ், அதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மும்பையில் உள்ள தாராவியில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தெலுங்கு தயாரிப்பாளர் நரேந்திரா என்பவர் தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் குபேரா என்ற டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இந்த குபேரா டைட்டிலை மாற்றாவிட்டால் தனுஷ் – சேகர் கம்முலா படக்குழு மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

4 தமிழ் இயக்குநர்களை தூக்கிட்டு வரச்சொன்ன பாலகிருஷ்ணா..

0

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 4 தமிழ் இயக்குநர்களை தூக்கி வரச் சொல்லி கதை கேட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் நடித்து சலித்து போய்விட்ட நிலையில் இனி அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழில் வெற்றி படங்கள் கொடுத்த 4 இயக்குநர்களை சந்தித்து பாலகிருஷ்ணா கதை கேட்டுள்ளதாகவும் இந்த நான்கு கதைகளில் ஒரு கதையை அவர் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா படம் என்றாலே ஓவர் ஹைப் இருக்கும் என்பதும் பில்டப் பயங்கரமாக இருக்கும் என்பதும் தெரிந்தது. அவர் கேட்டபடி கதை தயார் செய்து தமிழ் இயக்குநர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கும் நிலையில் இந்த 4 இயக்குநர்களில் ஒருவர் ஹரி என்ற தகவல் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் 10 படங்கள் இயக்கினால் கூட கிடைக்காத சம்பளத்தை ஒரே படத்தில் தருவதற்கு பாலகிருஷ்ணா ஒப்பு கொண்டிருப்பதால், பாலகிருஷ்ணா படத்தை இயக்குவதற்கு தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருவதாக புறப்படுகிறது.

எனவே பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை இயக்குவது தமிழ் இயக்குநர் தான் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக இயக்குனர் ஹரியிடம் கதை கேட்டு சில திருத்தங்களை பாலகிருஷ்ணா சொல்லி இருப்பதாகவும் அந்த திருத்தங்கள் பாலகிருஷ்ணாவிற்கு பிடித்து விட்டால் அவர்தான் அடுத்த படத்தின் இயக்குநர் என்றும் கூறப்படுகிறது.

நொந்து நூலாகி போன விஜய் தேவரகொண்டா.!

0

அடுத்தடுத்து மூன்று தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டா தனது தோல்விக்கு சமந்தா மற்றும் ராஷ்மிகா தான் காரணம் என்று முடிவு செய்து இனிமேல் சமந்தாவும் வேண்டாம் ராஷ்மிகாவும் வேண்டாம் என்று அதிரடி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வந்து கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா ’கீதா கோவிந்தம்’ ’நோட்டா’ ’டாக்சி வாலா’ ’டியர் காம்ரேட் ’உள்ளிட்ட தொடர் ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ’லைகர்’ ’குஷி தி’ ’தி ஃபேமிலி ஸ்டார்’ ஆகிய மூன்று படங்கள் சமீபத்தில் வெளியாகி மூன்றுமே படுதோல்வி அடைந்ததை அடுத்து விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடைசியாக வெளிவந்த ’குஷி’ மற்றும் ’தி ஃபேமிலி ஸ்டார்’ படங்களின் தோல்விக்கு காரணம் அந்த படங்களின்  கதை, திரைக்கதை சரியில்லை என்பதை உணராத விஜய் தேவரகொண்டா, தன்னுடன் நடித்த சமந்தா மற்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதல் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. எனவே இனிமேல் சமந்தாவுடன் படம் நடிப்பதில்லை என்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதலையும் பிரேக் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

இனி முழுக்க முழுக்க தீவிரமாக கதையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் குறிப்பாக ரொமான்ஸ் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா இனி அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதை அம்சத்துடன் புதிய இயக்குனர்களுடன் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியம் வைத்த ஆப்பு.. இனிமேல் தான் மீனா ஆட்டத்தை பார்ப்பிங்க..!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்து சாப்பிடும் போது மீனா கேட்ட ஒரு கேள்வியால் அதிர்ச்சி அடையும் தங்கமயில் அம்மா பாக்கியம், மீனாவை வெறுப்பேற்றும் வகையில் மறு கேள்வி கேட்க, அப்போது மீனா வில்லி போல் பார்ப்பது உடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது. இதையடுத்து மீனாவின் ஆட்டத்தை இனிமேல் தான் பார்ப்பீங்க என்பது போல் அடுத்து கதை நகரும் என்று தெரிகிறது.
இன்றைய எபிசோடில் ஒரு வழியாக இரு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்ய தட்டை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு தங்க மயிலுக்கு சரவணனும், சரவணனுக்கு தங்க மயிலும் மோதிரம் அணிந்தனர். இதனை அடுத்து திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு அதன் பின் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறார்கள்.
சாப்பிடும் போது மீனா, தங்கமயில் அம்மா பாக்கியத்திடம் உறவுக்காரர்களை தான் அழைக்கவில்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து இருக்கலாமே என்று கேட்க, பக்கத்து வீட்டில் எல்லோரிடத்திலும் சண்டை என்பதை சொல்ல முடியாமல் பாக்கியம் மற்றும் அவரது கணவர் சமாளிக்கின்றனர்.
இந்த நிலையில் முடிஞ்சு போன விஷயத்தை கிளறுகிறாயா என்று மனதிற்கு ஆவேசமான பாக்கியம் என்கிட்டேயே ஏழரை கூட்டுறியா, உன்னை என்ன செய்றேன் பார் என்று முடிவு செய்து மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் ஓடிப்போய் தானே கல்யாணம் செய்து கொண்டார்கள், நகை எதுவும் போட்டுக் கொண்டு வரவில்லையே என்று கூறி தனது மகள் மட்டும்தான் முறையாக கல்யாணம் செய்து வரும் மருமகள் என்றும் நகை போட்டு கல்யாணம் செய்யும் மருமகள் என்றும் குத்திக்காட்டி பேசினார்.
இந்த பேச்சு மீனா மற்றும் ராஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாண்டியன், கோமதி மற்றும் அனைவரும் அதை சமாளிக்க பேச்சை மாற்றுகின்றனர். தன்னை மற்றவர்கள் மத்தியில் அவமானப்படுத்தி விட்டதாக கருதும் மீனா, பாக்கியத்தை வில்லி போல் பார்க்கும் நிலையில், இனி தான் மீனா தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாக்கியம் குடும்பத்தாரை சந்தேகப்படும் மீனா அடுத்ததாக என்ன செய்வார் என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

ஒரு வேல இருக்குமோ????

0

பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை ‘டேவிட்’ என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

இந்த தொடரின் கதை என்ற இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

தற்போது இத் தொடரில் அமிர்தாவை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு பாட்டி கட்டாயப்படுத்திக் கொண்டு உள்ளார்.இந் நிலையில் நாளைய பகுதியில் ராதிகா வாந்தி எடுப்பதாக காட்டப்படுகிறது. இது கர்பமாக இருந்தால் வீட்டில் நடக்கபோகும் கலபரதை்தை எதிர் நோக்கி காத்திருப்போம்

மீண்டும் கதாநாயகன் வேடத்தில் கலக்கும் மோகன்

0

‘மூடுபனி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த ‘மெளன ராகம்’ படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

தற்போது விஜய்யின் ‘கோட்’ படத்தில் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது ‘ஹரா’ என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ் , ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.

‘ஹரா’ படத்தின் ‘டீசர்’ வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் மோகன் ராஜ் பேசியபோது “இது நாங்கள் தயாரிக்கும் 2- வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது. இந்த படம் மீண்டும் மோகனுக்கு வெற்றியை பெற்று தரும்

இப்படத்தில் 93 வயது சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் தாதா வேடத்தில் அவர் நடித்துள்ளார்” என்றார்

 

 

 

 

நூலிழையில் உயிர் தப்பிய ‘கயல்’ சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நாயகி ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்டது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

’கயல்’ சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாகவும், அப்போது போரூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மெட்ரோ கட்டுமான பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை தனது காரின் மேல் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் மிகவும் ஆபத்தானதாக இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக தனக்கு காயம் இல்லை என்றாலும் சிமெண்ட் கலவை தனது காரில் ஒட்டிக் கொண்டதால் அதற்கு அதிகமாக செலவானதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடைய தவறு எதுவுமே இல்லாமல் நான் எனது விலையுயர்ந்த காருக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து தனக்கு கவலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ பணிகள் எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும் இதில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கும் வகையில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் அங்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் காரில் சென்றதால் எனக்கு ஆபத்து இல்லை, ஆனால் இதுவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும், பலத்த காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்த அலட்சியத்திற்கு பொறுப்பேற்பது யார் என கேள்வி எழுப்பி உள்ள சைத்ரா ரெட்டி பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்ததாரர்கள் செயல்பட வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/C5okX_6Btge/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

5 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த இன்னொரு மலையாள படம்..

0

ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ் திரை உலகினர் ஏக்கத்துடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது என்பதும், அதனை அடுத்து வெளியான ’பிரேமலு’ ‘ஆடுஜீவிதம்’ ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஆவேஷம்’ என்ற திரைப்படம் 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்லூரியில் புதிதாக சேர்ந்த மூன்று மாணவர்கள், சீனியர் மாணவர்களால் ராக்கிங் செய்யப்படுகிறார்கள். இதனால் அவர்கள் லோக்கல் ரவுடியான பகத் பாசிலிடம் பழகி அவருடைய அன்பை பெறுகிறார்கள். ரவுடி பகத் பாசில் மூலம் தங்களை ராக்கிங் செய்த சீனியர்களை பழிவாங்க நினைக்கும் நிலையில் இதனால் மாணவர்களின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

மிகவும் ஜாலியாக காமெடியாக இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ’ஆவேஷம்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள படங்கள் அடுத்தடுத்து 50 கோடி, 100 கோடி, 200 கோடி ரூபாய் என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய வெற்றியை இந்த ஆண்டு பெறவில்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும்