Home Blog Page 33

பண்றது எல்லாம் மொள்ளமாரித்தனம்..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் எபிசோடு பார்க்கும்போது அடுத்த நாளைய எபிசோடை எதிர்பார்த்து காத்திருக்கும் அளவுக்கு ரசிகர்களை சீரியல் குழுவினர் வைத்திருக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

தற்போது மனோஜ் எப்படியும் கனடா போய் சேர வேண்டும் என்றும், வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் அவருக்கு பணம் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் காட்சியையும், அதன் பிறகு முத்து, மீனா அவரை வீட்டுக்கு அழைத்து வந்த காட்சியையும் பார்த்தோம். இந்த நிலையில் ரவி, ஸ்ருதி ஆகியோர் மீண்டும் வீடு திரும்ப உள்ளனர் என்ற நல்ல விஷயமும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தினசரி சில ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் ஒரு புதிய ரிலீஸ் வீடியோவை செய்துள்ளார். அதில் ’பண்றது எல்லாம் மொள்ளமாரித்தனம், ஆனா மூஞ்சியை மட்டும் காலண்டரில் வரும் முருகன் போட்டோவுல சிரிக்கிற மாதிரியே வச்சிருக்கியே என்ற சந்தானம் வசனத்தின் பின்னணியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வீடியோ, மலையாள சீரியல் படப்பிடிப்பின்போது எடுத்த நிலையில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கட்டி வந்த அதே சேலையை தான் இப்போதும் கட்டியுள்ளார் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர். சீரியல் தான் ரீமேக் என்றால் காஸ்ட்யூம் கூட அதே தானா? என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C50s7RnRpMw/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

’மிஸ்டர் மனைவி’ அஞ்சலி இனி இவர்தான்..!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் ஷபானா நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஷபானாவுக்கு பதில் இந்த சீரியலில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று ’மிஸ்டர் மனைவி’ என்பதும் இதில் ஷபானா, அஞ்சலிதேவி கேரக்டரிலும் பவன் ரவீந்தரா, விக்னேஷ்வர் கேரக்டரில் நடித்து வந்தார்கள் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த இந்த சீரியல் ஒரு வருடத்தை கடந்து விட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென ஷபானா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுகிறேன் என்ற காரணத்தை ஷபானா கூறவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுகிறேன் என்றும் அஞ்சலி கேரக்டரில் நான் நடிக்காமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் இருப்பினும் இந்த கேரக்டரில் நடிக்க வரும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ’மிஸ்டர் மனைவி’ அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருப்பது தேப்ஜானி என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான ’ராசாத்தி’ என்ற சீரியலில் பாவனி ரெட்டிக்கு பதிலாக நடித்தவர் என்பதும் தற்போது ’மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் இவருக்கு பதில் இவர் என்று ஷபானாவுக்கு பதிலாக தேப்ஜானி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டரில் காட்சிகள் ரத்து..

0

தமிழ்நாட்டில் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருவது சினிமா தியேட்டர்கள் தான்.

தற்போது தியேட்டரில் ஒரு நாள் மட்டும் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த தேதியில் மட்டும் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இரவு காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமாவில் வருவார் என்று எதிர்பார்த்தால் அரசியலுக்கு வந்துட்டாரே..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்தால் திடீரென அவர் அரசியலுக்கு குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் அசீம் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு டைட்டில் பட்டம் கொடுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

சீரியல் நடிகரான அசீம் ’மாயா’ என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பிரிவோம் சந்திப்போம்’ ’தெய்வம் தந்த வீடு’ ’பிரியமானவளே’ ’பகல் நிலவு’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’பூவே உனக்காக’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்ட அவருக்கு டைட்டில் பட்டம் அவர் கையாலே கிடைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில படங்களில் கூட அவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் அரசியலில் குதித்துள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ள அசீம் தனது நண்பர் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அசீம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘என்னுடைய அப்பா, தாத்தா எல்லாம் திமுக ஆதரவாளர்கள் தான், நானும் திமுக ஆதரவாளராக தான் இருந்தேன், ஆனால் சமீபத்தில் சீமானின் அரசியல் எனக்கு பிடித்தது, அதனால் அவருடைய கட்சியில் இணைந்தேன் என்று கூறியுள்ளார்.

அடுத்தது அரசியல்வாதியா? சினிமா வாழ்க்கையா? என்று கேட்ட கேள்விக்கு ’எதையும் நான் திட்டமிடுவதில்லை, முதலில் தொகுப்பாளராக தான் டிவிக்கு வந்தேன், அதன் பிறகு சீரியல் நடிகரானேன், பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் அதில் கலந்து கொண்டேன், டைட்டில் பட்டமும் கிடைத்தது, காலம் என்ன தருகிறதோ அதை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய அடுத்த நகர்வு சினிமாவா? அல்லது அரசியலா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் 2026 வரும் போது என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

நாளை ஒரு ஆச்சரிய அறிவிப்பு….

0

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் ’சித்தா’ அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சியான் 62’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படத்தில் எஸ் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஷிபு தமீன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது எடிட்டராக பிரசன்னா பணிபுரிய இருப்பதாகவும் சி எஸ் பாலச்சந்தர் என்பவர் கலை இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று குறிப்பாக டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை நிச்சயம் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C50qFjlhqvg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://x.com/hr_pictures/status/1780121509853331574

ரிலீசுக்கு தயாரான வரலட்சுமி சரத்குமாரின் திரைப்படம்

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

நயன்தாராவின் அடுத்த படம்.. ரிலீஸ் எப்போது?

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ’ஜவான்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் அதன் பிறகு இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆண்டு வெளியாகும் நயன்தாராவின் முதல் படமாக ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ இருக்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிச்சது ஒரே படம் தான்.. அந்த படத்தின் இரண்டாம் பாகமா?

0

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘லெஜண்ட்’ சரவணன், ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விவேக் ,யோகி பாபு, சுமன், நாசர், விஜயகுமார், லதா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லெஜண்ட்’. இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரமாண்டமாக ‘லெஜண்ட்’ சரவணன் தயாரித்திருந்த நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ‘லெஜண்ட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘லெஜண்ட் 2’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்படும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை முற்றிலும் காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் 90 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்த திட்டமிட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

’கனா காணும் காலங்கள் 3’.. தரமான அப்டேட் வந்துருச்சு..

0

’கனா காணும் காலங்கள்’ இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சீசன் 3 வெளியாகும் என்று கூறப்பட்டது. முதல் இரண்டு சீசன்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மூன்றாவது சீசனும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இதற்கான  பூஜை நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’கனா காணும் காலங்கள் ’முதல் சீசன் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இரண்டாவது சீசன் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு முடிந்தது என்பது தெரிந்தது. முதல்  சீசன் பத்தாவது வரை படிக்கும் மாணவ மாணவிகளின் கனவுகள், நிகழ்வுகள் இரண்டாவது சீசனில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவ மாணவிகளின் அனுபவங்களாக இருந்தது என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் அதே மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும்? அவர்களது புதுமையான அனுபவம் எப்படி? காதல் அனுபவம் எப்படி? என்பது குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’கனா காணும் காலங்கள் 3’ பூஜை தற்போது முடிந்துள்ளதாக அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எனவே ’கனா காணும் காலங்கள்’ சீசன் 3 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் மாதம் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் ’கனா காணும் காலங்கள் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு சீசன்களில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மூன்றாவது சீசனிலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனின் தரமான அப்டேட் வந்ததை எடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த புகைப்படத்தை ஷேர் செய்த மௌன ராகம் 2 சீரியல் ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது, அதில் ஒரு தொடர் தான் மௌன ராகம்.

முதல் பாகத்தில் அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகியது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்த 2021ம் ஆண்டு 2ம் பாகமும் புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

2ம் பாகத்தில் ரவீனா, ஷில்பா, சல்மானுன் பாரிஸ், ராகுல் என பலர் நடித்தனர். இதில் சக்தி-வருண் மற்றும் ஸ்ருதி-தருண் ஜோடி மக்களிடம் மிகவும் பிரபலமானார்கள்.

இரண்டாம் பாகம் கடந்த வருடம் முடிவுக்கு வர அதில் நடித்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரீஸுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் படு ரொமான்டிக்காக, மணமகன் – மணமகள் கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/C5yMXshylr_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==